Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று(08) திங்கள்கிழமை  அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில் பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/article/பருத்தித்துறை_பொலிஸாரால்_ஒரு_தொகுதி_கஞ்சா_மீட்பு!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது  newuthayan.com பதிவுகள் மட்டும் படிக்க முடியாதபடி மங்கலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப்பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது

48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

 

யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு

CID - Sri Lanka PoliceJaffnaDrugs
 44 நிமிடங்கள் முன்
Share
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group
விளம்பரம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப்பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது

48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

 

 

 

போதைப்பொருளின் பெறுமதி

கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும், கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு | Large Amount Of Drugs Recovered Pointpedro Jaffna 

 

நாடளாவிய ரீதியில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதற்தடவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/large-amount-of-drugs-recovered-pointpedro-jaffna-1704711668

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு.

நீங்கள் இணைத்தது தெளிவாக படிக்ககூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுவதும் இந்த வேடடை தொடர்கின்றது. உண்மையாகவே இது மக்களால் வரவேற்கப்படுகின்ற ஒரு விடயம்தான். இளைய தலைமுறையை காப்பாற்ற செய்யும் ஒரு நல்ல முயட்சி. இருந்தாலும் சில அரசியல் செயட்பாடுகளும் குளறுபடிகளும் நடக்கத்தான் செய்கின்றது.

நான் இருக்கும் தெஹிவல பகுதியில் மரின் டிரைவ் இல் உள்ள ஒரு பீச் ரெஸோர்ட்யயும் அடித்து நொறுக்கிவிடடார்கள். வியாபார போட்டி காரணமாக இதனை பயன்படுத்தி உள்ளார்கள். இன்னும் வேறு சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. மற்றப்படி இது ஒரு நல்ல முயட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

இலங்கை முழுவதும் இந்த வேடடை தொடர்கின்றது. உண்மையாகவே இது மக்களால் வரவேற்கப்படுகின்ற ஒரு விடயம்தான். இளைய தலைமுறையை காப்பாற்ற செய்யும் ஒரு நல்ல முயட்சி. இருந்தாலும் சில அரசியல் செயட்பாடுகளும் குளறுபடிகளும் நடக்கத்தான் செய்கின்றது.

நான் இருக்கும் தெஹிவல பகுதியில் மரின் டிரைவ் இல் உள்ள ஒரு பீச் ரெஸோர்ட்யயும் அடித்து நொறுக்கிவிடடார்கள். வியாபார போட்டி காரணமாக இதனை பயன்படுத்தி உள்ளார்கள். இன்னும் வேறு சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. மற்றப்படி இது ஒரு நல்ல முயட்சி. 

பெரும் முதலைகளை விட்டு சிறிய மீன்களை பிடித்பதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

பெரும் முதலைகளை விட்டு சிறிய மீன்களை பிடித்பதாக சொல்கிறார்கள்.

அதில் உண்மை இல்லாமல் இல்லை. சில அரசியல்வாதிகளும் அதில் சிக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், வெளி நாடுகளில் உள்ள பாதாள குழுக்கள், போதை பொருள் வியாபாரிகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் இங்கு நிறைய விலையுயர்ந்த வாகனங்கள், கட்டிடங்கள், நிறைய பணங்கள் அரசுடைமையாக்க பட்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Cruso said:

அதில் உண்மை இல்லாமல் இல்லை. சில அரசியல்வாதிகளும் அதில் சிக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், வெளி நாடுகளில் உள்ள பாதாள குழுக்கள், போதை பொருள் வியாபாரிகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் இங்கு நிறைய விலையுயர்ந்த வாகனங்கள், கட்டிடங்கள், நிறைய பணங்கள் அரசுடைமையாக்க பட்டிருக்கிறது. 

தகவலுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.