Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!

adminJanuary 22, 2024
Shooting.jpg?fit=778%2C464&ssl=1

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01.24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

https://globaltamilnews.net/2024/199996/

  • கருத்துக்கள உறவுகள்
22 JAN, 2024 | 09:12 PM
image

பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸ் குழுக்கள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

https://www.virakesari.lk/article/174568

  • கருத்துக்கள உறவுகள்

சமன் பிரசன்ன இவர் பாதாள கோஷ்டி நடத்துனர், தவிர ஒரு பெயர் தெரியாத சிங்கள அரசியல் கட்சியின் தலைவர் (அப்பே ஜன பல பக்க்ஷய) . சில வருடங்களுக்கு முன்னர் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியும் போட்டவர். ஒரு சில கொலை வழக்குகள் இன்னும் அப்படியே நிலுவையில் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

சமன் பிரசன்ன இவர் பாதாள கோஷ்டி நடத்துனர், தவிர ஒரு பெயர் தெரியாத சிங்கள அரசியல் கட்சியின் தலைவர் (அப்பே ஜன பல பக்க்ஷய) . சில வருடங்களுக்கு முன்னர் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியும் போட்டவர். ஒரு சில கொலை வழக்குகள் இன்னும் அப்படியே நிலுவையில் இருக்கிறது. 

அப்பட்டமான மனித உரிமை மீறல்   ...சோசலிச ஜனநாயக குடியரசில் போதை பொருள் கடத்துவது குற்றமா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

சமன் பிரசன்ன இவர் பாதாள கோஷ்டி நடத்துனர், தவிர ஒரு பெயர் தெரியாத சிங்கள அரசியல் கட்சியின் தலைவர் (அப்பே ஜன பல பக்க்ஷய) . சில வருடங்களுக்கு முன்னர் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியும் போட்டவர். ஒரு சில கொலை வழக்குகள் இன்னும் அப்படியே நிலுவையில் இருக்கிறது. 

இவர் அத்துரலியே ரத்தன தேராவின் கட்சி தலைவராக இருந்தார். கட்சிக்குள்ளும் நிறைய பிரச்சினைகள். தேசிய பட்டியல் மூலம் இவர்களுக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. அதனால்தான் நிறைய பிரச்சினைகள். இவர்க்கு எதிரான பாதாள கோஸ்ட்டி, போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான வழக்குக்கு செல்லும் வழியில்தான் கொல்லப்படடார். 

  • கருத்துக்கள உறவுகள்

 

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : பொலிஸாரால் வெளிப்படுத்தப்பட்ட மேலதிக தகவல்கள்!

Published By: DIGITAL DESK 3   23 JAN, 2024 | 11:24 AM

image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை நுழைவாயிலுக்கு அருகில்  எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட  ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பெலியத்த பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்தச்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸார்  தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள்  வெள்ளை நிற  டிபென்டரில் சென்று கொண்டிருந்தபோது காலை உணவுக்காக டிபென்டர் நிறுத்தப்பட்டபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.     

பச்சை நிற வாகனத்தில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.   

இந்த துப்பாக்கிச் சூட்டில் சமன் பெரேரா உட்பட நால்வர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சமன் பெரேரா,  கொலைச் சம்பவம் ஒன்று  தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா அம்பலாங்கொடையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராவார்.  

ரி-56 ரக துப்பாக்கியே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/174592

 

  • கருத்துக்கள உறவுகள்

பெலியத்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம்: மேலதிக தகவல்கள் பொலிஸாரினால் அறிவிப்பு

நேற்று இடம்பெற்ற பெலியத்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலையில் இடம்பெற்ற மூவர் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக டிபென்டரில் பயணித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பெலியத்த வெளியேறும் இடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய அவர்கள், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக வீதியோரம் நின்றிருந்தபோது, பிராடோ ரக ஜீப்பில் வந்த கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

டிஃபென்டரின் சாரதி தனது இருக்கையிலேயே இறந்துவிட்டார், ஏனைய நான்கு பயணிகள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடினார்கள், அங்கு அவர்கள் சந்தேக நபர்களால் துரத்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ‘அபே ஜனபல பக்ஷய’ தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதுடன், 2022 தங்காலை கொலைச் சந்தேக நபர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவார்.

மறைந்த சமன் பெரேராவின் வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தகவலின் பேரில் நேற்று பொலிஸார் சோதனையிட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

https://thinakkural.lk/article/289068

  • கருத்துக்கள உறவுகள்

பெலியத்தவில் ஐவர் கொலை : மாத்தறையில் ஒருவர் கைது!

Published By: DIGITAL DESK 3  24 JAN, 2024 | 01:49 PM

image

பெலியத்தவில் ஐவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு  உடந்தையாக இருந்தார் என்ற  சந்தேகத்தில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் வைத்து அவர்  இன்று புதன்கிழமை (24)  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் சாரதி எனவும் இவரே  இந்தத்  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/174692

  • கருத்துக்கள உறவுகள்

பெலியத்தையில் ஐவர் படுகொலை : மேலும் மூவர் கைது

31 JAN, 2024 | 11:29 AM
image

பெலியத்தையில் ஐவரின் படுகொலைகளுடன்  தொடர்புடையவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மூவர் மாத்தறை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் பூஸா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம பொலிஸாரால் இரண்டு சந்தேக நபர்களும் மாத்தறையில்  ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை மறைத்தமை , பண உதவி செய்தமை போன்ற செயற்பாடுகளில் இடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175200

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.