Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2.4 பில்.டொலர் ஹெயார்கட் சலுகை கிடைக்கும் சாத்தியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   17 OCT, 2023 | 01:23 PM

image

ரொபட் அன்டனி 

இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்பு  செயற்பாட்டில் சாதகமான நிலைமை தோற்றம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதாவது இலங்கை பெற்றுள்ள 12 பில்லியன் பிணைமுறி கடன்களில் 2.4 பில்லியன் கடன் இரத்து செய்யப்படும் அதாவது ஹெயார்கட்  வழங்கப்படும் சாதக நிலை தோன்றியுள்ளது.  

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின்  பிரகாரம் இரண்டாவது தவணை பணத்தை பெற்றுக் கொள்வது தாமதமடைந்துள்ளது.   சர்வதேச கடன் மறுசீரமைப்பு தாமதமடைகின்றமையே  இதற்கு முக்கிய காரணமாகவுள்ளது.   இந்த பின்னணியிலேயே தற்போது கடன் மறுசீரமைப்பில் ஒரு முன்னேற்றகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றமை அவதானிக்கப்படுகின்றது.  

46 பில்லியன் டொலர் கடன் 

இலங்கை  சர்வதேச சமூகத்துக்கு செலுத்த வேண்டிய   கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்களில் (இந்த தொகையில் சிறு மாற்றம் இருக்கலாம்)     16 பில்லியன் டொலர்  அளவில் பிணைமுறிகள்  மூலம் பெறப்பட்ட கடன்களாகும்.  அதாவது நாடுகளினால் வழங்கப்படுகின்ற இரு தரப்பு, பல்தரப்பு கடன்கள்,  உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை வழங்குகின்ற கடன்களுக்கு மேலதிகமாக இலங்கை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பிணைமுறிகளை வழங்கி கடன்களை பெற்றுக்கொள்ளும்.  இவற்றை இறையாண்மை பிணைமுறி  கடன்கள் என்று கூறுவார்கள்.  அதன்படி இலங்கை கிட்டத்தட்ட 16 பில்லியன் டொலர் அளவில் இந்த பிணைமுறி கடன்களாக பெற்றுள்ளது.   ஒவ்வொரு காலப்பகுதியில் இந்த கடன்கள் முதிர்ச்சியடைகின்றன. 

20 வீத  ஹெயார்கட்  ? 

இந்த பின்னணியில் இதில்  12 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கிய  குழுவினர் (Ad Hoc Group of  Bondholders)  அந்தக் கடன்களில் 20 வீத ரத்தை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றது. இதற்கான யோசனை இலங்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.    அதாவது 12 பில்லியன் டொலர்  கடன்களில் 20 வீத ரத்து எனும்போது 2.4 பில்லியன் டொலர் கடன் ரத்து செய்யப்படும் சாத்தியம் ஏற்பட்டிருக்கின்றது.  

கடன் மறுசீரமைப்பில் மூன்று கருவிகள் காணப்படுகின்றன.  அதாவது   பெற்றுக் கொண்ட கடன்களில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ளுதல், அது “ஹெயார் கட்” என்று கூறப்படும்.   ஏற்கனவே இணங்கப்பட்ட  வட்டி விகிதங்களை குறைத்தல் மற்றும்  கடன் மீள்செலுத்தப்படுகின்ற  காலத்தை  மேலும் நீடித்தல் ஆகியன உள்ளன.   அதன்படி,  12 பில்லியன் டொலர் அளவில் இலங்கைக்கு கடன் வழங்கியிருக்கின்ற சர்வதேச பிணைமுறி கடன் வழங்கும் குழுவே இலங்கைக்கு இந்த சிபாசிசை முன்வைத்துள்ளது.      இதனை இலங்கை ஏற்றுக் கொள்ளும் நிலைமையே தற்போது காணப்படுகிறது. 

எப்படி வழங்கப்படும்? 

இந்த 12 பில்லியன் டொலர் கடன்கள் இலங்கைக்கு 11 பிணைமுறிகள்   ஊடாகவே   வழங்கப்பட்டிருக்கின்றன.  இந்த அனைத்து பிணைமுறிகளையும் மீளப்பெற்றுவிட்டு புதிதாக 10  பிணைமுறிகளை வழங்குவதற்கு  குறிப்பிட்ட கடன் வழங்கும் குழு  யோசனை முன்வைத்திருக்கிறது.  

2027 ஆம் ஆண்டிலிருந்து 2036 ஆம் ஆண்டு வரை முதிர்ச்சியடையும் வகையில் இந்த புதிய பிணைமுறி கடன்கள் வழங்கப்படவிருக்கின்றன.  2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31  ஆம் திகதியிலிருந்து 2036 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த புதிய 10 பிணைமுறிகள் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கின்றன.  அதனூடாக இலங்கைக்கு 20 வீத கடனை இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வட்டியும் குறைக்கப்படும் 

இந்த ஹெயார்கட்  மட்டுமின்றி வட்டி வீதத்திலும் குறைப்புகளை செய்வதற்கு இந்த பிணைமுறி கடன் வழங்கிய  குழு முன்வந்திருக்கின்றது.   அதாவது, இலங்கை  அடுத்த சில வருடங்களில் தனது மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியை 93 முதல் 96 .4  வீதம் வரை  வளர்ச்சியடைய செய்தால் கடன்களுக்கான  வட்டி விகிதத்தில் 2.5 வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோன்று மொத்த தேசிய உற்பத்தி   பெறுமதியானது 93 பில்லியன் டொலர்களுக்கு குறைந்தால் 4.5 வீத  வட்டி குறைப்பு செய்யப்பட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதி 89.5  வீதமாக குறையும் பட்சத்தில் ஆறு வீத வட்டி குறைப்பை செய்வதற்கு இந்த பிணைமுறி கடன் வழங்கிய  குழு  யோசனை முன்வைத்துள்ளது.  

மொத்த தேசிய உற்பத்தியின் தற்போதைய பெறுமதி என்ன?  

இலங்கையின் தற்போதைய மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியானது 75 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றன.  2019 ஆம் ஆண்டளவில் அது 80 பில்லியன் டொலர்களாகவே இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் மொத்த தேசிய உற்பத்தி குறைவடைந்தது.    மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதி 75 பில்லியன்களாக குறைவடைந்திருக்கின்றது.  கடந்த காலங்களில் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் சுருக்கமடைந்தது.  

மத்திய வங்கியானது வங்கி கட்டமைப்பின் வட்டி விகிதங்களை அதிகரித்ததன்  காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு பதிலாக சுருக்கமடைந்தது.  சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களினால் வர்த்தக செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.  

அதனால்  அடுத்த சில வருடங்களில் 93 பில்லியன் டொலர்கள் என்றளவில்  மொத்த தேசிய உற்பத்தி இலக்கை நோக்கி பயணிக்க முடியுமா என்பது கேள்வியாகும்.  அவ்வாறு இலங்கையினால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதாவது மொத்த தேசிய உற்பத்தி குறைவடைந்தாலும் இந்த சர்வதேச பிணைமுறி கடன் வழங்கும் குழு  இலங்கைக்கு கடன் இரத்தையும் வழங்குவதுடன் வட்டி குறைப்பையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை ஏற்குமா? 

இது இலங்கையை பொறுத்தவரையில் மிகவும்  சாதகமான நிலைமையாகும். இந்த  யோசனையை இலங்கை ஏற்றுக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.   

இலங்கையின் சர்வதேச  பிணைமுறி கடன்களுக்கு இவ்வாறு மறுசீரமைப்பு செய்வதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது இலங்கை இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் வழங்குனர்களுடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.  குறிப்பாக இருதரப்பு கடன்களை பொறுத்தவரையில் இந்தியா, சீனா,  ஜப்பான் போன்ற நாடுகள் வழங்கி இருக்கின்றன.  இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே  கடன் மறுசீரமைப்புக்கு இணங்கியுள்ளன. 

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.  இதன்போது சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  குறிப்பாக சீனாவானது இலங்கைக்கு  சுமார் 7 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.    இருதரப்பு கடன்களில் இது மிகப்பெரிய தொகையாக காணப்படுகிறது.  இந்த கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். தற்போது சீனா கொள்கையளவில் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு முன்வந்திருக்கின்றது.  எனவே இந்த செயல்பாடும் வெற்றியடைந்தால் இலங்கையின் மீட்சி செயற்பாட்டில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். 

இரண்டாம் கட்ட தவணைப்பணம் 

அதனடிப்படையில் விரைவில் சர்வதேச நாணய  நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.  இலங்கை கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்  கடன்களை கொண்டுள்ள நிலையில்  அதில் கிட்டத்தட்ட 16 பில்லியன் டொலர்  மறுசீரமைப்பு  நிவாரணத்தை பெறமுடியும் என்று இலங்கை எதிர்பார்க்கின்றது.  

 தற்போதைய சூழலின் அடிப்படையில் எட்டு பில்லியன் டொலர் அளவில் நிச்சயமாக கடன் குறைப்பு  அல்லது ஹெயார்கட்  செய்து கொள்ள முடியுமான நிலைமை தோற்றம்பெற்றுள்ளது.   அதன் காரணமாகவே இலங்கை   உள்நாட்டு மட்டத்தில் இந்த கடன் மறுசீரமைப்பை மிகவும் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்தது.  ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்நாட்டு மட்டத்தில் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. 

காரணம் இலங்கை தனது  அர்ப்பணிப்பை   சர்வதேச மட்டத்துக்கு காட்ட வேண்டிய தேவையுள்ளது. அதனடிப்படையில் தற்போது இந்த சர்வதேச மட்டத்திலான கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகள் சாதகமான நிலைமையை வெளிக்காட்டுவதாக  உள்ளன. 

மற்றுமொரு நெருக்கடியை தவிர்ப்பது?  

நாட்டில் மீண்டும் ஒரு டொலர் நெருக்கடி   ஏற்படாத வகையில் மறுசீரமைப்பு  செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள்  இன்னும் கடுமையான வாழ்க்கை செலவு சவால்களை  சந்திக்கின்றனர்.    ரூபாவின் பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும்.  அதேபோன்று உள்நாட்டு   உற்பத்தி அதிகரிக்கப்படுவது அவசியமாகும். இவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும்.  

இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுக்களை நடத்திவருகின்றது.   அண்மையில் மொரோக்கோவில் நடைபெற்ற  உலக வங்கி நாணய நிதிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்ற இலங்கை பிரதிநிதிகள் நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். எனவே அடுத்தகட்ட இராஜதந்திர நகர்வுகள், பேச்சுக்கள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதே தீர்க்கமாக அமைந்துள்ளன.

https://www.virakesari.lk/article/167077

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.