Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெலோ கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விஜித்தாவின் 33ம் ஆண்டு நினைவு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

large.GA1bkoeXMAA5JL-.jpeg.24045ad888c52

 

 

1990 ஆம் ஆண்டு தமிழர்கள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் கொடூரத்தால் அல்லோலகல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சொந்த இனத்தில் இருந்தே ஒரு தேசத் துரோகக் கும்பல் தன் சொந்த இனத்தை வேட்டையாடியது. அக்கும்பலின் பெயர் "டெலோ" என்பதாகும். 

இக்கும்பல் பல்வேறு படுகொலைகளை & வன்புணர்ச்சிகளை சிங்களப் படையினருடன் சேர்ந்து அவர்களின் துணைப்படையாக நின்று செய்து முடித்தது. 

அவ்வாறு அன்று அவர்கள் செய்து முடித்த ஒரு கொடூரம் தான், இந்த வின்சென்ட் கல்லூரி மாணவி விஜித்தாவின் வன்புணர்ச்சி நிகழ்வாகும். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி டெலோ ஒட்டுக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இவர் 5 பேர் கொண்ட குழுவின் கூட்டு வன்புணர்ச்சியின் பின் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வாவிக்கரை ஆற்றில் வீசப்பட்டார். 

இதில் ஈடுபட்டிருந்த ஐவரில் மூவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் சாவொறுப்பு (சுட்டு) வழங்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். அவர்களின் படங்களை நீங்கள் மேலே கண்டிருப்பீர்கள். 

இவர்களில் ஜனா என்கிற கோவிந்தம் கருணாகரம் என்ற பாலியல் குற்றவாளி 2012 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு 2017 வரை மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தவர் ஆவார். பின்னர் மீண்டும் 2020 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார், இந்தக் குற்றவாளி.

குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டில் நீதி கிடைக்குமோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

1990 ஆம் ஆண்டு தமிழர்கள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் கொடூரத்தால் அல்லோலகல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சொந்த இனத்தில் இருந்தே ஒரு தேசத் துரோகக் கும்பல் தன் சொந்த இனத்தை வேட்டையாடியது. அக்கும்பலின் பெயர் "டெலோ" என்பதாகும். 

மிகவும் கவலையான செய்தி.

நன்னி மூலத்தை இணைக்கலையோ?

இதிலே உள்ள கோவிந்தன் கருணாகரன் இப்போ பாராளுமன்ற உறுப்பினரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, ஈழப்பிரியன் said:

மிகவும் கவலையான செய்தி.

நன்னி மூலத்தை இணைக்கலையோ?

இதிலே உள்ள கோவிந்தன் கருணாகரன் இப்போ பாராளுமன்ற உறுப்பினரா?

இது நான் துவிட்டரில் பார்த்த செய்தி. ஒரு வலைத்தள செய்தி அன்று. ஆகையால் நான் இணைப்பை வழங்க வில்லை.வசன வரி நானே. 

படத்தினதும் பேரினது அடிப்படையில் நான் தேடியறிந்தது வரை ஆம். ப்போதைய டெலோ உறுப்பினரே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்

 

 

 

இதே படம் ஈபிடிபி யின் சூத்திரத்திலும் உண்டு.

 

 

Edited by நன்னிச் சோழன்
பிற்சேர்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2023 at 01:00, ஈழப்பிரியன் said:

இதிலே உள்ள கோவிந்தன் கருணாகரன் இப்போ பாராளுமன்ற உறுப்பினரா?

ஆம் அண்ணை 
எனது மாமி முறையான ஒருவரின் வீட்டிற்கு அருகில் தான் மட்டுநகர் வாவி வீதியில் (Lake  road) இவரது காரியாலயம் உள்ளது. எம்.பியானவுடன் பார்த்திருக்க வளர்ந்து இன்று பலமாடி கட்டிடம்.
செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவென்று மட்டுநகரின் தூரப்பிரதேசங்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இவர் வழங்கிய இலவச அமரர் ஊர்தி இவரது காரியாலயம் முன் எப்போதும்  நிறுத்தப்பட்டு இருக்கும்.  
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் சில வருடங்களுக்குமுன்னர் லிவர்ப்பூல் பகுதியில் இருந்தார்.  பின்னர் இலங்கை சென்று பா உ ஆனார்.  இவரின் தம்பியொருவரும் லண்டனில் வாழ்ந்திருக்கின்றார் எனத் தெரிய வருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.