Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தால் வெள்ளியன்று அனுஷ்டிக்க முஸ்தீபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

07 OCT, 2023 | 07:41 PM
image
 

ஆர்.ராம்

சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும், நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று கூடி கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகிய ஏழு கட்சிகளே இந்தக் ஹர்த்தாலுக்கான பகிரங்கமான அழைப்பினை விடுத்துள்ளன. 

குறித்த கட்சிகளின் தலைவர்களான, மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, மற்றும் ஏனைய கட்சியின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் ஒன்றுகூடிய நிலையில் நீண்ட கலந்துரையாடலை அடுத்து வட,கிழக்குத் தழுவிய ஹர்த்தாலுக்கான தீர்மானம் ஏகோபித்து எடுக்கப்பட்டது.

முஸ்லிம் தரப்புக்களின் ஆதரவுக்கான பேச்சு

குறித்த கட்சிகள் மேற்படி தீர்மானத்தினை எடுப்பதற்கு முன்னதாக, வடக்கு,கிழக்கினை மையப்படுத்திய ஹர்த்தால் வெற்றியடைவதாக இருந்தால் அதற்கு முஸ்லிம் தரப்புக்களின் ஆதரவு பெறப்பட வேண்டும் என்ற விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டது. 

அதற்கு அமைவாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவினைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டிருந்தார்.

அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடரும் ஆதரவு கோரிக்கைகள்

இந்நிலையில், ஏழு தமிழ்க் கட்சிகளின் பிரதிகளும் ஹர்த்தாலுக்கான முழுமையான ஆதரவினை திரட்டுவதற்காக வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் நேரடியாகச் சந்திப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர். 

இந்நிலையில், யாழ்.வணிகர் சங்கத்துடனான சந்திப்பு நேற்றைதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றிருக்காத நிலையில் ஏனைய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். 

இச்சந்திப்பில் அண்மைக்காலங்களில் தமிழ் மக்களை இலக்குவைத்து அரசாங்கத்தின் பல்வேறு தரப்புக்களாலும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டதோடு, ஈற்றில் பூரண ஹர்த்தாலுக்கான முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அச்சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அடுத்துவரும் நாட்களில் ஏனைய தரப்புக்களுடான தொடர் சந்திப்புக்களில் ஈடுபடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பொதுமக்களிடத்திலும் முழுமையான ஒத்துழைப்புக்களை கோருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உத்தியோக பூர்வ அறிவிப்பு இல்லை

வட,கிழக்கு தழுவிய முழுமையான ஹர்த்தாலுக்கு இப்போது இணக்கம் காணப்பட்டுள்ளபோதும் அதனை அனுஷ்டிப்பதற்கான தினம் இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

எவ்வாறாயினும், எதிர்வரும் வாரத்தின் புதன்கிழமை, அல்லது வெள்ளிக்கிழமை ஆகியே இரு தினங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், நேற்றையதினம், மு.கா.தலைவர் ஹக்கீம் மற்றும் விக்னேஸ்வரன் இடையேயான தொலைபேசி உரையாடலின்போது வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை முன்னெடுப்பது பொருத்தமானது என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமையே வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு முஸ்தீபுச் செய்யப்படுவதாக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/166333

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சுரேஸருக்குப் பக்கத்தில நிக்கிறவர் பொம்மை வெளியில ஆற்றையோ காணியை ஆட்டையைப்போட்டவரை உள்ளுக்குள்ள தள்ள அவரை வெளிய எடுக்கிறன் எனப் புறப்பட்ட டெலோ தலைவர் சிறீகாந்தா.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் 20ஆம் திகதி ஹர்த்தால்

adminOctober 9, 2023
20231009_170218.jpg?fit=1170%2C659&ssl=1

 

 

 

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி  ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.  இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
 

https://globaltamilnews.net/2023/195906/

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

IMG-4699.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் முஸ்லிம் தரப்பின் ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு

Published By: DIGITAL DESK 3

10 OCT, 2023 | 09:03 AM
image

ஆர்.ராம்

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன.

வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (09)  யாழ்.தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு ஏகோபித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது 

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் தியாகராஜா நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் ஆரம்பத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுவதற்கு முஸ்தீபுச் செய்யப்பட்ட ஹர்த்தாலை பிற்போட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவிருப்பதால் அதற்கு இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது என்ற விடயத்தில் பங்கேற்பாளர்கள் கரிசனைகளைச் செலுத்தினார்கள். 

அத்துடன், வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்படுகின்றபோது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தரப்புக்களின் நிலைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

இதனையடுத்து,  முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்தவேண்டும், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றமை முடிவுக்க கொண்டுவர வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி ஈற்றில் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரணமான ஹர்த்தாலை முன்னெடுப்பதென ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/166515

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.