Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தூய அடையாளம்
-----------------------------
10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது.
 
முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்று கணிக்கக்கூடிய வகைகளில் மனிதர்களுக்கு இடையே தனித்துவம் இருந்தது.
 
புலம் பெயர்ந்த பின், குடியேறிய நாடுகளில் ஒரு அடையாளம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 'இந்தியர்' என்ற ஒரு வகைக்குள் நாங்கள் அடக்கப்பட்டோம். இந்தியர்கள் தென்னிந்தியாவா என்று கேட்டனர், தென்னிந்தியர்கள் கேரளாவா என்றனர், இல்லை இல்லை ஶ்ரீ லங்கா என்று என் அடையாளத்தை நிலைநிறுத்தவே நிறைய சக்தி தேவைப்பட்டது. ஒரு தடவை ஒரு பங்களாதேஷ் நண்பரை நீ இந்தியாவா என்று தெருவில் ஒருவர் கேட்க, அவர் மிகவும் கோபப்பட்டு, எகிறிக் குதித்து பனியில் சறுக்கி விழுந்து போனார். அவருக்கு அவரின் அடையாளம் அவ்வளவு அவசியமான ஒன்றானதாக இருந்திருக்க வேண்டும்.
 
உண்மையில் எங்களின் தலைமுறைக்கு அடையாளம் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நாங்கள் அங்கிருந்து கொண்டு வந்த அடையாளங்களுடனேயே இங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இன்னும் இன்னும் அடையாளத்துடன் அதிகமாக ஒட்டியுள்ளோம் என்று தான் சொல்லவேண்டும். இப்படியே எங்களின் வாழ்க்கைகள் முடிந்தும் விடும். ஆனால், பிரச்சனை அடுத்த மற்றும் பின் வரப் போகின்ற தலைமுறைகளுக்கே.
 
இங்கு ஒரு பல்கலையில் இந்த விடயத்தை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் இடையே இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசும் ஒரு பெரும் சமூகமே இங்கிருப்பதால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறைகளில் அடையாளம் என்பது ஒரு சிக்கலான ஒரு விடயமாக இருக்காது என்றே உடனே எண்ணத் தோன்றும்.
 
ஆனால், அவர்களின் நிலைமையும் எங்களின் நிலைமையும் ஆச்சரியமாக ஒன்றாகவே இருக்கிறது. அச்சு அசலாக ஒன்றாக இருக்கின்றது. புதிய தலைமுறை ஒரு லத்தீன் அமெரிக்கராக இருக்க வேண்டிய அளவிற்கு லத்தீன் அமெரிக்கராக இல்லை என்று புலம் பெயர்ந்த தலைமுறை குற்றம் சாட்டுகின்றது. புதிய தலைமுறைக்கு ஸ்பானிஷ் மொழியே சரியாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. 
 
புதிய தலைமுறையோ எங்களுக்கு ஸ்பானிஷ் முற்றாகவே விளங்குகின்றது, ஆனால் நாங்கள் ஸ்பானிஷில் பதில் சொன்னால் இவர்கள் எங்களின் உச்சரிப்பை நக்கலும், நையாண்டியும் செய்கின்றார்கள் என்று முந்தைய தலைமுறையை நோக்கி விரலை நீட்டுகின்றனர். அமெரிக்கர்களோ எங்களின் சில ஆங்கில வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கின்றனர். நாங்கள் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.
 
மொழி விடாது போல.
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரசோ said:
புதிய தலைமுறைக்கு ஸ்பானிஷ் மொழியே சரியாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. 
 
புதிய தலைமுறையோ எங்களுக்கு ஸ்பானிஷ் முற்றாகவே விளங்குகின்றது, ஆனால் நாங்கள் ஸ்பானிஷில் பதில் சொன்னால் 

புதிய தலைமுறை என்று இளைஞர்களை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்து பெரும்பாலான  தமிழர்களுக்கு 20 வீதம் தான்  தமிழ் விளங்கும் தமிழில் பதில் சொல்வதில்லை. அப்படி சொன்னால் சில வார்த்தைகளில் மட்டுமே பதில் தமிழில் சொல்ல முடியும்.  ஒரு யாழ்கள உறவு தெரிவித்தது போல வெளிநாடுகளில் இந்த அடையாளம், தமிழ்தேசிய கோட்பாடு  எல்லாம் இன்னும் ஒரு 60 வருடங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோ said:

புலம் பெயர்ந்த பின், குடியேறிய நாடுகளில் ஒரு அடையாளம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 'இந்தியர்' என்ற ஒரு வகைக்குள் நாங்கள் அடக்கப்பட்டோம்.

அமெரிக்காவில் எமது நிறத்தை வைத்து இந்தியர் என விளிக்கிறார்கள்.

இங்கிலாந்தில் பாக்கி என விளிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

புதிய தலைமுறை என்று இளைஞர்களை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்து பெரும்பாலான  தமிழர்களுக்கு 20 வீதம் தான்  தமிழ் விளங்கும் தமிழில் பதில் சொல்வதில்லை. அப்படி சொன்னால் சில வார்த்தைகளில் மட்டுமே பதில் தமிழில் சொல்ல முடியும்.  ஒரு யாழ்கள உறவு தெரிவித்தது போல வெளிநாடுகளில் இந்த அடையாளம், தமிழ்தேசிய கோட்பாடு  எல்லாம் இன்னும் ஒரு 60 வருடங்கள் தான்.

சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.....👍
 
இங்கு (அமெரிக்காவில்) அவர்கள் தமிழில் கதைப்பதை விட, நாங்கள் ஆங்கிலத்தில் கதைப்பதே பரவாயில்லாமல் இருக்கிறதே என்று தான் நிலைமை  போய்க் கொண்டிருக்கின்றது....😀
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் எமது நிறத்தை வைத்து இந்தியர் என விளிக்கிறார்கள்.

இங்கிலாந்தில் பாக்கி என விளிக்கிறார்கள்.

அப்படித்தான் செய்கின்றார்கள்.......👍
 
அத்துடன் சில அமெரிக்கர்களின் பூகோள அறிவு கொஞ்சம் விசித்திரமானது. ஒரு நீண்ட நேர இலங்கை, இந்தியா பற்றிய விளக்கத்தின் பின்னும், நீங்கள் கடைசியாக இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டிற்கு எப்போது போனீர்கள் என்று என்னைக் கேட்டவர்களும் உண்டு.
 
சில வருடங்களின் முன், வட கொரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்ற ஐயம் இருந்தது. இங்கு ஒரு தொலைக்காட்சியில் உலக வரைபடத்தை போட்டு, வட கொரியா எங்கிருக்கின்றது என்று பலரை நேரலையில் கேட்டனர். ஒருவர் சிறிது நேரம் நன்றாக யோசித்து விட்டு, அமெரிக்காவிற்கு மேலே (கனடாவை) தொட்டுக் காட்டினார்...........😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.