Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்

20 FEB, 2024 | 08:36 PM
image
 

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் பௌத்தமயமாக்கலுக்குள்ளாகி வரும் நான்கு இடங்கள் இலங்கையில் தேசிய புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் கடந்த (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைத்துவரும் புல்மோட்டை அரிசி மலை பௌத்த பிக்குவான பனாமுரே திலகவன்ஸ  என்ற பௌத்த பிக்குவிடம் இந்த இடங்களுக்கான பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குச்சவெளி பிரதேச செயலகத்தின் புல்மோட்டை பகுதியில் உள்ள  சாந்தி விகாரை, யான் ஓயா விகாரை, புடைவைக்கட்டு சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம், புல்மோட்டை  ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம் ஆகிய நான்கு பௌத்த இடங்களும்  இவற்றோடு அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, ஆகிய விகாரைகள் கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பௌத்த புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

____-____-___________-________-05.jpg

____-____-___________-________-16.jpg

356150676_597412085839461_55620939937248

419648174_122147706434032426_57939502342

https://www.virakesari.lk/article/176901

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மக்கள் போராடி ஓய்ந்து விடடார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை. தமிழ் தலைமையே அடிபிடி பட்டுக்கொண்டு இருக்கும்போது இனி இதுதான் நிலைமை. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். தமிழ் தலைமைகள் நீதிமன்ற படி ஏறி திரியவேண்டியதுதான் அவர்கள் தங்கள் காரியத்தை நடத்துகிறார்கள். இனியென்ன கருத்து களத்தில் எழுதி தள்ள வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரகடனம் விரைவாக நடைமுறைப்படுத்தப் படுகிறது..😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

பிரகடனம் விரைவாக நடைமுறைப்படுத்தப் படுகிறது..😁

இப்பதான் இரண்டு வகுப்பு முடிந்திருக்கிறது. மூன்றாம்வகுப்பு வவுனியாவிலாம். இந்த வகுப்பெல்லாம் முடியிறதுக்குள்ள அவன் எல்லாவற்றையும் பிரகடனப்படுத்தி முடிச்சிடுவான். சிறப்பாகசெய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

குச்சவெளி பிரதேசத்தில் பௌத்தமயமாக்கலுக்குள்ளாகி வரும் நான்கு இடங்கள் இலங்கையில் தேசிய புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. 

IMG-5878.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

IMG-5878.jpg

அப்படி எண்டால் அடுத்தது யால் முற்ற வெளிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அப்படி எண்டால் அடுத்தது யால் முற்ற வெளிதான்.

தமன்னா... கலா...ரம்பா வர இடம்விட்டுக் கட்டிவினமோ...😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.