Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி!

adminDecember 13, 2023
imf-1.jpg?fit=1170%2C731&ssl=1

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி SDR 508 மில்லியன்களாகும்.

இலங்கையின் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.

 

https://globaltamilnews.net/2023/198502/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடனை பெறுவதால் வங்குரோத்து எனும் அடை மொழியில் இருந்து சிறிலங்கா நீங்குகிறது என ரனில் கூறிடுள்ளார்.
 

cmr.fm

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க அமெரிக்கா தயார்!

123.jpg

இலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர் கிடைக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நடவடிக்கை மூலம், நாட்டின் நீடித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மறுமலர்ச்சிக்கான பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து தமது ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/284688

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2023 at 16:23, nunavilan said:

இந்த கடனை பெறுவதால் வங்குரோத்து எனும் அடை மொழியில் இருந்து சிறிலங்கா நீங்குகிறது என ரனில் கூறிடுள்ளார்.
 

cmr.fm

தேர்தல் வந்தவுடன் தெரியும் இவர்கள் எல்லாம் இருப்பார்களா இல்லையா எண்டு. தொங்கு பாலத்தை கடந்து விடடாரம் , இனி ஒடுக்கமான வளைவுகள் நிறைந்த பாதையில் பயணிக்க வேண்டுமாம். பாவம் மனுஷன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.