Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் - இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   09 FEB, 2024 | 09:13 PM

image

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல்,  தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். 

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும்  7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை  “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும்,  அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள்,  காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.   

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம்  என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.  

 

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும்  கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். 

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

https://www.virakesari.lk/article/175994

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். 

அவுஸ்ரேலியா இந்து சமுத்திர நாடு என நினைத்து ஐயா பேசுகிறார் போல தெரிகிறது....
சொந்த நாட்டில் முட்டை உற்பத்தி பண்ண தெரிய்வில்லை இதில சர்வதேச தூர நோக்கு..... பிராந்திய செல்வாக்கு....சொந்த நாட்டு மக்களிடம் செல்வாக்கு இழந்த நீங்கள் எல்லாம் சர்வதேசிய அரசியல் பேசுறீயள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.  

அப்ப விரைவில் சுசிலா அம்மாவே நடந்துவந்து யாழில் பாட்டுப்பாடுவா,,,,எஞயாய்.. யாழ்ப்பாணீஸ்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அவுஸ்ரேலியா இந்து சமுத்திர நாடு என நினைத்து ஐயா பேசுகிறார் போல தெரிகிறது....
சொந்த நாட்டில் முட்டை உற்பத்தி பண்ண தெரிய்வில்லை இதில சர்வதேச தூர நோக்கு..... பிராந்திய செல்வாக்கு....சொந்த நாட்டு மக்களிடம் செல்வாக்கு இழந்த நீங்கள் எல்லாம் சர்வதேசிய அரசியல் பேசுறீயள்

முடடையை பற்றி பேசுகிறீர்கள். பக்கத்துக்கு ஊர்ல அது மலிவா கிடைக்கும்போது எதுக்கு பண்ணைகளை வைத்து சிரமப்படுவான். பால் மலிவாக கிடைக்கும்போது எதுக்கு மாடடை  வாங்கி கட்டி பரமாரிப்பான் என்று சொல்லுவம் இல்லையா? அது மாதிரிதான். அதுதான் அவர் அதில் கவனம் செலுத்தவில்லை. 


இந்த இலங்கை இந்திய பாலம் என்பது கடந்த 25 வருடங்களாக பேசப்படுகின்றது. சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் எண்டு பாரதியார் படவில்லையா? அதனை நிறைவேற்றத்தான் இந்தியா முயட்சிக்குது.

ஆனால் விமல், வீரச்செக்கிற போன்ற தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்ததால்தான் தாமதமாகின்றது. இப்போது ஜேவிபி அங்கு சென்றுள்ளதால் இப்படியான திட்ட்ங்களுக்கு ஒத்துளைப்பாறல் என்று ரணிலும் நினைக்கிறார். அப்படி என்றால் இங்கிருந்து நாமும் வாகனத்திலேயே இந்தியா போய் வரலாம். பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா இனி தோல்வியை தழுவக் கூடும் ...நிச்சயமாக சிங்கள வாக்குகள் இவ்ருக்கு குறைவாக் விழ வாய்ப்புக்கள் ...அத்துடன் இவரது கட்சி பல் கட்சிகளின் கூட்டு ....மீண்டும் பிளவு படலாம் இந்தியா இதை மனதில் வைத்து தான் அழைத்தார்களோ தெரியவில்லை...

இந்திய ஆதரவு நிலை எடுத்தவர்கள் எவரும் இந்த நாட்டில் வெற்றி பெறவில்லை...ஏன் இந்த் பிராந்தியத்தில் உள்ள  நாடுகளில் இந்திய எதிர்ப்பு தான் அதிகம் ...

35 minutes ago, Cruso said:

முடடையை பற்றி பேசுகிறீர்கள். பக்கத்துக்கு ஊர்ல அது மலிவா கிடைக்கும்போது எதுக்கு பண்ணைகளை வைத்து சிரமப்படுவான். பால் மலிவாக கிடைக்கும்போது எதுக்கு மாடடை  வாங்கி கட்டி பரமாரிப்பான் என்று சொல்லுவம் இல்லையா? அது மாதிரிதான். அதுதான் அவர் அதில் கவனம் செலுத்தவில்லை. 


இந்த இலங்கை இந்திய பாலம் என்பது கடந்த 25 வருடங்களாக பேசப்படுகின்றது. சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் எண்டு பாரதியார் படவில்லையா? அதனை நிறைவேற்றத்தான் இந்தியா முயட்சிக்குது.

ஆனால் விமல், வீரச்செக்கிற போன்ற தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்ததால்தான் தாமதமாகின்றது. இப்போது ஜேவிபி அங்கு சென்றுள்ளதால் இப்படியான திட்ட்ங்களுக்கு ஒத்துளைப்பாறல் என்று ரணிலும் நினைக்கிறார். அப்படி என்றால் இங்கிருந்து நாமும் வாகனத்திலேயே இந்தியா போய் வரலாம். பொறுத்திருந்து பார்ப்பம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலம் அமைந்தால் நல்லது வியாபாரம் ஊக்குவிக்கப்படலாம் தென்னிந்திய பொருட்களும் இறக்குமதியாகும் இனி எம்மவர்கள் இந்தியாவுக்கு செல்ல தேவையில்லை இங்கயே வாங்கிக் கொள்ளலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.