Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   10 JAN, 2024 | 11:11 AM

image
 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறுகின்றது.

இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடக்கம் மாலை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அழைப்புவிடுத்துள்ளார்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

10.01.1974 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர் விபரம்:

வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்)

பரம்சோதி சரவணபவன் (வயது 26)

வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32)

ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52 – ஆசிரியர்)

புலேந்திரன் அருளப்பு (வயது 53)

இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்)

இராஜன் தேவரட்ணம் (வயது 26)

சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்)

சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்)

https://www.virakesari.lk/article/173584

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

நானும் ஒருவனாக இதற்குள் அகப்பட்டு சைக்கிளையும் எடுக்காமல் சிதறி ஓடி அடுத்தநாள் எதுவித சேதாரமும் இல்லாமல் சைக்கிளை மீட்டுவந்தேன்.

50 ஆண்டுகள் ஆனாலும் நேற்று நடந்தது போல உள்ளது.

பதிவுக்கு நன்றி ஏராளன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.

நானும் ஒருவனாக இதற்குள் அகப்பட்டு சைக்கிளையும் எடுக்காமல் சிதறி ஓடி அடுத்தநாள் எதுவித சேதாரமும் இல்லாமல் சைக்கிளை மீட்டுவந்தேன்.

50 ஆண்டுகள் ஆனாலும் நேற்று நடந்தது போல உள்ளது.

பதிவுக்கு நன்றி ஏராளன்.

என்னுடைய அப்புவும்(அம்மப்பா) தப்பி வந்த கதைகளை எங்களுக்கு சொல்கிறவர்.

  • கருத்துக்கள உறவுகள்

9 பேரில் தொடங்கிய அரச பயங்கரவாத படுகொலைகள் பல லட்சத்தை தாண்டிவிட்டது  அனால் இன்றும் ஜனநாயக அரசு என சொல்லி கொண்டு திரிகின்றனர் நம்மவர் சிலரும்,சர்வதேசமும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

9 பேரில் தொடங்கிய அரச பயங்கரவாத படுகொலைகள் பல லட்சத்தை தாண்டிவிட்டது  அனால் இன்றும் ஜனநாயக அரசு என சொல்லி கொண்டு திரிகின்றனர் நம்மவர் சிலரும்,சர்வதேசமும்

தேர்தல் நடந்தால் அது ஜனநாயக அரசுதானே? பொதுவாக தேர்தல் நடந்தால் ஜனநாயக அரசு என உலக நாடுகள் கருதுகின்றன போலும்.

ஆனால் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு(?) என்று கொண்டுவரப்படட மாகாண சபை மட்டும் நடக்காது.  

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் "அதிகார பரவலாக்கள் கொடுக்க வேணும் ஆனால் கொடுக்க கூடாது" என்ற கொள்கையை சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்களும்,சர்வதேச கொள்கை வகுப்பாளர்களும்,அயல்நாட்டு கொள்கை வகுப்பாளரும் தமது கொள்கையாக வைத்திருக்கின்றனர் போலும்...
ஒரு இரவில் தீர்க்க கூடிய பிரச்சனையை  75 வருடங்களுக்கு  எடுத்து செல்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

நான் நினைக்கிறேன் "அதிகார பரவலாக்கள் கொடுக்க வேணும் ஆனால் கொடுக்க கூடாது" என்ற கொள்கையை சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்களும்,சர்வதேச கொள்கை வகுப்பாளர்களும்,அயல்நாட்டு கொள்கை வகுப்பாளரும் தமது கொள்கையாக வைத்திருக்கின்றனர் போலும்...
ஒரு இரவில் தீர்க்க கூடிய பிரச்சனையை  75 வருடங்களுக்கு  எடுத்து செல்கின்றனர்

இதெல்லாம் அரசியலில் ஒரு அங்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்ட்ங்கள் அபிலாஷிகள் இருக்கும். அதட்கு எப்படியான வழிகள் என்பதை யோசிக்கும்போது அதை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.

எனவே இலங்கையாக இருக்கட்டும், உலக நாடுகளாக இருக்கட்டும், அயல் நாடாக இருக்கட்டும் அவர்களுக்கு இலங்கை பிரச்சினை தேவைப்படுகின்றது.

எனவே என்னை பொறுத்த வரைக்கும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படாது என்பது எனது நம்பிக்கை. ஏன் என்றால் உலக நடப்புக்கள் அப்படிதான் இருக்கின்றன. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.