Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று முதல் அதிகரிக்கின்றது மின்சாரக் கட்டணம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 OCT, 2023 | 08:24 AM
image

இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதிக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு ஏற்ப, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் விதம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/167321

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதிக வழங்கப்பட்டுள்ளது.

IMG-4926.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்கு !

electricity-bill.jpg

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடமொன்றுக்கு மூன்று தடவைகள் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை சட்டத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த 04 காரணங்களும் பொய்யானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (20) முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, 18 வீதத்தில் இருந்து 20 வீதம் வரையான மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/278038

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம்

தற்போதைய மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது பல நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச்சூழல் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டமை வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் சோளப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான விதைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” விவசாய அமைச்சின் கீழுள்ள சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்கேற்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அனுராதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பெரும்போகத்தில் 40,000 ஏக்கர் சோளத்தை பயிரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான சோள விதைகள் மற்றும் யூரியா உரங்களை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 350 மில்லியன் ரூபா செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசுகளுக்கு இடையேயான இந்த போர்ச் சூழல் நம் நாட்டையும் பாதித்துள்ளது.

உலகின் பணக்கார நாடுகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது ஏழை நாடுகளுக்கு நியூமோனியா ஏற்படும் என ஒரு கதை உண்டு.

அதேபோல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் , இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தண்ணீர் கட்டணம் உயரும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நேரத்தில் தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, அவ்வாறான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்காது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே ஒரே வழி. அரசியல் ஆதாயங்களுக்காக தனித்தனியாக செயல்பட்டால், அது நம்மை மேலும் படுகுழியில் தள்ளத்தான் செய்யும்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது நல்லதல்ல. ஆனால், நம் நாட்டில் இன்னும் அனல் மின்சாரம் மூலம்தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாட்களில் பல பகுதிகளில் மழை பெய்தாலும், நீர்மின் நிலையங்களில் இன்னும் 100 வீதம் நீர் மின் உற்பத்தி தொடங்கவில்லை.

மின்சார சபை அதிகாரிகளும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். எல்லா நேரத்திலும் மக்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமானதல்ல. எனவே இந்த நிலையில் இருந்து விடுபட நாம் அனைவரும் உழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/278115

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

23 OCT, 2023 | 01:12 PM
image

மின் கட்டணத்தை அவ்வப்போது அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலவாக்கலை மற்றும் கினிகத்தேன நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

தலவாக்கலை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால ஏற்பாடு செய்திருந்ததுடன், கினிகத்தேன நகரில் நடைபெற்ற போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பதாதைகளை ஏந்தியவாறும் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் பெருந்தோட்ட  தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

IMG-20231023-WA0012_3613152652051.jpg

IMG-20231023-WA0013_3613198368718.jpg

IMG-20231023-WA0013.jpg

IMG-20231023-WA0015.jpg

https://www.virakesari.lk/article/167567

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டலின்படி ஆறு (06) மாதங்கள் என முன்னர் தீர்மானிக்கப்பட்ட மின் கட்டண மீளாய்வு காலம் மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி அமைச்சர்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மின்சார விநியோகம் தொடர்பான பொதுவான கொள்கை வழிகாட்டியை தயாரிப்பதற்கான அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. .

இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோக கணக்காய்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்று (03) மாதங்களாக உரிய காலத்தை மீளாய்வு செய்வதற்கான கூட்டு அமைச்சரவை பிரேரணை ஜனாதிபதியால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வானிலை ஆய்வுத் துறையின் உதவியுடன் நீர்மின்சார முன்னறிவிப்புகளை வலுப்படுத்தவும், இதனால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுவான கொள்கை வழிகாட்டல்கள் திருத்தப்படலாம்.

https://thinakkural.lk/article/279357

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

news-04-2.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தி நேற்று மாலை தீப்பந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர்களால் தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மின்கட்டண அதிகரிப்பை ஏற்படுத்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, மின்கட்டணத்தை கூட்டாதே, ரணில் ராஜபக்ஷவை கண்டிக்கின்றோம் போன்ற கோசங்களும்
போராட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சங்க அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள், கிராமமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://thinakkural.lk/article/281007

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தி நேற்று மாலை தீப்பந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

ஏன் இந்த மின் கட்டணத்தை மாதாமாதம் அதிகரிக்கிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.