Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(குறுங்கதை)
ஒரு பொய்
----------------
'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று.
 
நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு.  மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான்.
 
வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான்.
 
பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது.
 
ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான்.
 
அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன்.
 
அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது.
 
இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான்.
 
அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை.  
 
மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல.
 
அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம்.
 
சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின்,
 
'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?'
 
'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான்.
 
'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.'
 
'நல்ல விடயம்.'
 
'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?'
 
'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.'
 
மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன்.
 
கடைசி கேள்வி:
 
'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?'
 
'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

kural.jpg

kural1.jpg

kural2.jpg

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4253&id1=50&id2=18&issue=20171116

குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html

https://www.thirukkural.net/ta/kural/adhigaram-030.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

 ஏராளன்,  நிறைய மெனக்கெட்டு, வள்ளுவரைப் பிடித்துக் கொண்டு வந்து ரசோதரனுக்கு ஆதரவு தர முற்பட்டிருக்கிறீங்கள்.

பத்தாம்பசலியாக இருக்கிறீங்கள். பத்தியை முழுவதுமாக வாசித்தீர்களா?

மைக்கேலால், ’யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக’  என்ற ரசோதரனின் பெரும்தன்மை புரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kavi arunasalam said:

 ஏராளன்,  நிறைய மெனக்கெட்டு, வள்ளுவரைப் பிடித்துக் கொண்டு வந்து ரசோதரனுக்கு ஆதரவு தர முற்பட்டிருக்கிறீங்கள்.

பத்தாம்பசலியாக இருக்கிறீங்கள். பத்தியை முழுவதுமாக வாசித்தீர்களா?

மைக்கேலால், ’யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக’  என்ற ரசோதரனின் பெரும்தன்மை புரியும்

😀.......

மைக்கேல் பாவம், வேற எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்ளட்டும் என்று ஒரு நல்ல எண்ணமும், இந்தப் பயல் அங்கே போய் திரும்பவும் இங்கே செய்ததை தானே செய்யப் போகின்றான் என்ற ஒரு தயக்கமும் இருந்தது. பாவ உணர்வு வென்று விட்டது......🤣  

2 hours ago, ஏராளன் said:

kural.jpg

kural1.jpg

kural2.jpg

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4253&id1=50&id2=18&issue=20171116

குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html

https://www.thirukkural.net/ta/kural/adhigaram-030.html

நன்றிகள் ஏராளன்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

மைக்கேலால், ’யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக’  என்ற ரசோதரனின் பெரும்தன்மை புரியும்

கவி ஐயா ஆகா அதுக்குள்ள இப்படி ஒரு உள்குத்து விடயமும் இருக்கோ!

நான் மைக்கேலின் திறமை மற்றும் ஒருவனின் வேலைக்கு உலை வைக்காத ரசோதரனின் பெருந்தன்மை இரண்டையும் தான் சிந்தித்தேன்.

பேராசிரியர் சுப சோமசுந்தரம் ஐயாவின் ஆக்கங்களை அடிக்கடி படிப்பதால் அவர் வள்ளுவரது குறள்களையும் அதன் பொருளையும் வெவ்வேறு விடயங்களோடு தொடர்புபடுத்தி எழுதுவதன் தாக்கம் போல!

  • கருத்துக்கள உறவுகள்

"கற்றோரைக் கற்றோரே காமுறுவர்"   மைக்கேல் எப்படியும் பிழைத்துக் கொள்வார்........!

எனது நண்பரொருவர் இருந்தார் ....... அவர் சிறிதும் யோசிக்காமல் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுவார்,சில நாட்களில் வேறொரு வேலை எடுத்து விடுவார்......முன்பு செய்த இடங்களில் கூட மீண்டும் வேலை குடுப்பார்கள் .......அவர் தனக்கென்று இருக்கும் விடுமுறைகளை பாவிப்பதைவிட வேலையை விட்டுட்டு வேறு வேலை எடுப்பதுதான் அதிகம்......அதனால் எனக்கு அவர் மேல் பொறாமையும் உண்டு...... நான் அதற்கு நேர்மாறு.....ஒரு இடத்தில் வேலை செய்தால் ஒன்றில் அந்த வேலைத்தளம் பூட்டுப்படவேண்டும் அல்லது 100 கி.மீ அப்பால் மாறிப் போகவேணும்......விடுமுறைகளையும்  எடுப்பதில்லை அதுவும் அவர்கள் இந்த ரெண்டு மாதங்களுக்குள் விடுமுறையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று  வில்லங்கமாய் அனுப்பினால்தான் உண்டு.......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

கவி ஐயா ஆகா அதுக்குள்ள இப்படி ஒரு உள்குத்து விடயமும் இருக்கோ!

நான் மைக்கேலின் திறமை மற்றும் ஒருவனின் வேலைக்கு உலை வைக்காத ரசோதரனின் பெருந்தன்மை இரண்டையும் தான் சிந்தித்தேன்.

பேராசிரியர் சுப சோமசுந்தரம் ஐயாவின் ஆக்கங்களை அடிக்கடி படிப்பதால் அவர் வள்ளுவரது குறள்களையும் அதன் பொருளையும் வெவ்வேறு விடயங்களோடு தொடர்புபடுத்தி எழுதுவதன் தாக்கம் போல!

😀....

தமிழை வளைத்து எந்தப் பக்கமும் நின்று அதற்காக வாதாடக் கூடியவாறு இருப்பது தமிழின் ஒரு அழகே....எங்களின் பட்டி மன்றங்கள் போல.

மைக்கேல் எங்கேயாவது நல்லா இருக்கட்டும் என்று தான் நினைத்தேன். அவன் நல்லாகவே இருப்பான்.

6 hours ago, suvy said:

"கற்றோரைக் கற்றோரே காமுறுவர்"   மைக்கேல் எப்படியும் பிழைத்துக் கொள்வார்........!

எனது நண்பரொருவர் இருந்தார் ....... அவர் சிறிதும் யோசிக்காமல் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுவார்,சில நாட்களில் வேறொரு வேலை எடுத்து விடுவார்......முன்பு செய்த இடங்களில் கூட மீண்டும் வேலை குடுப்பார்கள் .......அவர் தனக்கென்று இருக்கும் விடுமுறைகளை பாவிப்பதைவிட வேலையை விட்டுட்டு வேறு வேலை எடுப்பதுதான் அதிகம்......அதனால் எனக்கு அவர் மேல் பொறாமையும் உண்டு...... நான் அதற்கு நேர்மாறு.....ஒரு இடத்தில் வேலை செய்தால் ஒன்றில் அந்த வேலைத்தளம் பூட்டுப்படவேண்டும் அல்லது 100 கி.மீ அப்பால் மாறிப் போகவேணும்......விடுமுறைகளையும்  எடுப்பதில்லை அதுவும் அவர்கள் இந்த ரெண்டு மாதங்களுக்குள் விடுமுறையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று  வில்லங்கமாய் அனுப்பினால்தான் உண்டு.......!  😁

என்னுடைய துறையில் உங்களைப் போன்றவர்கள் இல்லை அல்லது மிகக் குறைவே. எல்லோரும் வேலை செய்யும் இடங்களை சில வருடங்களுக்கு ஒரு தடவையாவது மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இங்கு வேறு பல துறைகளில் 30 வருடங்களிற்கு மேலேயும் ஒரே இடத்தில் பணி புரிபவர்கள் இருக்கின்றார்கள்.

இங்கு அரச வேலை என்றால், அது இன்னொரு கணக்கு. மாற்றமே இருக்காது ஓய்வடையும் வரை.  

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2024 at 15:07, ரசோதரன் said:

நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.

ஆள் வந்தாதானே திரும்ப எடுக்க என்ற துணிவு போல.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.