Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் விசேட நடவடிக்கை:70 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விசேட நடவடிக்கை:70 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய  அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர். 

மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் , தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும்  விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும் , போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

யாழில் விசேட நடவடிக்கை:70 பேர் கைது! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   20 DEC, 2023 | 09:54 AM

image
 

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

அதன்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய  அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர். 

மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும், போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/172113

  • கருத்துக்கள உறவுகள்

arrest-900-1.webp?resize=750,375&ssl=1

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் : யாழில் பெருமளவானோர் கைது!

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 184 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் கஞ்சா மற்றும் 19,507 மாத்திரைகளும் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் இந்த விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும் , போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1363742

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.இளைஞர்கள் மூவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பு

Published By: VISHNU   25 DEC, 2023 | 04:10 PM

image

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

மாதகல், இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன், இளவாலை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/172447

போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போதைக்கு அடிமையானவர்கள் அதிகளவில் கைது

26 DEC, 2023 | 11:32 AM
image
 

யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர். 

மருத்துவ பரிசோதனை அறிக்கையின் படி 190 பேரில் 125 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில், இவர்களில் சுமார் 25 பேரை நீதிமன்றங்களின் ஊடாக மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/172488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.