Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஸாவில் போர் குற்றங்கள் ; பலவீனமான நிலைப்பாட்டில் இலங்கை! - லக்ஷ்மன் கிரியெல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
02 DEC, 2023 | 06:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பலஸ்தீனம் - காஸாவின் இன்றைய நிலை தொடர்பில் அரசாங்கம் பலவீனமான நிலைப்பாட்டில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நிலையில் உள்ளதா என்பதை அறியவில்லை. காஸாவில் போர் குற்றங்கள் இடம்பெறுகின்றன. நாளாந்தம் 100க்கு அதிகமானோர் மரணிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் வேண்டும், மேற்குலகமும் வேண்டும். ஆனால், தர்மத்தின் நிலையில் இருந்து நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இஸ்ரேல் என்ற நாடு ஆரம்பத்தில் இருக்கவில்லை என்பதை முழு உலகும் அறியும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க அரசாங்கத்தில் இருந்தபோதும் குரல் கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சியில் உள்ளபோதும் குரல் கொடுக்கிறோம். நீதிமன்றங்களையும், உயர் கல்வியையும் சுயாதீனப்படுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். மக்கள் விடுதலை முன்னணி உட்பட சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியது.

அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை 18ஆவது திருத்தம் மாற்றியமைத்தது. நாங்கள் 19ஆவது திருத்தம் கொண்டு வந்தோம். 20ஆவது திருத்த சட்டமூலத்தை அப்போதைய நீதியமைச்சர் அலி சப்ரி கொண்டுவந்தபோது நான் 25 திருத்தங்களை முன்வைத்தேன். ஆனால், அவர் அவற்றை செயற்படுத்தவில்லை. தன்னிச்சையாக செயற்பட்டார். 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் நேர்ந்தது என்ன? முழு நாடும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது.

20ஆவது திருத்தம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பலவீனப்படுத்தியது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் 21ஆவது திருத்தமாக அமுல்படுத்தப்பட்டது. நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாக இயங்காவிட்டால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். வரி நீங்கலாக அவர்களுக்கு 10 அல்லது 20 சதவீத சம்பளமே மிகுதியாகுகிறது. நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி நீதியமைச்சருக்கோ, ஜனாதிபதிக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தீர்மானிக்க முடியாது. பிரதம நீதியரசரே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நீதிபதிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அழுத்தமில்லாமல் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. ஆகவே சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும்.

பலஸ்தீனம் - காஸாவின் இன்றைய நிலை தொடர்பில் அரசாங்கம் பலவீனமான நிலைப்பாட்டில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நிலையில் உள்ளதா என்பதை அறியவில்லை. நாளாந்தம் 100க்கும் அதிகமானோர் மரணிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் வேண்டும், மேற்குலகமும் வேண்டும். ஆனால் தர்மத்தின் நிலையில் இருந்து நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

10, 20 யூதர்களுக்காகவே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்பதொன்று இருக்கவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் 60 இலட்சம் யூதர்களை பலஸ்தீனர்களோ பிற தரப்பினரோ கொல்லவில்லை. இன்று மனித உரிமை பற்றி பேசும் ஐரோப்பியர்களே யூதர்களை கொன்றார்கள். இதுவே உண்மை. காஸாவில் போர் குற்றங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் செல்கிறதா என்பதை நாங்கள் அறியவில்லை. கடந்த காலங்களில் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. ஆனால், தற்போது பொருளாதார படுகொலை குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

எமது நாட்டின் நீதிமன்றம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதை சர்வதேசத்துக்கு குறிப்பிட முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/170823

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி தமிழர்களின் ஒரு பகுதி ஒற்றுமையாக ஒரே மாதிரியான தவறான நிலைபாட்டில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிங்கள எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி தமிழர்களின் ஒரு பகுதி ஒற்றுமையாக ஒரே மாதிரியான தவறான நிலைபாட்டில் தான்.

இவர்கள் எப்போது சரியான நிலைபாடடை எடுத்திருக்கிறார்கள்? இல்லாவிட்ட்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.