Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாதத்தை விடுவோம் வாழ்ந்து காட்டுவோம்

Featured Replies

95769998gt2.png

சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் நெடுநாளையக் கனவு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் திட்டம் செயலுக்கு வந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைச் சீர்குலைப்பதில் இந்துத்வா சக்திகளும் அ.தி.மு.கழகம் போன்ற அதன் துணை சக்திகளும் முனைந்து செயல்படுகின்றன.

‘இராமர் பாலத்தை இடித்தால் பூகம்பம் வரும்!’ என்றார் இராம கோபாலன். அரசியல் நடத்த அந்த இல்லாத பாலத்தை பி.ஜே.பி. ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

அது என்னய்யா இராமர் பாலம்? பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றானாம். அந்த தேவியை மீட்க இலங்கைக்கு ராமன் பாலம் அமைத்தானாம். அந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இந்த சக்திகள் போர்க்கோலம் பூணுகின்றன.

இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் மலைக் குகைகளிலும் புதர்களிலும்தான் வாழ்ந்தான். குடும்பமாகக் கூடி வாழும் நாகரிகமே துளிர்க்கவில்லை. இந்த நிலையில், இராமர் பாலத்தை எந்த இன்ஜினீயர்கள் கட்டினார்கள்? அணில்களும், வானரங்களும் கட்டியதாக வாதம் செய்கிறார்கள். இந்தச் சொற்கோலம் அவர்களுடைய இதயங்களில் படிந்துவிட்ட அழுக்குப் படிவங்கள்.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது? கடல் நீரோட்டங்களாலும், அலைகளாலும் ஏழு மலைத் திட்டுக்கள் உருவாகி இருக்கின்றன. அந்தத் திட்டுக்களில் ஒன்றுதான் ஆதம் பாலம் என்று வரலாறு கூறும் மணல் மேடு. அதற்குத்தான் இராமர் பாலம் என்று பெயர் சூட்டி இந்துத்வா சக்திகள் உருத்திர தாண்டவம் ஆடுகின்றன.

‘இராமர் பாலம் என்பது இயற்கையாக உருவான ஒரு புவியியல் அமைப்பு’ என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இயற்கையின் விளையாட்டால் எழுந்த மணல் மேடு என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள். இதே முடிவினை ஏற்கெனவே இந்திய அகழ்வாராய்ச்சித் துறையும் வடித்து வைத்திருக்கிறது.

இன்றைக்கு இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது. ‘இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது’ என்று சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இதில் தங்கள் தரப்பு வாதத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

‘இராமரோ, வேறு இராமாயணக் கதாபாத்திரங்களோ பூமியில் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே பாலத்தை இராமர் கட்டினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை’ என்று மத்திய அரசு தெரிவித்தது. அதுவே உண்மை.

ஆனால், இராமர் இருந்தார் என்பது கோடானு கோடி மக்களின் நம்பிக்கை. அதனை கருத்தில் கொள்ள வேண்டாமா என்று உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுந்தது.

மக்களின் மத உணர்வுகளோடு எவரும் விளையாடக் கூடாது. ஏற்றுக் கொள்வோம். அதே சமயத்தில் மக்களின் மத உணர்வுகளைக் கிளப்பி, கால் முளைக்காத கதைகளைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டம் போன்ற சிறப்பான தேவையான திட்டங்களைச் சீர் குலைக்கலாமா??

‘இராமேஸ்வரம் அருகே மனிதனால் கட்டப்பட்ட எந்தப் பாலமும் இல்லை’ என்று அண்மையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிந்து அறிவித்தது. இத்தகைய அறிவு சார்ந்த விஞ்ஞான முடிவுகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு புராண கால நம்பிக்கையை சபை ஏற்றுங்கள் என்றால் என்ன நியாயம்??

‘இராமர் பாலம் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது, கோடானு கோடி இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாம். அதனால் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அத்வானி குரல் எழுப்பினார். இருநூறு ஆண்டுகளாக இருக்கின்ற பாபர் மசூதியை படை திரட்டிச் சென்று அவர் இடிக்கிறார். இல்லாத இராமர் பாலத்தை ‘இடிக்காதே. எங்கள் மனம் புண்படும்’ என்கிறார்.

அத்வானியின் வாதத்திற்கு மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் ரொம்ப நன்றாகவே தாளம் போடுகிறார். ‘இந்துக்களின் வாழ்வில் இராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். அதனை விவாதிக்கத் தேவையில்லை. ஏனெனில், அது நம்பிக்கைத் தொடர்பானது. சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவும் சொல்ல விரும்ப வில்லை’ என்கிறார்.

இராமரையோ அவர் மீது இவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையையோ யாரும் குறை சொல்லவில்லை. முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று அடித்துச் சொல்வது போல இராமர் கட்டியதுதான் பாலம் என்ற இவர்களின் முடக்குவாதத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

இராவணனுக்குப் பத்துத் தலை என்கிறார்கள். அப்படியானால், அவன் எந்தப் பக்கம் தலை வைத்து, எப்படிப் படுப்பான் என்று இன்றைய பள்ளி மாணவன் கேட்கிறான். அதுவும் நம்பிக்கை. அதன் மீது விவாதம் கூடாது என்கிறாரா பரத்வாஜ்??

இராமன் வனவாசம் சென்ற பின்னர், பதினான்கு ஆண்டுகள் அவருடைய காலணிகள்தான் அயோத்தியை ஆண்டன என்று இராமாயணம் கூறுகிறது. அதனைக் கணினி யுகத்து மாணவன் ஏற்றுக் கொள்வானா?

‘இராமர் பாலமே இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததற்காக அகழ்வாராய்ச்சித் துறையை நிர்வகிக்கும் அம்பிகாசோனி, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்’ என்று இன்னொரு அமைச்சர் ஜெய்ராம் இரமேஷ் சுடு சொற்களால் சுட்டிருக்கிறார். இந்துத்வா சக்திகள் காவிக் கூடாரத்தில் மட்டுமல்ல, காங்கிரஸ் கூடாரத்திலும் பதுங்கியிருக்கின்றன என்பதனை அவர் மெய்ப்பித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தயார் செய்த அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் இருவர் தாற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த மனுவில் ‘இராமர் பற்றிய கருத்துக்களை மட்டும் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்ன மத்திய அரசு, இரண்டு மனுக்களையும் அப்படியே திரும்பப் பெற்றிருக்கிறது. மதவாத சக்திகளின் காட்டுக் கூச்சலுக்கு மத்திய அரசு பணிந்து விட்டதா??

‘இராமர் பாலம் என்பதே இல்லை’ என்ற எல்லா விஞ்ஞான முடிவுகளுக்காக மத்திய அரசு உறுதியாக நின்றிருக்க வேண்டும். மத உணர்வுகளைக் கிளப்பி இரத்த ஆறுகளை ஓட விட்டு அரசியல் குளிர் காய்வதுதான் இந்துத்வா சக்திகளின் இலட்சியம். நாட்டின் பிரதான பிரச்னைகளில் மத உணர்வுகளைக் கலந்து, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அந்த சக்திகள் வெட்கப்பட்டதே இல்லை.

அம்பிகாசோனி ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? அகழ்வாராய்ச்சி அதிகாரிகளைத் தண்டிப்பது என்ன நியாயம்? அவர்கள் நிரபராதிகள். உண்மையை உலகிற்கு உரைத்தவர்கள். மத்திய அரசிடம் இருக்கும் பல்வேறு ஆய்வுகளைத் தொகுத்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதனை எடுத்துக் கூறியவர்கள். இராமர் பாலமே இல்லை என்ற ஆராய்ச்சி முடிவுகளை இனி மத்திய அரசு இலங்கா தகனம் செய்யப்போகிறதா?

இராமருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? நாடாளுமன்றத்தையே நடக்க விடாமல் தொடர்ந்து முடக்கி வரும் பி.ஜே.பி., மத உணர்வுகளைக் கிளறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க முயல்கிறது. இதற்கு மத்திய அரசு அடிபணியலாமா? மூலையில் குவித்துக் கொளுத்த வேண்டிய பழைமை வாதத்திலா முகம் பார்த்து சிங்காரித்துக் கொள்ள வேண்டும்?

‘இராமாயணமும் மகாபாரதமும் இந்தியக் கவிஞர்களின் கற்பனை’ என்றார் காந்தியடிகள். அதே சமயத்தில், ‘இராமனை நற்குணங்களின் நாயகன் என்று அந்த இதிகாசங்கள் சித்திரிப்பதால், அந்த தெய்வீக மைந்தனை வணங்குகிறேன்’ என்றும் அவர் சொன்னார்.

‘இராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டங்களை அடி நாதமாகக் கொண்ட கற்பனைக் களஞ்சியம்’ என்றார் நேரு.

தமிழகத்திற்கு சக்கரவர்த்தி திருமகனாக இராமனை அறிமுகம் செய்த இராஜாஜி என்ன சொன்னார்? ‘இராமன் ஓர் கற்பனைக் கதாநாயகன்’ என்றார்.

இவர்களெல்லாம் இந்துக்களைப் புண்படுத்துவதற்காக இப்படிச் சொன்னார்களா? அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். இத்தனை தேசபக்தத் தலைவர்களும் ‘இராமனே கற்பனைப் பாத்திரம்’ என்று சொன்ன பின்னர், அவன் எங்கே வந்து எப்படிப் பாலம் கட்டினான்?

வாதம் செய்ய வழியில்லாத போது, விஞ்ஞானத்திற்கு வேலி போட்டு விட்டு ‘மக்களின் பரம்பரை நம்பிக்கையைப் பாருங்கள்’ என்கிறார்கள். அந்த நம்பிக்கை தேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு செய்கிறதா இல்லையா? அதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவற்றோடு, இராமனைப் பற்றி வாதங்கள் செய்வதை விட்டுவிட்டு, இராமனைப்போல் வாழ்ந்து காட்ட வேண்டும். இதுதான் இராமனுக்குச் செய்கிற நிஜமான மரியாதை. நமது சந்ததியினருக்கு நாம் காட்டுகின்ற ஒழுக்கப் பாதை.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Edited by Vasampu

வாதத்தில தான் நம்ம வாழ்கையே இருக்கு அதை நிற்பாட்டினா எப்படி வாழ்வது செம ஜோக்..........அவன் ஒன்று சொல்ல நாம ஒன்றை சொல்ல இப்படியே காலத்தை கொண்டு போக வேண்டும்...... :P :P

நல்ல கட்டுரை குசும்பண்ணா அதுவும் பாபர் மசூதி இடிகப்பட்டதை வடிவாக விளக்கியுள்ளார்கள் நன்றி இணைப்புக்கு

  • தொடங்கியவர்

ஈழவன் உங்கள் கருத்திற்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.