Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: PRIYATHARSHAN   25 JAN, 2024 | 01:45 PM

image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

 ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் தள்ளுவதுடன் தெளிவற்ற மற்றும் மிகையான கடுமையான சட்டங்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

juli.JPG

  • கருத்துக்கள உறவுகள்



நேற்று (24) இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.

இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். 

அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2,000 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

தற்போது நாங்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும். 

அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும். 

ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம். 

இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=183185

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் ஒரு அரகல தனக்கு எதிராக வரக்கூடாது என்பதில் ரணில் அதீத கவனம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை  - ஒன்லைன் என்பதை அழகுதமிழில் சொன்னால் எப்படிப் புரியும்?

இந்த சட்டமூலத்தால் சமூகவலைத் தளங்களில் பதியப்படும் விடயங்களை இறுக்குவார்கள். நீக்கவும் உத்தரவு கொடுப்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இங்குள்ள ரசிய தூதுவர் கடும் கணடனம் வெளியிட்டிருக்கிறார்.

எப்படி இருந்தாலும் இலங்கை இந்த சடட மூலத்தை நிச்சயமாக நடைமுறை படுத்த வேண்டியிருக்கும். இல்லாவிட்ட்தால் தேர்தலில் இது அவர்களுக்கு பாதகமாக முடியும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் - கனடா கவலை

27 JAN, 2024 | 05:47 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். 

இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

https://www.virakesari.lk/article/174934

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.