Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 FEB, 2024 | 10:19 AM
image
 

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது.  

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்கு தீர்வு காணும் முகமாக தற்போதைய பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம்  தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இரு அணிகளையும் சேர்ந்த ச.குகதாசன், ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த சிறிநேசனும் பொதுச் செயலாளர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேசப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டது. எனினும், முதலில் யார் ஒரு வருடம் பதவி வகிப்பது என்பது தொடர்பில் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு இன்றி முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் முடிவுகள் எட்டப்படாத நிலை ஏற்பட்டது.  

இருவரும் தாம் பொதுச் செயலாளராக வருவதற்குரிய காரணங்களை நியாப்படுத்தியிருந்தனர். எனினும், இருவரும் பேசி இரண்டு நாட்களுக்குள் முடிவு தருமாறு கூறி நடைபெற்ற இரகசிய கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/176153

  • கருத்துக்கள உறவுகள்


 

தமிழரசுக் கட்சிச் செயலர்: இணக்கப்பாடு இல்லை

1678406774.jpg

(ஆதவன்) 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலர் தொடர்பான கலந்துரையாடலில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலர் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடந்தது.

கட்சியின் புதிய தலைவர் சி.சிறீதரன், பதில் பொதுச்செயலர் பா.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், செயலர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு தரப்பும் கலந்து கொண்டன.

திருகோணமலையைச் சேர்ந்த ச.குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஞா.சிறிநேசனும் செயலர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்ள இணங்கினாலும், யார் முதலாவது வருடத்தில் செயலாளராகப் பதவி வகிப்பது என்பதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இருவரையும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு கேட்கப்பட்டிருந்தது. இருவரும் பேசி எடுக்கும் முடிவுக்கு தான் இணங்குவதாக கட்சித் தலைவர் சிறீதரன் குறிப்பிட்டார். இருவரும் தாம் ஏன் பொதுச்செயலாளராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நியாயத்தை குறிப்பிட்டனர்.

எனினும், இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மேலும் 2 நாள்கள் எடுத்து தீவிரமாக யோசிக்கும் படியும், மீண்டும் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. (ஏ)  

https://newuthayan.com/article/தமிழரசுக்_கட்சிச்_செயலர்:_இணக்கப்பாடு_இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பானை உடைந்து விட்ட்து. இனி ஒடட முடியாது. ஓட்டினாலும் தண்ணீர் கசிந்து கொண்டுதான் இருக்க போகின்றது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.