Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்வதே சிறந்தது - இரா.சாணக்கியன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்வதே சிறந்தது - இரா.சாணக்கியன்!

kugenOctober 13, 2023
 
Screenshot%20(340).png

(சுமன்)

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு துளியேனும் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதனை எவ்வறு பார்க்கின்றீர்கள்?

டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இழுவைப்படகு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமலல்லாது அவருக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் பாராளுமன்றத்திலே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தொடர்பான விடயங்கள் இருக்கின்றன.

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும், அதன் காரணமாக தென்இந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்;காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம்.

கௌரவ அமைச்;சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உண்மையிலேயே வாயால் சொல்வது ஒன்று நடைமுறைப்படுத்துவது ஒன்று. அந்த அமைச்சிற்கு பொருத்தமில்லாத ஒருவர். அவர் மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாகவோ அல்லது வேறு ஏதாவது அமைச்சுப் பொறுப்பை, எமது மாவட்டத்திலேயும் ஒரு திணைக்களம் கூட சுற்றுநிரூபம் வெளியிடப்படாத அமைச்சை வைத்திருக்கும் அமைச்சர்களைப் போல அவரும் ஏதாவது தன்னுடைய சலுகைகளை எடுக்கக் கூடிய வகையிலான அமைச்சைக் கேட்டெடுத்து பேசாமல் இருப்பதே பொருத்தம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

http://www.battinews.com/2023/10/blog-post_244.html

  • கருத்துக்கள உறவுகள்

இதனை குத்தியரோடு குந்தி இருக்கும் போது.. மூஞ்சிக்கு நேர சொல்லி இருக்கலாமே..??! ஊடக அறிக்கை எதற்கு..??!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும், அதன் காரணமாக தென்இந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்;காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம்

இவ்வளவு காலத்தில் ஒரு நாற்பது வருடங்கள் என வைப்போம். இந்தக்காலத்தில் எத்தனை வருடங்கள் தேவானந்தா அவர்கள் கடல் தொழில் அமைச்சாராக விளங்கி உள்ளார்?

தேவானந்தா அவர்கள் கடல் தொழில் அமைச்சராக இல்லாத காலத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் இடையேயும், இலங்கை இந்திய அரசுகள் இடையேயும் மீன்பிடி, மற்றும் கடல்சார்/எல்லைசார் பிரச்சனைகள் வரவில்லையா?

இந்தபிரச்சனையை தமிழ்நாடு அரசு/தமிழ்நாடு மீனவர்கள் எப்படி பார்க்கின்றார்கள்? அவர்கள் இலங்கை தமிழர்கள் தம்முடன் முரண்படாமல் இருக்க எப்படியான முயற்சிகள், நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள்/எடுக்கின்றார்கள்? அவர்கள் பக்கம் இந்தவிடயத்தில் எவ்வளவு தூரம் அக்கறை உள்ளது?

இங்கு சாணக்கியன் ஐயா செண்டிமெண்டலாக கதைத்து உள்ளார். மற்றும்படி காலங்காலமாக உள்ள போட்டிகள், இழுபறிகளுக்கு இப்போதுள்ள கடல்தொழில் அமைச்சரை காரணாமாக சொல்ல முடியாது.

இலங்கை மீனவர்களிடம் அவர்கள் அபிப்பிராயங்களை இந்த விடயத்தில் அதிகம் காது கொடுத்து கேட்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் அவர்களுக்குஇந்த அமைச்சு  பதவி சுகம் பற்றி இன்னும் தெரியவில்லை போலும். ஒரு தடவை அதில் அமர்ந்தீர்கள் என்றால் எந்த அரசாக இருந்தாலும் தாவிக்கொண்டே இருப்பீர்கள். மனிதாபிமானம், மற்றவர் பிரச்சினை எல்லாம் இரண்டாம் பட்ச்சம்தான். இப்படியெல்லாம் ஒரு சிரேஷட அமைச்சரை பார்த்து நீங்கள் கேட்கக்கூடாது. நடக்க கூடிய காரியம் இருந்தால் அது பற்றி பேசுங்கள்.

சிலர் எந்த அரசு வந்தாலும் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே  இருப்பார்கள். உதாரணமாக டக்கு,  சிறிபால, அமரவீர, ரிசார்ட், ஹக்கீம்  போன்றோர். சிலர் சில நெருக்குவாரங்களினால் அமைச்சு பதவியை எடுக்க முடியாமல் தவித்து கொண்டு திரிவார்கள்.உதாரணத்துக்கு ரிஸார்ட் பதியுதீன் போன்றோர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2023 at 14:24, நியாயத்தை கதைப்போம் said:

இந்தபிரச்சனையை தமிழ்நாடு அரசு/தமிழ்நாடு மீனவர்கள் எப்படி பார்க்கின்றார்கள்? அவர்கள் இலங்கை தமிழர்கள் தம்முடன் முரண்படாமல் இருக்க எப்படியான முயற்சிகள், நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள்/எடுக்கின்றார்கள்? அவர்கள் பக்கம் இந்தவிடயத்தில் எவ்வளவு தூரம் அக்கறை உள்ளது?

இலங்கை மீனவரின் கடல் வளங்களை கொள்ளையடிப்பதில் அக்கறை எடுத்திருக்கிறர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை மீனவரின் கடல் வளங்களை கொள்ளையடிப்பதில் அக்கறை எடுத்திருக்கிறர்கள்.

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Cruso said:

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே

ஓம் வாயும் வயிறும் வேறு தான்.
தொப்பிள் கொடி உறவு என்று சொல்லிக் கெண்டு கொள்ளையடிக்க வருவது தவறு.
நாங்கள் இந்திய கடற்பரபில் மீன் பிடித்து கொண்டிருக்க அங்கே இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்து ஆயுதங்களால்  எம்மை தாக்கி மீன்பிடி வலைகள் பெறுமதிமிக்க சாதனங்களை கொள்ளையடித்து சென்றனர் என்று  முழு பொய் சொல்வது தவறு.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் வாயும் வயிறும் வேறு தான்.
தொப்பிள் கொடி உறவு என்று சொல்லிக் கெண்டு கொள்ளையடிக்க வருவது தவறு.
நாங்கள் இந்திய கடற்பரபில் மீன் பிடித்து கொண்டிருக்க அங்கே இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்து ஆயுதங்களால்  எம்மை தாக்கி மீன்பிடி வலைகள் பெறுமதிமிக்க சாதனங்களை கொள்ளையடித்து சென்றனர் என்று  முழு பொய் சொல்வது தவறு.

 

இல்லை பாருங்கோ. தொப்புள் கொடி உறவு என்று இங்கு ஏதும் பிரச்சினை என்றால் அங்கு தானே ஓடுகிறோம். அங்கு அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து பராமரிக்கிறார்கள்தானே.

இருந்தாலும் அதட்காக அவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் எனது கருத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.