Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

palaniswami-pti-750x375.jpg

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சாந்தன் உயிரிழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் மனிதாபிமானம் அற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து.

எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் இராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் கழிப்பதற்கு திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1371988

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாவை கொன்றார் கருணாநிதி.

சாந்தனை கொன்றார் ஸ்ராலின்.

எப்பவுமோ அவை சொக்கத்தங்கம் பக்கம் தான். 

On 3/3/2024 at 07:58, தமிழ் சிறி said:

எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2024 at 02:58, தமிழ் சிறி said:

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம்

இவரின் ஆட்சியிலும் எதுவும் செய்யவில்லை. இப்போ மற்றவர்களை நோக்கி கையை காட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக தான் குறிப்பாக ஜெயலலிதா அம்மையார் எழுவர் விடுதலைக்கு தீர்மானம் இயற்றி விடுதலையும் செய்தவர். அப்புறம்.. கருணாநிதி கும்பல்.. சோனியா குதூகலக்காதல்.. எல்லாம் ஒன்றாச் சேர்ந்து மத்திய அரசினூடாக செல்லாதாக்கி.. மீண்டும் வழக்கை வேறு திசைக்கு மாற்றி உள்ள போட்டு.. இவர்கள் விடுதலையை கால நீட்டிப்புச் செய்து கொண்டே போயினர். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.