Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், தேரர்களால் குறிவைக்கப்படுகிறது” - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், தேரர்களால் குறிவைக்கப்படுகிறது”

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிப்  பகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதென்பது என்னைப்பொறுத்தமட்டிலே சாலச்சிறந்ததாக இருக்காது.

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற சூழல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது. இவ்வாறு குறிவைக்கப்படுகின்ற சூழலிலே நாங்கள் இந்த விடயத்தினை செய்வோமாக இருந்தால் நாடாளுமன்றத்திலே கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அற்று போவதாக இருக்கும்.

சர்வதேசத்திடம் உரிமையோடு கேட்கும் விடயங்கள் அனைத்தும் கேட்க முடியாத சூழல் உருவாகும். பகிஷ்கரிக்கின்ற விடயத்திலே மீள் பரிசீலனை செய்யலாம். ஆனால் நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற சூழலிலே தட்டிக்கேட்கின்ற , நிறுத்துகின்ற வழிகளை கையாளுகின்ற ஒரு சூழல் சாத்தியமற்றது என்பது என்னுடைய கருத்து” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/முல்லைத்தீவு-மாவட்டம்-தெ/

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மட்டுமல்ல கனடாவும் குறிவைக்கப் படுகிறது...மனோகணேசனின் வருகையுடன் ஆரம்பித்தது...இப்ப இராசாங்க அமைச்சர் வருகை எங்கையோ உதைக்குது...சாமீ

கனடாவில் தமிழ் அழகியாக மகுடம் சூட்டப்பட்ட மலையகப் பெண்! (படங்கள்)

 

விளம்பரம்
 

கனடாவில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

கனடா நாட்டில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி கனடா டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காபுரோ மகாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சசிகலா நரேந்திரா ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடைபெற்றது.

 

 

 

பிரதம அதிதி

 

குறித்த தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

கனடாவில் தமிழ் அழகியாக மகுடம் சூட்டப்பட்ட மலையகப் பெண்! (படங்கள்) | 2023 Miss Tamil Universe Winner Sri Lankan Girl

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார்.

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் , இந்த அடைக்கலத்துக்கு இப்பதான் தெரியுதாக்கும். அவர்கள மணலாறை வெலிஓயாவாக பெயர் மாற்றும் முன்பே இதை அறிந்திருந்தோம். முல்லைத்தீவு மட்டுமில்லை வடக்கு கிழக்கு முழுவதுமே அவர்களது இலக்குதான். கடந்த வாரம் மன்னார் மடுவில் பெரிய விழா வைத்து சிங்கள பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட்து. அதில் இந்த அடைக்கலம் கலந்து கொண்டாரா அல்லது அது அவருக்கு தெரியுமா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இதெல்லாம் சொல்வதட்கு எங்களுக்கு இப்படியான ஆட்கள் தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தூஷணப்பிக்கர் துடைப்பக்கட்டைகளுடன் மீண்டும் களத்தில் அட்டகாசம்! இவரில் ஒரு குணம்; எங்கேயாவது எதில் மீதாவது ஏறிநின்றே தன் எதிர்ப்பைக்காட்டுவார். இப்போ எதற்காக துடைப்பத்தை தூக்கினாரென தெரியவில்லை? சாணக்கியனை வம்புக்கிழுத்து அதனால் சாத்த போகிறார் போலிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.