Jump to content

ஒலிம்பிக் விளை­யாட்டு விழா 2024 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் : வியாழனன்று அறிமுகமாகிறது

05 FEB, 2024 | 10:26 AM
image

(ஆர்.சேது­ராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இப்­போட்­டி­க­ளுக்­கான மற்­றொரு தொகுதி ரிக்கெற் விற்­ப­னையும் அன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

2024 கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா எதிர்­வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திக­தி ­வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

32 வகை­யான விளை­யாட்­டு­களில் 329 போட்டி நிகழ்ச்­சிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இப்­போட்­டி­களில் வழங்­கப்­ப­ட­வுள்ள பதக்­கங்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இப்­போட்­டி­க­ளுக்­கான  ரிக்கெற் விற்­பனை கடந்த வருடம் ஆரம்­ப­மா­கி­யது. ஏற்­கெ­னவே 7 மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மான ரிக்­கெற்­றுகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. 

இந்­நி­லையில், மற்­றொரு தொகுதி டிக்கெட் விற்­பனை எதிர்­வரும் 8 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

https://tickets.paris2024.org எனும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் ரிக்கெற் விற்­ப­னைக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தின் ஊடாக ரிக்­கெற்­று­களை கொள்­வ­னவு செய்­யலாம்.

எதிர்­வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள பரா­ ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான ரிக்­கெற்­று­களும் மேற்­படி இணை­யத்தில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரிஸ்2024  ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான 45 சத­வீ­த­மான ரிக்­கெற்­று­களின் விலை தலா 100 யூரோ­வுக்கு குறை­வாக இருக்கும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளம் தவிர்ந்த வேறு மூலங்கள் ஊடாக ரிக்கெற் கொள்­வ­னவு செய்­ய­முற்­ப­டும்­போது, ரிக்கெற் விநி­யோ­கிக்­கப்­ப­டாமை, அத்­த­கைய ரிக்­கெற்­று­களை வாங்­கி­ய­வர்கள் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்­பாட்­டா­ளர்­களால் விளை­யாட்டு அரங்­கு­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டாமை போன்ற ஆபத்­து­களை எதிர்­கொள்ள நேரி­டலாம் என ஏற்­பாட்­டா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

அத்­துடன், உத்­தி­யோ­க­பூர்வ தளங்­க­ளுக்கு வெளியில் ரிக்­கெற்­று­களை வாங்­கு­வதும் மீள் விற்பனை செய்வதும் பிரெஞ்சு சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்கெற்றுகளை வாங்கியோர் அவற்றை மீள்விற்பனை செய்வதற்கான உத்தியோகபூர்வ தளமொன்று இளவேனிற் காலத்தில் (மார்ச் இறுதியில்) திறக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/175582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனும் சீன‌னும் 

நிறைய‌ ப‌த‌க்க‌ங்க‌ளை வெல்வார்க‌ள்............

இந்தியா ஹா ஹா😁...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம் : ஈபிள் கோபுர உலோகத் துண்டும் உள்ளடக்கம்

09 FEB, 2024 | 10:27 AM
image

(ஆர்.சேதுராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் நேற்று (08) அறிமுகம் செய்யப்பட்டன.

பாரிஸ் நகரின் உலகப் பிரசித்திபெற்ற ஈபிள் கோபுரத்தின் அசல்; துண்டொன்றும்  இப்பதக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் 2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்  எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.  ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

இவ்விரு விளையாட்டு விழாக்களிலும் மொத்தமாக 5,084 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.  

இப்பதக்கங்களின் மத்தியில் 6 கோண வடிவிலான இரும்புத் துண்டொன்றும் பதிக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்திலிருந்து அகற்றப்பட்ட அசல் இரும்புத் துண்டுகள் மூலம் ஒலிம்பிக் பதக்கத்தின் அறுகோண வடிவிலான பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது என பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

'பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு  1899 ஆம் ஆண்டின் ஈபிள் கோபுரத்தின் துண்டொன்றையும் வழங்க  நாம் விரும்பினோம்' என பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவே கூறினார்.

 பாரிஸை தளமாகக் கொண்ட ஆபரண வடிவமைப்பு நிறுவமான சவ்மெட் இப்பதக்கங்களை வடிவமைத்துள்ளது. நாணயங்களைத்  தயாரிக்கும் அரச நிறுவனமான 'மின்னே டி பரிஸ்' இப்பதக்கங்களைத் தயாரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175946

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில் பாவோ நூமி வென்ற 5 தங்கங்கள் பாரிஸில் காட்சிப்படுத்தப்படும்

28 FEB, 2024 | 05:19 PM
image

(நெவில் அன்தனி)

ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் அதிசிறந்த ஒலிம்பிக் சம்பியன்களில் ஒருவரான பாரோ நுமியினால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரெஞ்ச் தலைநகரில் வென்றெடுக்கப்பட்ட ஐந்து தங்கப் பதக்கங்கள் முதல் தடவையாக பாரிஸ் நகருக்கு அடுத்த மாதம் கொண்டு செல்லப்படவுள்ளது.

'பறக்கும் பின்லாந்து வீரர்', 'பின்லாந்து ஆவி', 'பின்லாந்தின் ஆச்சரியத்தக்க ஓட்ட வீரர்' என்று அழைக்கப்பட்டவர் பாவோ நூமி.

Paavo_Nurmi_1924_olympic_race_participat

1924ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மத்திய மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் 5 தங்கப் பதங்களை வென்றதன் மூலம் பாவோ நூமி முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவர் வென்ற 5 தங்கப் பதக்கங்களில் 3 பதக்கங்கள் தனிநபர் நிகழ்ச்சிகளிலும் 2 பதக்கங்கள் அணிநிலை நிகழ்ச்சிகளிலும் பெறப்பட்டவையாகும்.

1500 மீட்டர், 3000 மீட்டர், தனிநபர் நகர்வல ஓட்டப் போட்டி ஆகியவற்றில் அவர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.

அணி நிலை நகர்வலப் போட்டி மற்றும் 3000 மீட்டர் அணிநிலை போட்டி ஆகியவற்றிலும் அணிக்கான தங்கப் பதக்கங்களை பாவோ நூமி வென்றிருந்தார்.

pn_Pariisi-1924_maastojuoksu.jpg

பாரிஸ் 1924 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பாவோ நூமி வென்றெடுத்த 5 தங்கப் பதக்கங்கள் இன்றும் ஒரே ஒலிம்பிக் அத்தியாயத்தில் மெய்வல்லுநர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிக தங்கப் பதக்கங்களாக இருக்கின்றன.

நூமி குடும்பத்தாரின் பரிவான பெருந்தன்மையின் பலனாக 1924இல் நூமியினால் வெல்லப்பட்ட அந்த ஐந்து தங்கப் பதக்கங்களும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸின் மையத்தில் செய்ன் பகுதியின் இடதுகரையில் உள்ள மொனாய் டி பாரிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

paavo_nurmi_s_5_golds_1924_paris_olympic

ஒலிம்பிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக்கில் வென்றெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். அதில் நூமியின் பதக்கங்களும் அடங்குகின்றன.

நவீன ஒலிம்பிக்கின் பரிணாம வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி பல்வேறு வடிவங்களைக் கொண்ட ஒலிம்பிக் பதக்கங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்தக் கண்காட்சியை ஊடகத்துறையினர் மார்ச் 26ஆம் திகதி பார்வையிட அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் மார்ச் 27இலிருந்து செப்டெம்பர் 22 வரை பொதுமக்களுக்கு கண்காட்சி திறக்கப்பட்டிருக்கும்.

pn_1924_kotiinpaluujuhla-Pallokent_ll_.j

https://www.virakesari.lk/article/177520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட கணினியும் யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது

Published By: VISHNU    29 FEB, 2024 | 08:04 PM

image

(நெவில் அன்தனி)

பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்களுடன் பாரிஸ் சிட்டி ஹோல் பொறியியலாளர் ஒருவருக்கு சொந்தமான கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளைக் கொண்ட பை திருடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

pic.jpg

பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 2024 ஜூலை 26ஆம் திகதியிலிருந்து முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் இந்த கணினியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கெயா டு நோர்ட் என்ற ரயில் நிலையத்தில் வைத்து இந்த கணினியும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது.

க்ரெய்ல் நகருக்கு பயணிப்பதற்காக கெயா டு நோர்ட் ரயில் நிலையத்தில் 18ஆவது மேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக கணினி உரிமையாளரான பாரிஸ் சிட்டி ஹோல் ஊழியர் முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவரம் கடந்த திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.

பையின் உரிமையாளர் ரயிலில் தனது ஆசனத்துக்கு மேலாக உள்ள பொதிகள் வைக்கும் பகுதியில் தனது பையை வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பை காணாமல் போயிருந்ததை அவர் கவனித்ததாக பொலிசாரிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு பொறியியலாளர் அளித்த வாக்குமூலத்தில், தனது பணி கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. குற்றிகளில் மாநகர பொலிஸார் தயாரித்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான முக்கியமான தகவல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரிஸ் சிட்டி ஹால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பிரெஞ்சு தலைநகரில் இடம்பெறும் பல திருட்டுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. எனினும், நவீன யுகத்தின் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பாரிஸ் அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

இவ் விடயம் விளையாட்டு விழாவின் பாதுகாப்பில் மற்றொரு சிக்கலை உருவாக்கிவிட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போதிலும் கால்பந்தாட்டம் மற்றும் றக்பி ஆகிய விளையாட்டுக்களின் முதலாம் கட்டப் போட்டிகள் ஜூலை 24ஆம் திகதி ஆரம்பமாகும்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது 2,000 மாநகர பொலிஸாரை பணியில் நிறுத்த பாரிஸ் ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. அவர்கள் 35,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து 10,000 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா பாரிஸிலும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/177627

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா புக‌ழும் அமெரிக்க‌னுக்கே😁...............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: - சர்வதேச ஒலிம்பிக்குழு 

Published By: SETHU    12 MAR, 2024 | 10:03 AM

image

(ஆர்.சேதுராமன்)

காஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு  தெரிவித்துள்ளது.

உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் அவ்விரு நாடுகளின் சார்பாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. அவர்கள் நடுநிலை போட்டியாளர்களாகவே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸா யுத்தம் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஒலிம்பிக்கில் தடை விதிக்குமாறு பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரான்ஸின் இடதுசாரி எம்.பிகள் சிலரும் ஐ.ஓ.சி.யை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்தவாரம்  பாரிஸுக்கு விஜயம் மேற்கொண்ட, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி.) இணைப்புக் குழுத் தலைவர் பியர் ஒலிவியே பெக்கர்ஸ் வியூஜன்ட்டிடம், காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுமா என நேற்றுமுன்தினம் கேட்கப்பட்டது.

அப்போது, அவர் பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் பின்னர் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தனித்துவமானைவ.  ரஷ்யாவும், ரஷ்ய ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் சாசனத்தின் அத்தியாவசியமான பகுதிகளை பலவீனப்படுத்தின.

பலஸ்தீன ஒலிம்பிக் குழு அல்லது இஸ்ரேலிய குழு விடயத்தில் இந்நிலைமை இல்லை, அவை அமைதியாக ஒருங்கிருக்கின்றன' என அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடைந்து 4 நாட்களின் பின், அதாவது 2022 குளிர்கால பராலிம்பிக் ஆரம்பமாகுவதற்கு 9 நாட்களுக்கு முன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால் ஒலிம்பிக் கால போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக ஐ.ஓ.சி தலைவர் தோமஸ் பாக் கூறியிருந்தார்.

ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களைச் சேர்ந்த பிராந்திய விளையாட்டு அமைப்புகளையும் தனது அங்கத்தவர்களாக ரஷ்ய ஒலிம்பிக்குழு உள்ளடக்கியதையடுத்து, ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் ஐ.ஓ.சி. கடந்த ஒக்டோபர் மாதம்  தடை விதித்தது.

https://www.virakesari.lk/article/178492

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளின் படையினரைக் கோரும் பிரான்ஸ்

Published By: SETHU   01 APR, 2024 | 11:45 AM

image
 

(ஆர்.சேது­ராமன்)

பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பாது­காப்பு அதி­கா­ரி­களை அனுப்­பு­மாறு தனது நட்பு நாடு­க­ளிடம் பிரான்ஸ் கோரி­யுள்­ளது. 

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக 46 நாடு­க­ளி­ட­மி­ருந்து 2,185 பொலி­ஸாரை அனுப்­பு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது என பிரெஞ்சு உள்­துறை அமைச்சு அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

கடந்த ஜன­வரி மாதம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­கவும் 35 நாடுகள் சாத­க­மாக பதி­ல­ளித்­துள்­ள­தா­கவும் பிரெஞ்சு அர­சாங்க வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை­பெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்­டிகள் மற்றும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8 வரை நடை­பெறும் பரா­லிம்பிக் போட்­டி­க­ளின்­போது தினந்­தோறும் 45,000 பிரெஞ்சு பொலி­ஸாரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்­ட­மிட்­டுள்­ளது. 20,000 தனியார் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், 15,000 படை­யி­னரையும் சேவையில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

எனினும், முக்­கிய சர்­வ­தேச விளை­யாட்டு விழாக்­களில் வெளி­நாட்டுப் படை­யி­னரை ஈடு­ப­டுத்­து­வது வழக்­க­மா­னது.

2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­காக கட்­டா­ருக்கு 200 பொலிஸாரை பிரான்ஸ் அனுப்­பி­யி­ருந்­தது. கடந்த வருட உலகக் கிண்ண றக்பி போட்டிகளின்போது  ஐரோப்பிய நாடுகளிலிருந்து 160 படையினரை பிரான்ஸ் வரவேற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/180117

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் இனி பரிசுத்தொகை: உலக தடகள அமைப்பு அறிவிப்பு!

உலக தடகள விளையாட்டு அமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பரிசுத் தொகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி ரீதியாக வெகுமதி அளிக்கப்பட உள்ளது. பாரிஸில் நடைபெறும் 48 தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு $50,000 (46,000 யூரோக்கள்) வழங்கப்படும்.

அதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக தடகளப் போட்டிகளுக்கும் ஒட்டுமொத்த தடகள விளையாட்டுக்கும் ஒரு முக்கிய தருணமாகும், இது விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதிலும் எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் மூன்று வீரர்களுக்கும் வெகுமதி அளிக்க உறுதியாக இருக்கிறோம். பாரிஸில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கப் பதக்க நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கும் நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/298777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

16 APR, 2024 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது.

இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது.

கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது.

1_FLAME.jpg

பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.

2_FLAME.jpg

3_FLAME.jpg

2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார்.

4_joyce_didonato...jpg

ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது.

ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார்.

கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர்.

5_laure_manaudou_torch_bearer_france.png

ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும்.

https://www.virakesari.lk/article/181219

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ஒலிம்பிக் போட்டி யாழில் ந‌ட‌த்தும் ஜ‌டியா இருக்கா........................

முன்பு ஒரு முறை யாழில் ந‌ட‌த்தின‌வை......................

அடுத்த‌ ஒலிம்பிக்கில் கிரிக்கேட்டும் சேர்க்க‌ ப‌டும் என்று எங்கையோ வாசித்த‌ ஞாபக‌ம்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி பெறாவிட்டாலும் பலஸ்தீன போட்டியாளர்கள் பலர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபற்ற அழைக்கப்படுவர் - சர்வதேச ஒலிம்பிக்குழு தலைவர்

Published By: DIGITAL DESK 7   29 APR, 2024 | 03:29 PM

image

(ஆர்.சேது­ராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்கு பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் தகுதி பெறா­விட்­டாலும், அவர்­களில் சில­ருக்கு போட்­டி­களில் பங்­கு­பற்ற வரு­மாறு சர்­வ­தேச ஒலிம்பிக் குழு அழைப்பு விடுக்­க­வுள்­ளது என அதன் தலைவர் தோமஸ் பெச் தெரி­வித்­துள்ளார்.

ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்­வி­யொன்றில் சர்­வ­தேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச் இது தொடர்­பாக கூறு­கையில், ஜூலை 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக பல்­வேறு விளை­யாட்­டுக்­களின் தகுதி காண் போட்­டிகள் நடை­பெற்று வரு­கின்­றன எனக் கூறினார்.

“எனினும், பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் எவரும் போட்­டி­களில் பங்­கு­பற்­று­தற்கு தகுதி பெறா­விட்­டாலும் தகு­தி­யான போட்­டி­யா­ளர்கள் இல்­லாத ஏனைய தேசிய ஒலிம்பிக் குழுக்­களைப் போன்று பலஸ்­தீ­னமும் அழைப்­புகள் மூலம் பய­ன­டை­வதில் நாம் தெளி­வாக உறு­தி­பூண்­டுள்ளோம்” என தோமஸ் பெச் கூறினார்.

6 முதல் 8 பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் ஒலிம்­பிக்கில் பங்­கு­பற்­றுவர் என தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

காஸா மோதல் ஆரம்­ப­மான முதல் நாளி­லி­ருந்து,  வீர­ வீ­ராங்­க­னைகள் தகு­திகாண் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கும் பயிற்­சி­களை தொடர்­வ­தற்கும் சர்­வ­தேச ஒலிம்பிக் குழு பல்­வேறு வழி­களில் உத­வி­யுள்­ளது எனவும் அவர் கூறினார்.

ஒலிம்­பிக்கில் உல­க­ளா­விய பங்­கு­பற்­று­தலை ஊக்­கு­விப்­ப­தற்­காக, தகு­தி­யான போட்­டி­யா­ளர்கள் போதி­ய­ளவில் இல்­லாத தேசிய ஒலிம்பிக் சங்­கங்­களைச் சேர்ந்த போட்­டி­யா­ளர்­க­ளுக்கு சர்­வ­தேச ஒலிம்­பிக்­குழு விசேட அழைப்பு விடுப்­பது வழக்கம். சர்­வ­தேச ஒலிம்­பிக்­குழு, தேசிய ஒலிம்பிக் சங்­கங்கள், சர்­வ­தேச விளை­யாட்டுச் சம்­மே­ள­னங்­களின் பிர­தி­நி­திகள் அங்கம் வகிக்கும் 'முத்­த­ரப்பு குழு­வினால்' விசேட அழைப்­புக்­கு­ரிய போட்­டி­யா­ளர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர்.

 1976 ஆம் ஆண்டு பலஸ்­தீன தேசிய ஒலிம்பிக் குழு உரு­வாக்­கப்­பட்­டது. 1996 அட்­லாண்டா ஒலிம்­பிக்கில் முதல் தட­வை­யாக பலஸ்­தீனம் சார்பில் போட்­டி­யாளர் ஒருவர் பங்­கு­பற்­றினார். அதி­க­பட்­ச­மாக  ரியோ 2016 ஒலிம்­பிக்கில் 2 பெண்கள் உட்­பட 6 பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றினர். 2021 இல் நடை­பெற்ற டோக்­கியோ 2020 ஒலிம்­பிக்கில் 2 பெண்கள் உட்­பட 5 பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றியமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வேளை, உக்ரேன் மீதான படை­யெ­டுப்பு தொடர்பில் ரஷ்­யாவை ஒரு­வி­த­மா­கவும், காஸா யுத்தம் தொடர்­பாக இஸ்­ரேலை வேறு­வி­த­மா­கவும் சர்­வ­தேச ஒலிம்­பிக்­குழு கையாள்­கி­றது என்ற கருத்தை தோமஸ் பெச் நிரா­க­ரித்தார்.

https://www.virakesari.lk/article/182243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ மாத‌ம்

ஒரே விளையாட்டு தான்......................கிரிக்கேட் உல‌க‌ கோப்பை ஒலிம்பிக்...............................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128 ஆண்டுகள்…பழமையான கப்பலில்…வந்தது ஒலிம்பிக் தீபம்

olicmpic-1.jpg

பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெற்கு துறைமுக நகரமான மார்செய்லியில் ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது.

கிரீஸிலிருந்து 12 நாள் கடல்ப் பயணத்திற்குப் பின்னர் இந்த ஒலிப்பிக் சுடல் வந்தடைந்தது. 128 ஆண்டுகள் பழமையான மூன்று மாஸ்ட் பாய்மரக் கப்பலான Belem இல் ஒலிம்பிக் சுடர் கொண்டு வரப்பட்டது. 1000 படகுகள் ஒலிம்பிக் சுடர் கொண்டுவரப்பட்ட கப்பலை வரவேற்றன.

ஒலிப்பிக் சுடரை பிரான்சின் 2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவில் 50 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் சாம்பியனான ஃப்ளோரன்ட் மானாடோ தரையிறக்கினார்.

மார்சேயில் பிறந்த பிரெஞ்சு ராப்பர் ஜூல், பாரீஸ் 2024 ஒலிம்பிக் கொப்பரையை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை உள்ளடக்கிய 150,000 மக்கள் முன்னிலையில் ஏற்றி வைப்பதற்கு முன்பு, ரியோ 2016 இல் 400 மீட்டர் சாம்பியனான பாராலிம்பிக் தடகள தடகள வீரர் நான்டெனின் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒலிம்பிக் சுடர் ரிலே வியாழன் அன்று மத்தியதரைக் கடலோர நகரத்திலிருந்து புறப்பட்டு, ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழாவிற்கு பாரிஸ் வருவதற்கு முன்பு பிரான்ஸ் மற்றும் ஆறு வெளிநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவுள்ளது.

6,000 சட்ட அமலாக்க அதிகாரிகள், நாய் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு படை துப்பாக்கி சுடும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/301212

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா

10 MAY, 2024 | 01:11 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என்கிறார் பாரிஸில் வாழ்ந்துவரும் பேக்கரி உரிமையாளரும் புலம்பெயர் இலங்கைத் தமிழருமான தர்ஷன் செல்வராஜா.

4.jpg

பிரான்ஸ் தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கு தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 11,000 பிரான்ஸ் பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.

ஆயிரக்கணக்கானவர்களில் தானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்ட்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார்.

3.jpg

'என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் முதலாவது இலங்கையராக நான் இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். 

7.jpg

என்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் (அமேலி ஒளடியா கெஸ்டீரா) உட்பட தெரிவுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார் தர்ஷன் செல்வராஜா.

'பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை எப்போது ஏந்திச் செல்வேன் என இன்னும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது பிரான்ஸில் வலம்வரும் ஒலிம்பிக் சுடர் ஜூலை மாதம் பாரிஸுக்கு வருகை தந்த பின்னர் எனக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் கிடைக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/183147

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.