Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவின் விளக்கமறியலில் நீடிப்பு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301022

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Published By: VISHNU

20 MAY, 2024 | 06:33 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184075

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

03 JUN, 2024 | 03:26 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (3) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185209

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

14 JUN, 2024 | 06:28 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186096

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 02:39, ஈழப்பிரியன் said:

அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.

 

On 2/3/2024 at 01:56, ஏராளன் said:

அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர்  தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.

மருந்தேதும் ஏற்றாமலேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.  பலரை கொல்லும்போது மரண பயம் தெரிவதில்லை, அப்பாவிகளை சிறைக்கு அனுப்பும்போது அவர்களின் நோய்கள், கவலைகள், நிஞாயங்கள் புரிவதில்லை. தமக்கென்று வரும்போது அத்தனையும் வந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு. என்ன...... இத்தனை வாதிப்பிரதிவாதங்கள் நடந்து அவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாளைக்கு எதுவும் நடவாததுபோல் நாட்டுக்காக சிறை சென்ற வீரர்களாக வரவேற்கப்பட்டு இன்னொரு அமைச்சு கொடுக்கப்பட்டு இன்று இழந்ததை நாளை மீட்டுக்கொள்வார்கள். நாட்டிலே அனர்த்தம், தட்டுப்பாடு, போராட்டம் இப்படி ஏதும் நடந்தாலே அரசியல் வாதிகளின் வங்கிக் கணக்குகளில் பணமழை பொழியும். இவருக்குப்பின்னால் மறைந்திருக்கும் முதலைகள் அகப்படுவார்களா அல்லது வெறும் நாடகந்தானா? இல்லை ..... இப்படி எத்தனையோ கொலை வழக்குகள் பிரபல்யமாக நடந்து தண்டனை அறிவித்து இன்று பதவி சுகத்தோடு இருக்கிறார்கள். வெறும்  காலம் சக்தி பண வாத விரையம்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

28 JUN, 2024 | 06:08 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 12  ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (28) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் சந்தேக நபரான மருந்துகள் விநியோக பிரிவின் அதிகாரியொருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/187206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

02 JUL, 2024 | 04:33 PM
image
 

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நீக்கி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற  தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா மற்றும் பிணை தொடர்பான தீர்ப்பு ஆகியன தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

https://www.virakesari.lk/article/187500

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு இடைக்கால தடை

Published By: DIGITAL DESK 3    05 JUL, 2024 | 11:49 AM

image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 93.125 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டில் 3 மாதங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை (IVIG) கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில், ஜூன் 19ஆம் திகதி, ரம்புக்வெல்லவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/187735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

12 JUL, 2024 | 05:46 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (12) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (12) ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/188323

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

25 JUL, 2024 | 05:58 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரை ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (25) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/189378

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்து விளக்கமறியல் - இருவருக்கு பிணை

Published By: DIGITAL DESK 7   08 AUG, 2024 | 05:47 PM

image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை (08) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/190598

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

22 AUG, 2024 | 04:27 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (22) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/191723

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

29 AUG, 2024 | 05:17 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/192330

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு

Published By: DIGITAL DESK 3   04 SEP, 2024 | 02:37 PM

image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம், இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உரிய தீர்மானத்தை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 03ஆம் திகதி வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/192831

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

11 SEP, 2024 | 05:28 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனு கடந்த 7 மாத காலமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (11) இந்த பிணை உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/193430

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய

12 SEP, 2024 | 07:57 PM
image

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் தொடர்பாகவே அவர் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193527

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.