Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தொடங்கிய விவாதம் தற்போது மாலத்தீவை எட்டியுள்ளது.

பிரதமர் மோதி மற்றும் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த கருத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாலத்தீவு தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அங்குள்ள சுற்றுலாத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அக்ஷய் குமார், சல்மான் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் பலரும் சுற்றுலாப் பயணத்தின் போது இந்திய கடற்கரைகள் மற்றும் தீவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசியுள்ளனர்.

இந்த முழு விவாதமும் பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணத்தின் போது தொடங்கியது. அந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இனி விடுமுறைக்கு மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவுக்குச் செல்லுங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவு - லட்சத்தீவு ஒப்பீடு

இதுபோன்ற சமூக ஊடக பதிவுகளுக்கு பதில் அளிக்கும் போது, மாலத்தீவு அமைச்சர்கள், லட்சத்தீவுகளுடன் மாலத்தீவுகளை ஒப்பிடுவது சரியல்ல என்று ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினர்.

மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளை ஒப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இருந்து மாலத்தீவை அடைவது எளிதானது. மேலும், குறைந்த நேரத்தில் அங்கு சென்றுவிடலாம்.

இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு செல்ல விசா தேவையில்லை. அதேசமயம், லட்சத்தீவு செல்ல உரிய அனுமதி பெற வேண்டும்.

இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்கள் உள்ளன. அதேசமயம், லட்சத்தீவுக்கு குறைவான விமானங்களே உள்ளன.

லட்சத்தீவுகளும் மாலத்தீவுகளும் வெவ்வேறான சூழல்களை கொண்டவை. அவற்றை ஒப்பிடுவது சரியா என இக்கட்டுரையில் பார்ப்போம்.

 
மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவு பற்றி தெரியுமா?

மாலத்தீவில் 'மால்' என்ற வார்த்தை 'மாலா' என்ற மலையாள வார்த்தையிலிருந்து வந்தது. மாலத்தீவில், 'மால்' என்றால் மாலை மற்றும் ’தியு’ என்றால் தீவு.

1965-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு முடியாட்சி இருந்தது. பின்னர், நவம்பர் 1968-இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

மாலத்தீவு இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இந்திய நகரமான கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது.

இது 1,200 தீவுகளைக் கொண்டது. பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது, டெல்லியை விட இது ஐந்து மடங்கு சிறியது.

மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம்.

மாலத்தீவில் திவேஹி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது.

அங்குள்ள தீவுகள் எதுவும் கடல் மட்டத்திலிருந்து ஆறு அடிக்கு மேல் இல்லை. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும் அபாயத்தில் மாலத்தீவு உள்ளது.

 
மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. இங்குள்ள தீவுகளின் பொருளாதாரமும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் தேசிய வருவாயில் கால் பகுதிக்கு மேல் சுற்றுலாத்துறையில் இருந்து வருகிறது.

2019-ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

மாலத்தீவுக்குச் செல்பவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே. கடந்தாண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் 2 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2021-இல் இந்த எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாகவும், 2022-இல் இந்த எண்ணிக்கை இரண்டரை லட்சமாகவும் இருந்தது.

மாலத்தீவின் ஊடக அமைப்பான AVAS-ன்படி, மாலத்தீவுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள்தான்.

இங்கு நீலக் கடலால் சூழப்பட்ட வெள்ளை மணல் கடற்கரைகளைக் கொண்ட தீவுகள், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

மாலத்தீவுக்கு எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் வருகிறார்கள்?

  • இந்தியா: 2 லட்சத்து 5 ஆயிரம்
  • ரஷ்யா: 2 லட்சத்து 3 ஆயிரம்
  • சீனா: 1 லட்சத்து 85 ஆயிரம்
  • பிரிட்டன்: 1 லட்சத்து 52 ஆயிரம்
  • ஜெர்மனி: 1 லட்சத்து 32 ஆயிரம்
  • இத்தாலி: 1 லட்சத்து 11 ஆயிரம்
  • அமெரிக்கா: 73 ஆயிரம்
 
மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவில் என்னென்ன இடங்கள் உள்ளன?

கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு ஜனவரி 26-ம் தேதி செல்ல வேண்டும் என்றால், விமான டிக்கெட்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் செலவாகும். மாலத்தீவு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும்.

மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, மாலத்தீவில் 175 ஓய்வு விடுதிகள், 14 ஹோட்டல்கள், 865 விருந்தினர் இல்லங்கள், 156 கப்பல்கள், 280 ’டைவ்’ மையங்கள், 763 பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஐந்து சுற்றுலா வழிகாட்டி நிறுவனங்கள் உள்ளன.

மாலத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்.

  • சூரிய தீவு
  • ஒளிரும் கடற்கரை
  • ஃபிஹாலஹோஹி தீவு
  • மாலே நகரம்
  • மாஃபுஷி
  • செயற்கை கடற்கரை
  • மாமிகிலி

பல பயண வலைத்தளங்களின்படி, மாலத்தீவுக்குச் செல்ல சிறந்த மாதங்கள் ஜனவரி-ஏப்ரல்.

மே முதல் செப்டம்பர் வரை மாலத்தீவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் கட்டணம் சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

லட்சத்தீவு பற்றி தெரியுமா?

லட்சத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும்.

மாலத்தீவு லட்சத்தீவில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் கொச்சியிலிருந்து 440 கிலோமீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது.

லட்சத்தீவு என்பது 36 சிறிய தீவுகளின் கூட்டமாகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 96 சதவீதம் பேர் முஸ்லிம்கள். லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரம்.

லட்சத்தீவின் பரப்பளவு சுமார் 32 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மாலத்தீவின் பரப்பளவை விட இது சுமார் 10 மடங்கு குறைவு.

லட்சத்தீவில் உள்ள 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் ஆகியவை இதில் அடங்கும். பித்ராவில் 271 பேரும், வெறிச்சோடிய பங்காரம் தீவில் 61 பேரும் மட்டுமே வசிக்கின்றனர்.

இங்கு மலையாள மொழி பேசப்படுகிறது. மினிகாயில் மட்டுமே மக்கள் மாஹே பேசுகிறார்கள்.

 
லட்சத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீன் பிடித்தல் மற்றும் தென்னை சாகுபடி ஆகியவை லட்சத்தீவில் உள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள். லட்சத்தீவில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்தாண்டு லட்சத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவித்தன. அதாவது, மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு குறைவு.

அகட்டியில் விமான ஓடுதளம் உள்ளது, கொச்சியிலிருந்து அங்கு செல்லலாம். அகட்டியில் இருந்து கவரட்டி மற்றும் கடமட் வரை படகுகள் உள்ளன. அகட்டியில் இருந்து கவரட்டிக்கு ஹெலிகாப்டர் சேவை உள்ளது.

கொச்சியில் இருந்து அகட்டிக்கு விமானத்தில் செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

கொச்சியில் இருந்து 14 முதல் 18 மணிநேரத்தில் கப்பல் மூலம் லட்சத்தீவு சென்றடையலாம். இங்கு செல்வதற்கு எவ்வளவு பணமும் நேரமும் செலவிடப்படும் என்பது நீங்கள் எந்த தீவுக்குச் செல்கிறீர்கள், எத்தனை நாட்களுக்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,FACEBOOK/NARENDRA MODI

லட்சத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்:

  • கவரட்டி தீவு
  • கலங்கரை விளக்கம்
  • ஜெட்டி தலம், மசூதி
  • அகட்டி
  • பங்காரம்
  • தின்னகர

மாலத்தீவுகளைப் போலவே லட்சத்தீவுகளிலும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம்.

இங்கு வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால், லட்சத்தீவுக்குச் செல்ல, நீங்கள் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் இங்குள்ள பல தீவுகளுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அரசாங்க அனுமதி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

லட்சத்தீவு என்ற பெயரின் கதையும் சுவாரஸ்யமானது. லட்சத்தீவு என்றால் மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஒரு லட்சம் தீவுகள் என்று பொருள்.

 
லட்சத்தீவு

பட மூலாதாரம்,LAKSHADWEEP.GOV.IN

லட்சத்தீவு பேசுபொருளானது ஏன்?

சமீபத்தில், பிரதமர் மோதி லட்சத்தீவுக்கு சென்ற போது, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி, பிரதமர் மோதியின் சமீபத்திய பயணமும் பாஜகவின் தேர்தல் வியூகத்துடன் தொடர்புடையது.

பிரதமர் மோதி தனது சமீபத்திய பயணத்தின் போது, "2020-இல், அடுத்த 1,000 நாட்களில் லட்சத்தீவில் வேகமான இணையம் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன்" என்று கூறியிருந்தார். ”இன்று தொடங்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபர் திட்டம் 100 மடங்கு வேகமான இணைய வேகத்தை உங்களுக்கு வழங்கும்” என அவர் தெரிவித்தார்.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில், நாட்டின் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் கேரளாவில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இந்த சூழலில் கேரளாவுக்குள் நுழைய லட்சத்தீவு நுழைவுவாயிலாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரஃபுல் படேல் 2020 முதல் லட்சத்தீவின் நிர்வாகியாக உள்ளார்.

லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தும், சில நேரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.

லட்சத்தீவில் இந்திய கடலோர காவல்படை செயல்பாட்டில் உள்ளது.

இதுதவிர, ஐஎன்எஸ் த்வீபிரக்ஷக் கடற்படை தளமும் கட்டப்பட்டுள்ளது.

 
லட்சத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராகுல் காந்தியைத் தவிர, லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலின் வேட்புமனுவும் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

ஜனவரி 11, 2023 அன்று, லட்சத்தீவு நீதிமன்றம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது ஃபைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி 25, 2023 அன்று, கேரள உயர் நீதிமன்றம் தண்டனையை பத்து ஆண்டுகள் நிறுத்தி வைத்தது.

மாலத்தீவில் ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த முகமது முய்ஸு, வெற்றி பெற்ற பின், இந்தியா தனது படைகளை திரும்ப பெறுமாறு கூறினார்.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

என்ன சர்ச்சை?

லட்சத்தீவில் டிசம்பர் 17-ம் தேதி வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகையில் ஈடுபடுவதற்காக பல தசாப்தங்களாக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது ஃபைசல் இந்த முடிவு ஒருதலைபட்சமானது என எதிர்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் பிரஃபுல் படேல் ஒருதலைபட்சமான முடிவுகளை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். இங்கு பள்ளி நேரமும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணியாக மாற்றப்பட்டது.

லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் இரண்டும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மாலத்தீவில் இந்தியாவின் இருப்பு வலுவிழந்தால், சீனா மாலத்தீவுக்கு மிக நெருக்கமாகிவிடும். லட்சத்தீவில் பாதுகாப்பு விஷயத்தில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால், தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பு ஆழமாகிவிடும்.

நவம்பர் 26, 2008 அன்று மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இருந்து லட்சத்தீவின் நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. கேரளாவின் கடலோரப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் லட்சத்தீவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c4ny8p8e8k9o

  • கருத்துக்கள உறவுகள்

மாலத் தீவில் வலுக்கும் இந்திய எதிர்ப்பு! ஏன்? எதனால்?

- ஹரி பரந்தாமன்

 

india-base.jpg

மாலத்தீவு பெரும் பேசுபடு பொருளாகி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளது நியாயமே. அதே சமயம் இந்தியாவிற்கு எதிரான கொந்தளிப்பு மன நிலை மாலத் தீவில் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை பார்க்க வேண்டும் – நீதிபதி ஹரிபரந்தாமன் கட்டுரை;

மாலத் தீவுக்கு அருகில் இந்தியாவின் லட்சத்தீவு இருக்கிறது .லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடி, லட்சத் தீவின் அழகை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்து இருந்தார்.

nNgMAJPmxSKA4kC5VDR5TaOTXaIRy5XYbi486Bs2

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தின் காரணமாகவும் அவரின் பதிவின் காரணமாகவும், கடந்த இரண்டு நாட்களாக மிகப் பெரிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அமைச்சர்கள் மூவர் இதற்கு மோசமான எதிர்வினை ஆற்றினார்கள்.

மாலத்தீவின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மாலத்தீவின் கலை துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடியை, ‘’இஸ்ரேலின் ஊதுகுழல்’’ என்று கடுமையாக சாடினார். ‘’மோடி முர்தாபாத்’’ என அமைச்சர் மால்ஷா ஷெரீப், எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

1180542.jpg மோடியை எதிர்த்து பேசி பதவி இழந்த மாலத் தீவின் மூன்று அமைச்சர்கள்!

இதற்கு இந்திய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். #BycottMaldives எனும் ஹேஷ்டாக் இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் டிரெண்டிங்கானது.

தற்போதைய முகமது முய்சுவுக்கு முன்னதாக, இப்ராஹிம் முகமது சோலி மாலத்தீவின் அதிபராக இருந்தார், அவருடைய அரசாங்கம் ‘இந்தியா ஃபர்ஸ்ட்’ (India First) என்ற கொள்கைப்படி நம்முடன் நெருக்கம் பாராட்டியது. ஆனால், முய்ஸு ‘இந்தியா அவுட்’ (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு, முய்சுவின் அணுகுமுறைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சுமூக நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை விட சீனாவுடன் அதிகம் நெருக்கம் காட்டுகிறார் முகமது முய்சு.

மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் எம்.பியுமான ஈவா அப்துல்லா இந்தியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

“அமைச்சரின் கருத்து வெட்கக்கேடானது. அவரது இனவெறி கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தியா மற்றும் இந்திய மக்கள் குறித்த அவரது கருத்துக்கள் மாலத்தீவு மக்களின் கருத்து அல்ல. நாங்கள் இந்தியாவைச் சார்ந்து இருக்கிறோம். எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியா தான் முதலில் உதவி வருகிறது. பொருளாதார உறவுகள், சமூக உறவுகள், சுகாதாரம், கல்வி, வணிகம், சுற்றுலா போன்றவற்றுக்கு இந்தியா பெரிதும் உதவியுள்ளது. மாலத்தீவு மக்கள் இதை அறிந்து, இதற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய இழிவான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.” என்று கூறியுள்ளார் ஈவா அப்துல்லா.

இந்து மகா சமுத்திரத்தில் உள்ள மிகச் சிறிய நாடு மாலத்தீவு. அதன் மக்கள் தொகை 5 1/2 லட்சம் மட்டுமே. அந்த மக்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியாவைச் சேர்ந்த லட்சத் தீவில் வாழும் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. அவர்கள் பழங்குடி மக்களும் கூட. லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசம். ஒன்றிய அரசின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ளதே லட்சத்தீவு .லட்சத்தீவு நிர்வாக அதிகாரி ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர். பாஜக ஆட்சி செய்யும் காலத்தில் லட்சத்தீவின் பள்ளிகளில் அளிக்கப்பட்ட அசைவ உணவு நிறுத்தப்பட்டது. லட்சத்தீவு மக்கள் இதனை ஆட்சேபித்த போதும், அசைவ உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.

itp-maldives-april2023.jpgமாலத்தீவு சுற்றுலாவை நம்பி இருக்கக் கூடிய நாடு. மேற்சொன்ன மாலத்தீவு அமைச்சர்களின் சமூக வலைதள பதிவிற்கு எதிர்வினையாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், சினிமா பிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் என பலரும் மாலத் தீவுக்கான சுற்றுலாவை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதன் விளைவாக ஒரே நாளில் ,மாலத்தீவில் 7,500 ஓட்டல் முன்பதிவுகளும் 2,300 விமான டிக்கெட்டுகளும் இந்தியாவில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் குரல் வளையையும் பெரிய அளவில்  நெரிக்கும். இந்தியா இன்று உலகிலேயே அதிக அளவில்  மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

இதற்கு பின்னால் உள்ள அரசியலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் அதிபராக வெற்றி பெற்ற முகமது முய்சு, அந்த நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய அரசின் ராணுவம் உடனே வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர், ”நான் அதிபரானால் இந்திய ராணுவத்தை மாலத் திவீல் இருந்து வெளியேற வைப்பேன்” என வாக்குறுதி அளித்தார். ‘மக்களும் அவரை வெற்றி பெற வைத்துள்ளனர்’ என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்ற வாரம் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு நேர்காணல் அளித்த மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறாமல் இருப்பது அந்த நாட்டு மக்களின் எண்ணத்திற்கு விரோதமானது. அயலார் ராணுவம் எங்கள் மண்ணில் இருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’’ என்றார்.

dadd9010-adea-11ee-9603-cd889f98f01f.jpg

முன்னதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய ராணுவம் இங்கே தளத்தை அமைத்துள்ளது. அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இந்தியா என்று இல்லை வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இது தான்” என்று அவர் தெரிவித்தது கவனத்திற்கு உரியது.

ஆனால், இந்திய அரசு தனது ராணுவத்தை மாலத்தீவில் இருந்து திரும்பப் பெறுவதாக இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் மாலத் தீவு மக்களிடையே ஒரு பதற்றமும், அதிருப்தியும் உள்ளது. அதுவே இந்த மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் மோடிக்கு எதிராக பேசியதன் பின்னணி என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாஜக ஆட்சி செய்தாலும், இந்தியாவின் வெளியுறவு கொள்கை அண்டை நாடுகளுடன் சுமூக உறவை பேணுவதாக இல்லை. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் என்று உள்ள அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான உறவு இல்லை என்பதை அறிவோம்.

1988 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு கலகத்தை அடக்குவதற்காக இந்திய ராணுவம் சென்றது .அந்த கலகத்தை அடக்கியது. ஆனால், அதற்கு பிறகு இத்தனை வருடங்களாகியும் இந்திய இராணுவம் அங்கிருந்து வெளியேறவில்லை என்பதோடு, அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டு தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முனைகிறது. இம் மாதிரியான செயல்களை இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்.

868210-36279-zwrwoarxep-1517943293.jpg மாலத் தீவில் இந்திய ராணுவ வீரர்கள்!

முகமது முய்சு அதிபராக பதவியேற்ற பிறகு அடுத்த நாளே மாலத்தீவில் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் முறைப்படி கோரிக்கை விடுத்தார் என்பது கவனத்திற்கு உரியது. இத்துடன் இந்தியாவுடனான பல ஒப்பந்தங்களை ரத்து செய்யவுள்ளதையும் தெரிவித்து இருந்தார்.

அயல் நாட்டின் உள் விவகாரங்களில் இந்திய அரசும், இந்திய ராணுவமும் தலையிட எந்த உரிமையும் இல்லை. மாலத்தீவு சென்ற ராணுவம் அங்கேயே தங்கிவிட இயலாது. அந்த நாடு வெளியே போகச் சொன்னால், வெளியே வருவது தான் அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கும் செயல். இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை இலங்கையின் அதிபர் பிரமேதாசா வெளியேற வேண்டும் என்று கடுமையாக சொன்னதற்கு பின்னர் தான் வெளியேறியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மாலத்தீவின் அதிபர் முகமது  முய்சு இப்பொழுது சீனாவிற்கு பயணம் செய்கிறார் . குறிப்பாக, இதுவரை பதவியில் இருந்த அதிபர்கள் முதலில் பயணம் செய்யும் நாடாக இந்தியா இருந்தது .ஆனால் இப்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபர் சீனாவிற்கு பயணம் செய்கிறார். இந்தியாவை விட சீனாவை நட்பு நாடாக பார்க்கிறார். காரணம், இந்திய ராணுவம் அவர்கள் மண்ணில் இருந்து வெளியேற மறுக்கிறது. இந்திய ராணுவ வெளியேற்றத்தை அவர் ஒரு பிரச்சனையாக உலக அரங்கில் வைக்கிறார். அந்த நேரத்தில் தான் மேற்கண்ட விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

மாலத் தீவின் அமைச்சர்கள் அல்லது வேறு எவரும் நமது பிரதமர் மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது, அது நமக்கு வருத்தம் தருகிறது என்பதை நான் தெளிவாக கூறுகின்ற அதே நேரத்தில், மாலத்தீவில் இருந்து நமது ராணுவம் வெளியேற வேண்டும் என்பதையும், அந்த சின்னஞ்சிறிய நாட்டின் குரல் வளையை நெரிக்கும் வண்ணமோ, சுற்றுலா வியாபாரத்தை பாதிக்கும் செயலிலோ இந்தியா  ஈடுபடக்கூடாது என்பதையும் இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகளாகிய நாம்  வலியுறுத்த வேண்டும். இந்தியா ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்ற பெயர் உலக அரங்கில் நிலைக்க வேண்டும்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்
 

https://aramonline.in/16304/maldives-india-military-modi/

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

இந்திய ராணுவம் அவர்கள் மண்ணில் இருந்து வெளியேற மறுக்கிறது. இந்திய ராணுவ வெளியேற்றத்தை அவர் ஒரு பிரச்சனையாக உலக அரங்கில் வைக்கிறார்.

மோசமான இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவக்கு போனால் சீனாவுக்கு போன மாதிரி

லட்சதீவுக்கு போனால் இந்தியாவுக்கு போன மாதிரி.

இந்தியா மாலைதீவுக்கு ஒரு முடிவு கட்டாமல் விடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.