Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
HD-2nd-Training-Course-Pic-3-800x445.jpe
 

இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு

 
 
 
 

ஐந்து மாவட்டங்கள் பங்கேற்பு

ஊடக வெளியீடு 2024-02-17

இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்கான ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு பெப். 16ம் திகதி கண்டியில் ஆரம்பமானது. நேற்றுடன் முடிவடைந்த இந்த இரண்டு நாட் செயலமர்வில் மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் 34 சர்வமதத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

இப்பயிலரங்கில் சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து, களுபஹன பியரதன தேரர், வல்லத்தர சோபித தேரர், மற்றும் வாடுவே தம்மாவன்ச தேரர் ஆகியோரும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜாவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில் விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும் பங்கேற்று கலந்துரையால்களில் ஈடுபட்டனர்.

உரையாடலின்போது நாகர்கோட்டில் பிரகடனம் உருவாகிய வரலாற்றினை களுபஹன பியரதன தேரர் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். குறித்த பிரகடனம் சம்பந்தமாக காணப்படுகின்ற கட்டுக்கதைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த உரையாடல்களில் பல்வேறு ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததோடு, ஈற்றில், பிரகடனத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தினை பலரும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாவது பயிலரங்கு குருநாகல் மாவட்டத்தில் கம்பஹா, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது. அடுத்ததாக பயிலரங்குகள் முறையே மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் நடைபெறுமெனவும் இப்பயிலரங்குகளில் அயலிலுள்ள மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர்.

மொத்தம் ஐந்து பயிலரங்குகள் மூலம் 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள். இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6 பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://marumoli.com/இமயமலைப்-பிரகடனம்-கண்டி/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றினாலும் அரிசியானால் சரிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

யார் குற்றினாலும் அரிசியானால் சரிதான். 

அடுத்த பயிலரங்கிட்கு நானும் போகலாம் என்றிருக்கிறேன். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

அடுத்த பயிலரங்கிட்கு நானும் போகலாம் என்றிருக்கிறேன். 😜

அதில் தவறில்லையே . போனால்தானே அங்கே என்ன நடைபெறுகிறது என்று அறிய முடியும். 

போய் வாருங்கள். என்ன விடயம் என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்” 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அதில் தவறில்லையே . போனால்தானே அங்கே என்ன நடைபெறுகிறது என்று அறிய முடியும். 

போய் வாருங்கள். என்ன விடயம் என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்” 

ஓம் ஓம் போய் வந்து பத்திரிகையில் என்ன செய்தி வந்திருக்குதென்று பார்த்து தகவல் தருகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

அடுத்த பயிலரங்கிட்கு நானும் போகலாம் என்றிருக்கிறேன். 😜

அண்மையில் எலியஸ் ஜெயராஜா தனது வீட்டில் இதைப்பற்றி ஒரு விளக்கவுரை கொடுக்க வட கரோலினாவில் உள்ளவர்களை அழைத்திருந்தார்.

அன்று நியூயோர்க் திரும்ப திட்டமிட்டிருந்ததால் போக முடியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.