Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   07 DEC, 2023 | 11:26 AM

image
 

1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக இலங்கை  அதிகாரிகள் நாட்டின் துஸ்பிரயோக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 தமிழர்களை தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தனது சர்வதேசசகாக்கள் வர்த்தக சகாக்கள் ஐக்கியநாடுகள் ஆகியவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடப்போவதாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்து வந்துள்ளதுஇஎன சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் நீண்டகாலமாகசிறுபான்மை சமூகத்தினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்கு பயன்பட்டுள்ளது.என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

hrw_meen.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் அந்த சட்டத்தை நீக்கும்வரை அதனை பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவேந்திய தமிழர்களிற்கு எதிராக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியமை ஈவிரக்கமற்ற துஸ்பிரயோகம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பாரபட்சத்தை எதிர்நோக்கும் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நல்லிணக்கம் குறித்து பேசுகின்றார் ஆனால் அவரது அரசாங்கம் இனப்பிரிவினைகளை மேலும் ஆழமாக்கும் விதத்திலேயே செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நவம்பர் 25- 26 ம் திகதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்த அதிகாரிகள் நினைவேந்தல் நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட சோடனைகள் ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் கைப்பற்றினர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிரான உள்நாட்டு யுத்தம் பிரிவினைவாதஆயுத  அமைப்பின் தோல்வியுடன் 2009 இல் முடிவடைந்தது முதல் தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்தவர்கள் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவேந்துவதை தடுத்துவந்துள்ளன.என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது

டிசம்பர் 2ம் திகதி இலங்கையின் வடபகுதி முல்லைத்தீவின் பொலிஸார் 1984 ம்ஆண்டு ஒதியமலை தமிழ் கிராமமக்கள் படுகொலை செய்யப்பட்டமை நினைவேந்தமுயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.எனவும் மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது

உயிரிழந்தவர்களை இனமத சிறுபான்மையினர் நினைவுகூறுவதை தடுத்துநிறுத்துவது மதம் நம்பிக்கை வெளிப்பாடு ஒன்றுகூடுதல் ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கான உரிமையை மீறும் செயல் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171165

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அப்படிதான் பேசுவார். ஆனால் அப்படி எல்லாம் செய்ய மாடடார் என்று எல்லோருக்குமே தெரியும். இவர்களுக்கு மட்டும் புரியாமல்போனது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது கொடூரமான துஷ்பிரயோகம் என்பதுடன், தொடர்ச்சியாக ஒரு சமூகம் ஓரங்கட்டப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

human-rights-watch.jpg

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா இலங்கையின் சர்வதேச பங்காளர்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விமர்சித்துள்ளன.

அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான விமர்சனங்களை ஒடுக்குவதற்கும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தை வரையறுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

https://thinakkural.lk/article/283952

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.