Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

12 OCT, 2023 | 07:10 PM
image
 

இலங்கையில் எவ்வாறானதொரு  யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கத்திலுமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, 

“ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நாட்டு மக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். மேலும், முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகின்றது.

பௌதீகப் பாதுகாப்பு மாத்திரமன்றி பொருளாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு ஆகியவையும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. 

கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 27,000 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். முப்பது ஆண்டுகாலப் போரில் சுமார் 29,000 பேரே இறந்தனர். தற்போது, நாட்டில் வீதி விபத்துகள் அதிகமாக இடம்பெறுகின்றன.

அதேபோன்று, போதைப்பொருளும் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கிறது. வலுசக்தி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவையும் தேசிய பாதுகாப்பின் கீழ் அடங்குகின்றன. 

எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதம், அடிப்படைவாதம், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நாம் துறைசார் மேற்பார்வைக் குழுவாக, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உயரிய பங்களிப்பை வழங்குவதற்காக நாங்கள் செயற்பட்டு வருகிறோம். பிரிவினைவாத அடிப்படையிலான பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் என்பவற்றை பௌதீக ரீதியான அச்சுறுத்தல்கள் என்று அழைக்கலாம்.

அதேபோன்று, ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை அமர்வுகளிலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக பல்வேறு வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

சர்வதேசமல்லாத ஒரு ஆயுதப் போராட்டமே இலங்கையில் இடம்பெற்றது. எனவே, நாட்டில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்கும் வகையில்,  எமது மேற்பார்வைக் குழுவின் பங்களிப்புடன்  ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

‍ஜெனீவா மனித உரிமைக் குழுவுக்கு இப்போதேனும் நாம் உண்மை நிலையைப் புரிய வைக்க வேண்டும். இதனால், தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உண்மை நிலை அதில் விளக்கப்பட்டுள்ளது.”என்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/166738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியம் : சிறிலங்கா எம்.பி வெளியிட்ட பின்புலம்

ஈழக் கனவு தற்போதும் உள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளமை தொடர்பாக இந்தியாவில் இருந்து புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் வாலை மாத்திரமே அழித்துள்ளதாகக் கூறியுள்ள சரத் வீரசேகர, அதன் தலை மற்றும் உடல்கள் தற்போதும் ஐரோப்பிய நாடுகளில் செயற்றிறன்மிக்க வகையில் செயற்படுவதாகவும் ஈழக் கனவை தமிழ் பிரிவினைவாதிகள் கைவிடவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யுத்தக் குற்ற தீர்மானம்

அதிபரின் ஊடகப் பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைச் சுட்டிக்காட்டிய அவர், சிறிலங்கா இராணுவத்தினரின் மன தைரியத்தை சிதைக்கும் வகையில் நுழைவு விசைவுகளை வழங்குவதற்கு அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மறுப்பதாகக் கூறியுள்ளார்.

மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியம் : சிறிலங்கா எம்.பி வெளியிட்ட பின்புலம் | Ltte Alive Intelligence Report Sarath Weerasekhara

 

சிறிலங்கா இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களை இழைக்கவில்லை என்பது மேற்குலக நாடுகளுக்கு தெரிந்திருக்கின்ற போதிலும், தமது சுய லாபங்களுக்காகவே ஜெனீவாவில் தீர்மானங்களை கொண்டுவருவதாக சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஈழக் கனவு தற்போதும் இருக்கன்றது. புலம்பெயர் தமிழர்களில் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், பிரிவினைவாத தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் என இரு தரப்பினர் உள்ளனர்.

தனிநாட்டிற்கான பயணம்

 

பிரிவினைவாத தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், நிதியை அனுப்பி, நாட்டை பிரிப்பதற்கு, அல்லது யுத்தத்தின் ஊடாக செய்ய முடியாதததை வேறு வழிகளில் செய்வதற்கான நோக்கம் அவர்களுக்கு இன்னும் இருக்கின்றது.

மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியம் : சிறிலங்கா எம்.பி வெளியிட்ட பின்புலம் | Ltte Alive Intelligence Report Sarath Weerasekhara

வெளிநாடுகளுடன் இணைந்து எமது இராணுவத்திற்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவந்து, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இராணுவத்தை ஒடுக்கும் அதேவேளை தனிநாட்டிற்கான பயணத்தை மிகவும் சூட்சுமாக முன்னெடுத்து வருகின்றனர்.

மீண்டும் யுத்தமொன்றுக்கு செல்லாமல் வேறு வழிகளில் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். தற்போது புலனாய்வு தகவல் ஒன்றும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன” என்றார்.   

https://ibctamil.com/article/ltte-alive-intelligence-report-sarath-weerasekhara-1697119840

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரா எப்போதும் உண்மை பேசும் ஒரு நபர். பாராளுமன்றத்தில் உண்மை பேசுவதாக சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கிறார். எனவே அவர் ஒரு நாளும் பிழையான தகவல்களை கொடுக்கமாடடார். எனவே தமிழர்களாகிய நாம் அவரது அறிக்கையை எதுவித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் எறும்புக்கு கூட துன்பத்தை ஏட்படுத்தாத இனம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

சரத் வீரசேகரா எப்போதும் உண்மை பேசும் ஒரு நபர். பாராளுமன்றத்தில் உண்மை பேசுவதாக சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கிறார். எனவே அவர் ஒரு நாளும் பிழையான தகவல்களை கொடுக்கமாடடார். எனவே தமிழர்களாகிய நாம் அவரது அறிக்கையை எதுவித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் எறும்புக்கு கூட துன்பத்தை ஏட்படுத்தாத இனம். 

ஆமா ..நானும் ஆமோதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கட்டளையின் கீழ் சொறீலங்கா கடற்படை செய்த யுத்தக்குற்றங்கள்.. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் சர்வதேச ரீதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு.. இவர் தண்டிக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.