Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மழைப் பாடல்கள்
----------------------------
மாமழை போற்றுதும் 
மாமழை போற்றுதும் .....
 
என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார்.
 
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் 
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்பதில்லையே.
 
இங்கு தினமும் வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது.  வானிடிந்தால் என்னவென்று அன்றொரு நாள் நவகவிஞன் விறைப்பாக நின்றார். அவருக்கென்ன, அவருக்குத் தான் அச்சம் எதிலும் இருக்கவில்லையே. அரை அங்குல தடிப்பு கூட இல்லாத மெல்லிய கூரையில் ஓயாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் கூரை பிளந்தால் பாரதியும் இளங்கோவடிகளுமா கூடமாட உதவிக்கு வரப் போகின்றனர்?
 
காப்புறுதி நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை நாலு இடங்களில் எழுதி வைத்திருக்கின்றேன்.
 
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
 
இது அய்யன் வள்ளுவன் எழுதியது. அம்மா வாசுகி சாமி எதுவும் கும்பிடாமல், அய்யனை மட்டுமே கும்பிட்டு வாழ்ந்திருக்கின்றார். ஆதலால் அம்மா கேட்கும் போதெல்லாம் மழை பெய்தது என்று அய்யன் சொல்லியிருக்கின்றார். பெண் உரிமைச் சங்கங்கள் இந்தத் திருக்குறளை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதை எண்ணி எண்ணி அய்யனின் ஆத்மா எங்கிருந்தாலும் மகிழவேண்டும். வாசுகி அம்மா நில்லென மழை நின்றும் இருக்கும். ம்.... அது ஒரு காலம். 
 
இன்றும் தொலைக்காட்சிகளில் காலநிலை அறிக்கைகளை ஏன் பெண்கள் மட்டுமே வாசிக்கின்றார்கள் என்பதன் பின்னால் இருக்கும் மெய்ஞானம் இது.
 
தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
 
நல்ல நெல்லிக்கனி ஒன்றை மன்னனிடமிருந்து பெற்ற பின், காலக் கணக்கில்லாமல் வாழ்ந்து, எல்லாவற்றிற்கும் காரணங்கள்  சொன்ன பாட்டி அவ்வை சொன்னவற்றில் ஒன்று இது. இங்கு நாலைந்து வருடங்களாக மழையே இல்லை. வெடித்த பூமியும் வெளுத்த வானமுமாக இருந்தோம். போகிற போக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கலாம் என்ற கட்டுப்பாடு கூட வரக்கூடும் என்று பேசிக் கொண்டனர். ஒரு நல்லவர் கூட இங்கு சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் போய்விட்ட நிலைமை. 
 
திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரசோதரன் said:

திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.

 

  இலும் பல நாட்களுக்கு பின் இன்று வெய்யில்.

சில மாதங்களுக்கு முன் கலிபோர்ணியா தண்ணீரில்லாமல் காய்ந்த பூமியாக இருந்தது.

கீழே மழை.மேலே பனி கொட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

 

  இலும் பல நாட்களுக்கு பின் இன்று வெய்யில்.

சில மாதங்களுக்கு முன் கலிபோர்ணியா தண்ணீரில்லாமல் காய்ந்த பூமியாக இருந்தது.

கீழே மழை.மேலே பனி கொட்டுது.

இங்கு நேற்று மழை திரும்பவும். கொஞ்சமாகவே பெய்யும் என்றனர், ஆனால் அதிகமாவே கொட்டித் தீர்த்துவிட்டது.

 
பெய்யும் போது கொஞ்சம் அசௌகரியம் தான் என்றாலும், இங்கு மழை பெய்வது மிக நல்லதொரு விஷயம்.
 
நேற்று முழுவதும் பெய்த மழைக்காக விளையாட்டு மைதானங்களையும், திடல்களையும் இன்று மூடி விடுவார்கள். அது தான் ஆகப் பெரிய பிரச்சனை.......🤣
 
நகர நிர்வாகத்தையும் குற்றம் சொல்ல முடியாது. ஆட்கள் அவர்களாகவே போய் வழுக்கி விழுந்து விட்டு, நிர்வாகத்தின் மேல் நஷ்டஈடு கேட்டு வழக்குப் போடுவது இங்கு சர்வசாதாரணம்.
 
ஓடும் வெள்ளம், நிற்கும் வெள்ளம் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஊரில் விளையாடிக் கொண்டு திரிந்த எங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளும், ஒழுங்குகளும் கொஞ்சம் அதிகம் தான்.... 😀
 
 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.