Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சுறுத்தலை மூடிமறைக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 OCT, 2023 | 12:09 PM
image

கபில்

முல்­லைத்­தீவு நீதி­ப­தி­யாக இருந்த சர­வ­ண­ராஜா தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருப்­பதால் பதவி வில­கு­வ­தாக நீதிச்­சே­வைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு அறி­வித்து விட்டு, வெளி­நாட்­டுக்குத் தப்பிச் சென்ற விவ­கா­ரத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கத் தரப்பு  தீவி­ர­மாக இருக்­கி­றது.

முல்­லைத்­தீவு நீதி­பதி சர­வ­ண­ராஜா பதவி வில­கி­யதை அடுத்து, அவ­ருக்கு நீதி கோரும் போராட்­டங்கள் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நீதி­மன்றப் புறக்­க­ணிப்­பு­களும், பேர­ணி­களும் நடத்­தப்­பட்­டன.

யாழ்ப்­பா­ணத்தில் ஒரு மனித சங்­கிலிப் போராட்­டமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அதை­விட கடந்த வெள்­ளிக்­கி­ழமை முழு அடைப்புப் போராட்டம் முன்­னெ­டுப்­ப­தற்குத் திட்­ட­மி­டப்­பட்ட போதும், இன்று நடை­பெ­ற­வுள்ள புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மற்றும் பாட­சா­லை­களில் நடை­பெறும் இரண்டாம் தவணை பரீட்சை போன்ற விட­யங்­களை கருத்தில் கொண்டு- இந்த முழு அடைப்பு போராட்­டத்தை 20ஆம் திகதி முன்­னெ­டுப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய போராட்­டங்­க­ளினால் மாத்­திரம் நீதி­ப­திக்கு ஏற்­பட்ட அநீ­திக்கு நியாயம் கிடைத்து விடும் என்று தமிழ்க் கட்­சிகள் கருதி விட முடி­யாது.

நீதி­பதி சர­வ­ண­ராஜா விட­யத்தில் நீதியை நிலை­நாட்­டு­வ­தென்­பது, பதவி விலகிச் சென்ற அவ­ருக்கு நியா­ய­மான பாது­காப்பை வழங்கி, மீண்டும் அதே பத­வியில் அமர்த்­து­வதா?அல்­லது அவ­ருக்கு அச்­சு­றுத்தல் கொடுத்த தரப்­பி­னரை அடை­யாளம் கண்டு அவர்­களைத் தண்­டிப்­பதா?அல்­லது இவ்­வா­றான செயற்­பா­டுகள் இனி­மேலும் இடம்­பெ­றாத வகையில், நீதித்­துறை சுயா­தீ­னத்தை உறுதி செய்­வதா? என்ற விட­யங்களில் தமிழ்க் கட்­சிகள் மத்­தியில் குழப்­பங்கள் இருப்­பதை மறுக்க முடி­யாது.

இந்த விட­யத்தில் நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் நிலைப்­பாடு என்ன என்­பது யாருக்கும் தெரி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

அவ­ருக்கு நியா­ய­மான பாது­காப்பு உறுதி செய்­யப்­பட்டால், மீளவும் பத­வியை பொறுப்­பேற்றுக் கொள்ளத் தயா­ராக இருப்­பாரா என்ற கேள்­விக்­கான விடை கிடைக்­காத நிலையில், அந்த விவ­கா­ரத்தை முன்­னி­லைப்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

அதனால் தான், நீதி­ப­திக்கு அச்­சு­றுத்தல்  விடுத்­த­வர்­களை அடை­யாளம் கண்டு, அவர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்தி தண்­டிக்க வேண்டும் என்றும், நீதித்­துறை சுயா­தீ­னத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும்- தமிழ்க் கட்­சிகள் கோரு­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் தான், நீதி­பதி சர­வ­ண­ரா­ஜா­வுக்கு அநீதி இழைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் தலை­யி­டு­மாறும், நீதித்­துறை சுயா­தீ­னத்தை உறுதி செய்­யு­மாறும்- இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கு­மாறும் ஏழு தமிழ்க் கட்­சி­களின் சார்பில்- சர்­வ­தேச சமூ­கத்­துக்கு ஒரு கடிதம் அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்சி, ஈ.பி­.ஆர்­.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்­டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என்­பன இந்தக் கடி­தத்தை எழு­தி­யுள்­ளன.

தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில் மற்றையக் கட்­சி­க­ளுடன் பெரும்­பாலும் ஒட்டிக் கொள்­ளாமல் இருக்கும் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் அல்­லது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இதில் கையொப்­ப­மி­ட­வில்லை.

நீதி­பதி சர­வ­ண­ராஜா அச்­சு­றுத்­தப்­பட்ட விவ­கா­ரத்தில் அவ­ருக்கு நீதி கோரும் விவ­கா­ரத்தில் ஒத்த மன­நிலை கொண்ட தரப்­பு­களை வலு­வாக ஒன்­றி­ணைக்க வேண்­டிய கடப்­பாடு தமிழ்க் கட்­சி­க­ளுக்கு காணப்­பட்­டது.

நீதி­ப­திக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட தகவல் வெளி­யா­னதும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணே­சனும், ராதா­கி­ருஷ்­ணனும் பகி­ரங்­க­மாக கண்­டித்­தனர்.

இவர்­களைப் போன்று, நீதி­பதி அச்­சு­றுத்­தப்­பட்­டதைக் கண்­டித்த, அவ­ருக்கு நியாயம் வழங்­கப்­பட வேண்டும் என்றும், நீதித்­துறை சுயா­தீனம் உறுதி செய்­யப்­பட வேண்டும் என்றும் கருதும் தரப்­பினர் மலை­யக மற்றும் தென்­னி­லங்கை அர­சி­ய­லிலும் இருக்­கின்­றனர். அவர்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து சர்­வ­தேச சமூ­கத்­துக்கு இந்தக் கடிதம் எழு­தப்­பட்­டி­ருந்தால் அது இன்னும் வலி­மை­யா­ன­தாக இருந்­தி­ருக்கும்.

2018இல் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்­கத்தைக் கவிழ்த்து விட்டு, மஹிந்த ராஜபக் ஷவைப் பிர­தமராக்கி விட்டு, பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­தி­ருந்தார் அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

அது ஜன­நா­யகப் படு­கொலை என்றும், அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மான செயற்­பாடு என்றும், எதிர்க்­கட்­சிகள் கிளர்ந்து எழுந்­தன.

அந்தச் செயற்­பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வகி­பாகம், முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தற்கு எதி­ராக, உயர்­நீ­தி­மன்­றத்தில் இரா.சம்­பந்தன் வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­த­துடன், எம்.ஏ.சுமந்­திரன் அந்த வழக்கில் முன்­னி­லை­யாகி வாதா­டினார்.

அர­சியல் சட்­ட­மீ­றலை சுட்­டிக்­காட்டி, ஜன­நா­ய­கத்தைக் காப்­பாற்­று­வ­தற்கு சர்­வ­தேசம் தலை­யிட வேண்டும் என்று சர்­வ­தேச சமூ­கத்­திடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­க­ளுடன் இணைந்து போரா­டி­யது.

அந்தப் போராட்­டத்­துக்கு உயர்­நீ­தி­மன்­றத்தின் ஊடாக வெற்­றியும் கிடைத்­தது.

அது கூட்டுச் செயற்­பாட்­டுக்கு கிடைத்த நியாயமான வெற்றி எனலாம்.

நீதி­பதி சர­வ­ண­ராஜா அச்­சு­றுத்­தப்­பட்­டது தனித்­த­தொரு சம்­பவம் அல்ல. அது அவர் சார்ந்த இனத்­துக்கு விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்தல் மாத்­தி­ர­மல்ல. இது நீதித்­துறை சுயா­தீ­னத்­துக்கு விடுக்­கப்­பட்­டி­ருக்கும் பாரிய அச்­சு­றுத்­தலும் கூட.

ஏற்­கெ­னவே, , பிள்­ளையான் எனப்­படும் இரா­ஜாங்க அமைச்சர் சந்­தி­ர­காந்தன், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் கொலை வழக்கில், விளக்­க­ம­றி­யலில் இருந்து விடு­விக்­கப்­பட்ட விவ­கா­ரத்தின் பின்னால் இருந்த அர­சியல் தலை­யீ­டு­களை அசாத் மௌலானா குறிப்­பிட்­டி­ருந்தார்.

இலங்­கையின் நீதித்­து­றையில் அர­சியல் தலை­யீ­டு­களும், நீதித்­துறை சுயா­தீ­னத்­துக்­கான அச்­சு­றுத்­தலும் நீண்­ட­ கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது.

பிர­தம நீதி­ய­ர­ச­ராக இருந்த ஷிராணி பண்­டா­ர­நா­யக்க அர­சியல் பழி­வாங்­க­லினால் பதவி நீக்­கப்­பட்­டதும் இந்த நாட்டில் தான் இடம்­பெற்­றது.

எனவே, நீதி­பதி சர­வ­ண­ரா­ஜா­வுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு, நீதி கோரு­வது மாத்­தி­ர­மன்றி, நீதித்­துறை சுயா­தீ­னத்தை உறுதி செய்யக் கோரும் போராட்­டங்­களை முன்­னெ­டுக்கும் போது, ஏனைய முற்­போக்கு சக்­தி­க­ளையும் அர­வ­ணைத்துக் கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது.

தமிழ்த் தேசியக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் இது­போன்ற விட­யங்­களில் குண்டுச் சட்­டிக்குள் குதி­ரை­யோ­டு­வ­தற்கே முற்­ப­டு­கின்­றன.

குறைந்­த­பட்சம், மலை­யக தமிழ் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் மற்றும்  நீதி­ப­திக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டதை கண்­டித்து வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் ஒத்­து­ழைப்­பையும் பெற்­றி­ருக்­கலாம்.

இந்த விவ­கா­ரத்தை ஒரு தமிழ் நீதி­ப­திக்­கான அச்­சு­றுத்­த­லாக மாத்­திரம் வெளிக் கொண்டு வரு­வதை விட, ஒட்­டு­மொத்த நீதித்­து­றைக்­கான அச்­சு­றுத்­த­லாக-, நீதித்­துறை சுயா­தீ­னத்­துக்கு உள்ள அச்­சு­றுத்­த­லாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் போது, சர்­வ­தேச கவனம் இன்னும் அதி­க­மாக ஈர்க்­கப்­படும்.

அதே­வேளை, நீதி­பதி சர­வ­ண­ராஜா பதவி விலகி வெளி­நாட்­டுக்குத் தப்பிச் சென்ற விவ­காரம் குறித்து விசா­ரணை நடத்­து­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டி­ருந்தார். இந்த விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பொலிஸ் தரப்பு, நியா­ய­மாகச் செயற்­படக் கூடி­யது என்ற பெயரை எடுத்த ஒரு விசா­ரணை அமைப்பு அல்ல.

ஏனென்றால், குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில், நீதி­ப­தியின் உத்­த­ரவு அலட்­சியம் செய்­யப்­பட்டு, விகாரை கட்­டு­மானம் மேற்­கொள்­ளப்­பட்ட போது, பொலிஸார் அதனை தடுக்க முயற்­சிக்­க­வில்லை.

நீதி­மன்ற தடை உத்­த­ரவு முறை­யாகப் பேணப்­ப­டு­கி­றதா என்­பதை அவர்கள் கண்­கா­ணிக்­க­வில்லை.

இது­போன்று பொலிஸ் விசா­ர­ணை­களில் அர­சியல் தலை­யீ­டுகள், பார­பட்­சங்கள் என்று நிறை­யவே உள்­ளதை மறுக்க முடி­யாது.

நீதி­ப­தியை பாரா­ளு­மன்­றத்­துக்குள் வைத்து பகி­ரங்­க­மாக எச்­ச­ரித்த சரத் வீர­சே­கர, பாது­காப்புத்துறைக்­கான பாரா­ளு­மன்ற மேற்­பார்வைக் குழுவின் தலை­வ­ராக இருக்­கிறார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கூட அவர், ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஒரு ஊடக சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார்.

இவ்­வா­றான உயர்­மட்ட அர­சியல் செல்­வாக்­குகள், தலை­யீ­டு­க­ளுக்கு மத்­தியில் குற்றப் புல­னாய்வுத் துறையின் அறிக்கை எந்­த­ள­வுக்கு நியா­ய­மா­ன­தாக இருக்கும் என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், நீதி­பதி சர­வ­ண­ரா­ஜா­வுக்கு எந்த உயிர் அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும், அவர் முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு நாட்டை விட்டு வெளி­யே­றி­யி­ருக்­கிறார் என்றும், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் டிஜிட்டல் தட­ய­வியல் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

நீதி­ப­தி­யுடன் தொடர்பில் இருந்த பொலிஸ் அதி­கா­ரிகள், நீதி­மன்ற அதி­கா­ரிகள் உள்­ளிட்­ட­வர்­க­ளிடம் பெறப்­பட்ட சாட்­சி­யங்­களில் தனக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது குறித்து நீதி­பதி எதுவும் குறிப்­பி­ட­வில்லை என்று கூறி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதனை மட்டும் அடிப்­ப­டை­யாக வைத்துக் கொண்டு அவ­ருக்கு எந்த அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்று எவ்­வாறு சி.ஐ.டி. முடி­வுக்கு வந்­தது என்­பது கேள்­வி­யாக உள்­ளது.

நீதி­ப­தியின் மனை­வியின் சாட்­சி­யத்தில், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே பாது­காப்புக் குறை­பாடு குறித்து, தம்­மிடம் கூறி­யி­ருந்தார் எனக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அந்த விட­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி விசா­ரிக்­காமல், சி.ஐ.டி. அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

நீதி­பதி ஒருவர் தனக்­கான அச்­சு­றுத்தல் குறித்து யாரி­டமும் கூறத் தவறி விட்டார் என்­பதை மட்டும் அடிப்­ப­டை­யாக கொண்டு அவ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்கப்படவில்லை என்று கூற முடியாது.

கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தை அடுத்து, ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக் ஷவே நாட்டை விட்டுத் தப்பியோடினார். அப்போது அவருக்கு பாதுகாப்பு வழங்க முப்படையினரோ, பொலிஸாரோ மறுக்கவில்லை. நாட்டின் தலைவருக்குரிய  முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, நாட்டை விட்டு வெளியேறுவதை தான் சரியான தெரிவாகக் கருதினார்.

பாதுகாப்புத் துறையினருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த கோட்டாபய ராஜபக் ஷவே உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடிய போது, ஒரு சாதாரண தமிழ் நீதிபதி ஏன் அவ்வாறு செய்திருக்கக் கூடாது?

நீதிபதி சரவணராஜா விவகாரத்தில் பல முடிச்சுகள் உள்ளதை மறுப்பதற்கில்லை.

அதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு அவருக்கு நீதி கோரும் முயற்சிகளை குழி தோண்டிப் புதைப்பதும், அதனை சிறுமைப்படுத்துவதும் அபத்தமானது.

இவ்வாறான முயற்சிகளை அரசாங்கமே முன்னெடுக்கின்ற நிலையில், தமிழ்க் கட்சிகள் ஏன் அவருக்கு நீதி கோரும் முயற்சிகளை, இன்னும் வீரியமானதாக முன்னெடுக்க வேண்டும் என்று சிந்திக்காமல் இருக்கின்றன?

https://www.virakesari.lk/article/166959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.