Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஊர்களில் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கினாலும்.... 
சம்பந்தப்பட்டவர்களுக்குள் பழிக்கு பழி எனும் இன்னொரு நடவடிக்கை என்று உள்ளது. அது 20,30 வருடங்கள் காத்திருந்தும் பழிக்குப்பழி  நிறைவேற்றப்பட்டே தீரும். :cool:

உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே  இருப்பதால் தான்....
சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்..

எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...  

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் : மேலும் ஒருவர் கைது 

17 MAR, 2024 | 11:50 AM
image

யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (11) தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, தமது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்தினருகே  உள்ள கடற்படை முகாமுக்கு அருகாமையில்  வன்முறை கும்பலொன்று வாகனத்தில் கடத்திச் சென்றது. 

அதன் பின்னர், கணவர் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். 

அத்தோடு, கடத்திச் சென்ற மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கிவிட்டு அந்த வன்முறை கும்பல் தப்பிச் சென்றிருந்தது. 

அந்த கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கி கடத்த முற்பட்ட வேளையில், தாம் உதவி கோரி கடற்படை முகாமுக்கு சென்றபோது, அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியதாகவும், தனது கணவரின் படுகொலைக்கு கடற்படையினரும் காரணம் என படுகொலை செய்யப்பட்ட கணவரின் மனைவி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர். 

காணொளியில், கணவரும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்து கணவன், மனைவி இருவரையும் கடத்திச் செல்வதும் பதிவாகியுள்ளது. 

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில், கடத்தலுக்கு கடற்படையினர் உதவியதாக தெரிவித்த மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்த்துள்ளது.

கடந்த நாட்களில் இந்த கொலையுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மேலும் ஒருவர் கைதாகியுள்ளார்.

https://www.virakesari.lk/article/178927

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை தெளிவாக உதவி செய்தது தெரிகின்றது. இப்படியான வால் வெட்டு கலாச்சாரம் 70 இதுக்கு முதல் பரவலாக இருந்தது , தலைவரும் அவரது படைகளின் நெறியான நடத்துதல் காரணமாக இந்த மாதிரியான கும்பல்கள் களை பிடுங்கி எறியப்பட்டார்கள். மறுபடியும் இப்ப .... சினிமா இதனை ஊக்கிவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை – ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி இன்று அடையாளம் காண்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பொன்னாலையில் 24 வயதான இளைஞர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஐந்தாவது சந்தேகநபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பில், ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி நீதிமன்றில் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய ஐந்து சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/296487

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2024 at 19:58, தமிழன்பன் said:

கடற்படை தெளிவாக உதவி செய்தது தெரிகின்றது. இப்படியான வால் வெட்டு கலாச்சாரம் 70 இதுக்கு முதல் பரவலாக இருந்தது , தலைவரும் அவரது படைகளின் நெறியான நடத்துதல் காரணமாக இந்த மாதிரியான கும்பல்கள் களை பிடுங்கி எறியப்பட்டார்கள். மறுபடியும் இப்ப .... சினிமா இதனை ஊக்கிவிக்கின்றது.

பொலிசார்,ஆயுத படையினர் இதுகளை கண்டு கொள்வதில்லை...
விளக்கெற்றல்,சிவராத்திரி கொண்டாட்ங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதில் முன்னுக்கு நிற்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது, 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், ஏற்கனவே ஆறு பேரை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

அவர்களில் இருவர் அடையாள அணிவகுப்பின் போது, கொல்லப்பட்ட இளைஞனின் மனைவியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது | Three Arretsed Regarding Vaddukoddai Murder

இந்நிலையில், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை

அதேவேளை, சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது | Three Arretsed Regarding Vaddukoddai Murder

தேடப்படும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

எனவே, வட்டுக்கோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நபர்கள் சந்தேகநபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

https://tamilwin.com/article/three-arretsed-regarding-vaddukoddai-murder-1711355844

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு

jaffna-news-3-300x200.jpg

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297478

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

பொன்னாலை கடற்படை

இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.