Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தி, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தி, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

adminDecember 1, 2023
Navy-Commander-Wasantha-Karannagoda.jpg?

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையை மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டது.

மேல் நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒன்றை நியமித்துள்ளார்.

சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கோரிக்கையின் பிரகாரம் நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 12 (2) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 450 (4) பிரிவின் கீழ் இந்த வழக்கு பிரதம நீதியரசரால் தீர்மானிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பதற்றம் ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தின் 3 நீதியரசர்களள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2023/198036/

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

இந்தப் 11 இளைஞர்களும் கடத்தி கொலை செய்யப் பட்டது 2008´ம்  .ஆண்டு.
கடந்த 15 வருடமாக இதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல், இன்னும் இதனை 
இழுத்தடிப்பதிலேயே குறியாக உள்ளமை  எவ்வளவு  கேவலமான செயல். 😡

இவர்கள் கடத்தப் பட்ட ஆண்டைக் கூட பல  தமிழ் ஊடகங்கள் குறிப்பிடாமல் வெளியிடுவதும் 
அரசுக்கு துணை போகும் செயல் என்றே கருத வேண்டி உள்ளது. 😥

பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோர் தமது வயது மூப்புடன்  எவ்வளவு சிரமப் பட்டு இந்த வழக்கை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்  என்பதை நீதிமன்றம் கூட கவனத்தில் எடுக்கவில்லை. 😥

கடத்தி கொலை செய்தவன்... பதவி உயர்வுகள் பெற்று உல்லாசமாக வாழ்கின்றான். 😡

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.