Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் முல்லைத்தீவு மக்கள் நன்மையடைவர் - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 OCT, 2023 | 10:38 AM
image
 

மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

பயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

man-5.gif

வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு புகையிரத நிலையமாக மாங்குளம் புகையிரத நிலையமே இருக்கின்றது. ஏனைய புகையிரத நிலையங்களுடன் ஒப்பிடும் போது சேவை வசதிகள் மிகவும் குறைவான நிலையிலே காணப்படுகின்றது. அதனை உணர்ந்து கொண்டு புகையிரத நிலைய அதிபர்கள் தம் முயற்சியினால் மக்களுக்கு நல்ல முறையில் சேவை வழங்கக்கூடிய புகையிரத நிலையமாக  அதனை மாற்ற முயற்சித்திருக்கின்றார்கள்.அங்கே நூலக வசதி , சுத்தமான குடிநீர் வசதி போன்ற நல்ல விடயங்களை செய்திருக்கின்றார்கள். 

man-4.gif

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம் புகையிரத நிலைய சேவைகளை விஸ்தரிக்க வேண்டும். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆசன ஒதுக்கீட்டை முற்பதிவு செய்ய வேண்டுமாக இருந்தால் கிளிநொச்சிக்கு அல்லது வவுனியாவிற்கு சென்றே பதிவினை மேற்கொள்கிறார்கள். அவ் வசதி மாங்குளத்தில் அமைய பெறுமிடத்து மாவட்ட மக்களுக்கு அது  அனுகூலமாக அமையும். 

வாகன ஒதுக்கீட்டினை முற்பதிவு செய்வதற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதனைவிட சாதாரண புகையிரதங்கள் நிறுத்தி சென்றாலும் அதிவேக புகையிரதங்கள் குறித்த புகையிரத நிலையத்தில் நிறுத்துவதில்லை. அதிவேக புகையிரதங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

man-3.gif

வாகனங்களின் இட ஒதுக்கீடு மற்றையது அதிவிரைவு புகையிரதத்தை மாங்குளத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் தீர்மானமாக எடுத்து கொழும்பிலுள்ள புகையிரத அதிபர்களுக்கும் , ஜனாதிபதி செயலகத்திற்கும், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவ்விரு சேவைகளும் மாங்குளம் புகையிரத நிலையத்திற்கு கிடைக்குமிடத்து முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இன்னும் பெரிதும் நன்மையடைவார்கள் என தெரிவித்தார்.

man-6.gif

https://www.virakesari.lk/article/167138

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றியது புகையிரத திணைக்களம் 

Published By: VISHNU  19 OCT, 2023 | 03:20 PM

image

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் முறிகண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரண்டு புகையிரத நிலையங்கள் காணப்படுகிறது.

received_681298470641274.jpeg

இந்த இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுக்கான புகையிரத சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பிரதான புகையிரத நிலையமாக மாங்குளம் புகையிரத நிலையம் காணப்படுகின்றது.

received_1369657927240487.jpeg

மாங்குளம் புகையிரத நிலையம் ஊடாகவே அதிகளவான முல்லைத்தீவு மக்கள் தமக்கான சேவையை பெறக்கூடியதாக இருக்கிறது.

இருப்பினும் மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன முன் பதிவு வசதிகள் இல்லாமையாலும் கடுகதி புகையிரதம் நிறுத்தப்படாமையாலும் மக்கள் மாத்திரமன்றி அரச அதிகாரிகளும் புகையிரத சேவையை பெற கிளிநொச்சி அல்லது வவுனியா புகையிரத நிலையங்களுக்கே செல்லவேண்டிய நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு சேவைகளையும் வழங்குமாறு பவ்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் பலதடவைகள் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு மாவட்ட செயலகத்தினால் கொழும்பு புகையிரத நிலைய தலைமைக்காரியாலயத்திற்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் இது தொடர்பான கோரிக்கைகள் அனுப்பபட்டிருந்ததோடு மாங்குளம் புகையிரத நிலைய அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது முயற்ச்சியால் எதிர்வரும் 21.10.2023 முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது

இதற்கமைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி 05.10 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 க்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும் (ஒவ்வொரு சனிக்கிழமைகளில்)

யாழ் நிலா இரவு 22.00 மணிக்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு அதிகாலை 4.20 க்கு வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும் (வெள்ளிக்கிழமை மட்டும்)

காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 க்கு புறப்படும் குளிரூட்டிய கடுகதி புகையிரதம் மாங்குளத்திற்கு 14.54 ற்கு வந்தடைந்தது கொழும்பை நோக்கி செல்லும்( ஞாயிறு மட்டும்)

யாழ்நிலாபுகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 21.30 க்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 23.20 க்கு வந்தடைந்து கொழும்பு நோக்கி செல்லும். (ஞாயிறு மட்டும்)

இதனைவிட ஏற்கனவே நிறுத்தப்பட்டுவந்த அனைத்து புகையிரதமும் வழமைபோல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகையிரத திணைக்களத்துக்கு நன்றி தெரிவிப்பதோடு விரைவில் ஆசன ஒதுக்கீட்டு வசதியையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/167265

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய முதலாவது ரயில் பயணம் மாங்குளம் - யாழ்ப்பாணம் 
80களின் தொடக்கத்தில் ....... மரங்கள் ஓடுவதை பார்த்தது இப்போதும் 
ஞாபகத்தில் இருக்கிறது 
 

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளம் புகையிரத நிலைய நிறுத்தத்தில் நின்று செல்வது எனக்கும் நினைவு உள்ளது. ஒரு சமயம் யாழ்ப்பாணம் சென்றபோது மாங்குளம் புகையிரத நிலையத்தில் இறங்கி பின்னர் பேருந்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தோம். வழியில் வரும் மாங்குளம் இராணுவ முகாமும் நினைவு உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.