Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    22 MAR, 2024 | 02:14 PM

image

மொங்கோலியா அரைநூற்றாண்டு  காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என  மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

mongo_cli4.jpg

வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம்  தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும்  அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர்.

mongo_cli3.jpg

தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர்  அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

mongo_cli1.jpg

தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179391

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

Published By: RAJEEBAN    22 MAR, 2024 | 02:14 PM

image

மொங்கோலியா அரைநூற்றாண்டு  காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என  மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

mongo_cli4.jpg

வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம்  தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும்  அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர்.

mongo_cli3.jpg

தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர்  அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

mongo_cli1.jpg

தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179391

மொங்கோலியாவின் வரலாறே மிகக் கடுமையான காலநிலைகளால் ஆனது. கொடுங்கோல் சக்கரவர்த்தியான ஜெங்கிஸ்கான் மங்கோலியப் பேரரசை உருவாக்குவதற்கு அவர்களின் கடும் காலநிலையும் ஒரு காரணம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை, மொங்கோலியர்களுக்கு முதன்மையான மரக்கறி உணவு கோழி இறைச்சி.

மொங்கோலியர்களுக்கு  இறைச்சி (முக்கியமாக ஆட்டிறைச்சி) இல்லாமல் வாழ்கை இல்லை.  

வழமையாக மொங்கோலியாவில்,  சனத்தொகையை விட விலங்கு தொகை அதிகம், அதனால் தான் இத்தகைய உணவு முறை. 

 

On 22/3/2024 at 15:27, ரசோதரன் said:

கொடுங்கோல் சக்கரவர்த்தியான ஜெங்கிஸ்கான் மங்கோலியப் பேரரசை உருவாக்குவதற்கு அவர்களின் கடும் காலநிலையும் ஒரு காரணம்.

 

அந்த  காலத்துக்கு  கொடுங்கோல் இல்லை என்றே கருதவேண்டி இருக்கிறது (சோழரின் (பின்) பொற்காலமும், மொங்கோல் பொற்காலமும் கிட்டத்தட்ட ஒன்று).   

அனால், அந்த நேரம் சிங்கிஸ்ககான் (உண்மையில் உச்சரிப்பு), புதிய யுத்த கலைகளையும் (mobile warfare) உருவாக்கி இருந்தார் .

முக்கியமாக, குதிரை படையினால் பிடிக்கப்படும் mobile warfare.

இது, மொங்கோலியப் படைகலாய் விட ஆயுத பலம் கூடிய படைகளை சின்னாபின்னப்படுத்தி கைப்பற்றுதலை  இலகுவாக்கியது.

எந்த அரசுக்கும் (அரச வம்சத்துக்கும்)  மொங்கோல் அரசுக்கு கீழ் வருமாறு இடம்,கால அவகாசம் கொடுத்தே தாக்கப்பட்டதாக.

அனால், தாக்குதல் கொடுமையாகவே இருந்தது; அப்படியே அந்த காலத்தில் சண்டை நடந்தது (இப்பொதும் பெரும்பாலும் அதுவே, அனால் தெரிவதில்லை)   
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

பிரச்சனை, மொங்கோலியர்களுக்கு முதன்மையான மரக்கறி உணவு கோழி இறைச்சி.

மொங்கோலியர்களுக்கு  இறைச்சி (முக்கியமாக ஆட்டிறைச்சி) இல்லாமல் வாழ்கை இல்லை.  

வழமையாக மொங்கோலியாவில்,  சனத்தொகையை விட விலங்கு தொகை அதிகம், அதனால் தான் இத்தகைய உணவு முறை. 

 

 

அந்த  காலத்துக்கு  கொடுங்கோல் இல்லை என்றே கருதவேண்டி இருக்கிறது (சோழரின் (பின்) பொற்காலமும், மொங்கோல் பொற்காலமும் கிட்டத்தட்ட ஒன்று).   

அனால், அந்த நேரம் சிங்கிஸ்ககான் (உண்மையில் உச்சரிப்பு), புதிய யுத்த கலைகளையும் (mobile warfare) உருவாக்கி இருந்தார் .

முக்கியமாக, குதிரை படையினால் பிடிக்கப்படும் mobile warfare.

இது, மொங்கோலியப் படைகலாய் விட ஆயுத பலம் கூடிய படைகளை சின்னாபின்னப்படுத்தி கைப்பற்றுதலை  இலகுவாக்கியது.

எந்த அரசுக்கும் (அரச வம்சத்துக்கும்)  மொங்கோல் அரசுக்கு கீழ் வருமாறு இடம்,கால அவகாசம் கொடுத்தே தாக்கப்பட்டதாக.

அனால், தாக்குதல் கொடுமையாகவே இருந்தது; அப்படியே அந்த காலத்தில் சண்டை நடந்தது (இப்பொதும் பெரும்பாலும் அதுவே, அனால் தெரிவதில்லை)   
 

மிக்க நன்றி.....👍

பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மீதும் கண் மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டும், மிகவும் இரக்கமற்றவர்கள் என்ற அபிப்பிராயமும் இவர்கள் மேல் உண்டு. வழிபடும் இடங்களையும் சூறையாடி உள்ளார்கள். ஆனால், நீங்கள் சொல்வது போல, அந்த நாட்களில் யுத்தத்தில் இது ஒரு விதமான வழமையாகவே இருந்துள்ளது.

சோழர் பற்றியும் கேரளாவில் இன்றும் வேறு விதமான ஒரு கருத்து தானே நிலவுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.