Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை தீவிரம் - பிரிட்டனுடன் ரணில் பேச்சுவார்த்தை

Published By: RAJEEBAN   17 JAN, 2024 | 10:48 AM

image
 

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக  இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட  பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

அணிசேரா மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உகன்டா செல்லவுள்ளார், 19வது அணிசேரா மாநாட்டிற்காக 120 நாடுகளின் தலைவர்கள் உகன்டாவில் கூடியுள்ளனர்.

இந்த மாநாட்டினை பயன்படுத்தி ஆபிரிக்க தலைவர்கள் உட்பட பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார்.

மார்ச் மாத அமர்வில்  இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக பொறுப்புக்கூறும் திட்டத்தினை முன்வைத்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானத்தினை முன்வைக்கும் நாடுகளில் பிரதானமானதான பிரிட்டனுடன் இலங்கை ஜெனீவா அமர்வு  குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு கப்பல்களை அனுப்புவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் விடுத்த வேண்டுகோள்களை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஜெனீவா அமர்விற்கு முன்னர் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே  ஜனாதிபதி கப்பலை அனுப்ப இணங்கினார் எனதெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174127

  • கருத்துக்கள உறவுகள்

ஏறக்குறைய 13 வருடங்களுக்கு மேலாக இது பற்றி பேசப்படுகின்றது. ஐக்கிய நாடுகளால் எதாவது செய்ய முடிந்ததா? இனியும் அதுதான் தொடரப்போகின்றது. இலங்கையும் இவர்களை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Cruso said:

ஏறக்குறைய 13 வருடங்களுக்கு மேலாக இது பற்றி பேசப்படுகின்றது. ஐக்கிய நாடுகளால் எதாவது செய்ய முடிந்ததா? இனியும் அதுதான் தொடரப்போகின்றது. இலங்கையும் இவர்களை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. 

நீங்கள் சொன்னது உண்மை தான்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா அமர்வுக்கு இம்முறை இலங்கையிலிருந்து குழு செல்லாது; வதிவிடப்பிரதிநிதியே விடயங்களை கையாள்வார்

24 FEB, 2024 | 05:30 PM
image

ஆர்.ராம் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலோ அல்லது வேறெந்த உத்தியோகபூர்வமான அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரோ இம்முறை செல்லாதென அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் ஏற்பட்டள்ள மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்கவே விடயங்களை கையாளவுள்ளார்.

குறிப்பாக, இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அவதானிப்பு அறிக்கை மார்ச் மாதம் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அதனையடுத்து, ஜெனிவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க அந்த வாய்மொழி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக பதிலளிப்பை வழங்கவுள்ளார்.

அத்துடன், பல்வேறுபட்ட பக்கநிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இதேநேரம், அவருக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வெளிவிவகார அமைச்சு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177211

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.