Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க அரச மரத்துடன் இணைந்தது கண்டல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

728520610.pngதமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க  அரச மரத்துடன் இணைந்தது கண்டல்!

(புதியவன்) 

இதுவரை தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்கும் மரமாக வெள்ளரசு மரம் இருந்து வருகின்ற நிலையில், அதற்கு பக்கத் துணையாக இன்று கண்டல் தாவரங்களும் இடம்பிடித்திருக்கின்றன. அராலி தொடக்கம் பொன்னாலை வரையும் மற்றும் காரைநகர் பிரதேசம் போன்ற இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன. தொடர்ந்து அரச திணைக்களங்கள் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இந்த மரங்களை கடலுக்குள் மற்றும் கடற்கரையோரமாக நாட்டினர். அந்த மரங்கள் ஓரளவு வளர்ந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்ட தற்போதைய நிலையில், காடுகளை பராமரிக்கவேண்டிய வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்ட கடற்கரையை ஆக்கிரமிக்க முனைப்புக்காட்டி வருகின்றது. 

 

இங்கு நாட்டப்பட்ட கண்டல் தாவரங்களைப் பராமரிக்கப்போகின்றார்கள் என்றும் மேலதிக கண்டல் தாவரங்களை நாட்டப்போகின்றார்கள் என்றும் குறிப்பிட்ட இடங்களை தங்களுக்கு வழங்குமாறும் மாவட்டச் செயலகத்திற்கு புள்ளிவிபரங்கள் மற்றும் வரைபடங்களுடன் வேண்டுகோளை அனுப்பியிருக்கின்றனர். விரைவில் அதை வர்த்தமானியில் வெளியிடப்போவதாகவும் தெரியவருகின்றது.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காரைநகருக்கு சென்ற மேற்படி வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அளவிட முயன்றனர் எனவும் அதற்கு தாம் அனுமதிக்கவில்லை எனவும் அங்குள்ள சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 
தற்போது, அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் தாம் சுவீகரிக்கப்போகின்றார்கள் எனவும் மேற்படி திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. 

இதுவரை தொல்லியல் திணைக்களமும் அரச மரமும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களமும் கண்டல் தாவரங்களும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. தென்னிலங்கையில் வேறு எங்கும் வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்பிரதேசத்தை ஆக்கிரமித்தது இல்லை. ஆனால், வடக்கில் இந்தச் செயற்பாட்டைத் தொடங்கியிருக்கின்றது.  இவ்வாறான நிலையில், குறிப்பிட்ட கடற்பிரதேசமே தமது வாழ்வாதாரம் எனத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள் இதை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவ்வாறான நிலை வந்தால் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தாம் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். (ஐ)          

தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க  அரச மரத்துடன் இணைந்தது கண்டல்! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

இதை இமயமலை பிரகடனத்தில் லண்டன் தரப்பு சேர்த்து விட்டவையாம்....ஆலமரமும் வேம்பையும் சேர்க்க வேண்டாமென்று விடாப்பிடியாய் நின்றவையாம்....அமைதி கொள்க மகா சனங்களே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.