Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 MAR, 2024 | 05:07 PM
image

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும்  அரசாங்கம் மேற்கொண்டது. இறுதியில் சில நாடுகளின் உல்லாசப்பயணிகள் இங்கு வருகை தந்து பாலியல் வர்த்தகத்தின் மூலம் தாம் அதிக வருமானத்தைப் பெற்றுச் செல்லும் அளவுக்கு நிலைமை  மோசமானது. 

எந்த வகையிலாவது வருமானத்தை அதிகரித்து கடன் சுமையை குறைக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் மேலும் மேலும் மக்களை நசுக்குவதாகவே இருந்தன. இந்நிலையில், தேர்தல்களை இலக்கு வைத்து மேலதிகமாக மதுபான உரித்துகளை அரசாங்கம் விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். இருநூறு மதுபான உரித்துகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் இதில் 15 உரித்துகள் ஏலவே விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

கலால் சட்டங்களுக்கு புறம்பாக அரசாங்கம் இயங்கவில்லையென்ற பதிலே அரசாங்கத்தரப்பிலிருந்து கிடைத்துள்ளதே ஒழிய, அரசாங்கத்தரப்பில் எவரும் இதை மறுக்கவில்லையென்பது முக்கிய விடயம். தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்படுகின்றதோ இல்லையோ…ஆனால் பொருளாதார நெருக்கடிகளில் உழலும் மக்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் வழிகளை விடுத்து, அவர்கள் சட்டரீதியாக போதை உலகத்தில்  தள்ளும் முயற்சியாகவே இது தெரிகின்றது. 

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், அதற்கு துணை போகும் அதிகாரிகள், சம்பவங்களை கடந்து செல்லும் காவல்துறை,  பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் என சகல தரப்பினரிடமும் எந்த கேள்விகளையும் எழுப்ப முடியாமல், மக்களை தொடர்ச்சியாக போதையில் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகின்றதோ தெரியவில்லை. 

இது இவ்வாறிருக்க  வருடாந்தம் மதுபான உரித்துகளை விநியோகிப்பதன் மூலம் கிடைக்கும் வரிவருமானம் இவ்வருடம் வீழ்ச்சியடையும் என கலால் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் எம். ஜே. குணசிறி கவலை தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களைப் பார்க்கும் போது, கலால் திணைக்களத்துக்கு  2024 ஆம் ஆண்டுக்கான  வரி வருமான இலக்கான 232 பில்லியன் ரூபாவை அடைவது சந்தேகமாகவுள்ளதாக அவர் கூறுகின்றார். அதாவது வரி அதிகரிப்பின் காரணமாக மதுபானங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டுக  மதுபான நுகர்வு நாட்டில் குறைந்துள்ளது என வேதனை தெரிவிக்கின்றார் அவர்.    மத்தியதர வர்க்கத்தினராக போராடி வந்த நாட்டின் பல இலட்சம் மக்கள் தற்போது வலிந்து வறுமை கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று வேளை உணவை நிறைவாக அவர்கள் பெறும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை. இப்படியிருக்கும் போது மதுபானத்தை நுகர்வோர் நாட்டில் குறைந்துள்ளனர் என்கிறார் கலால் திணைக்கள ஆணையாளர்.

2022 ஆம் ஆண்டை விட கடந்த 2023ஆம் ஆண்டு நாட்டின் மதுபாவனையானது 65 இலட்சம் லீற்றர்கள் குறைந்துள்ளதாக அவர் கூறுகின்றார். 2022இல் 26.5 மில்லியன் லீற்றர் மதுபானம் உற்பத்தியானது 2023இல் 20 மில்லியன் லீற்றராக அது குறைக்கப்பட்டுள்ளது என்கிறது கலால் திணைக்களம்.

மதுபான நுகர்வு  மற்றும் அது தொடர்பான புள்ளிவிபரங்களை கவலையோடு வெளியிடும் அரசாங்கம் நாட்டில் எத்தனைப் பேர் பட்டினியால் வாடுகின்றார்கள் என்பது குறித்து தேடிப்பார்ப்பதில்லை. உள்ளூர் காய்கறிகளின் விலைகள் ஆயிரங்களையும் தாண்டிச் சென்றது ஏன் என்பது பற்றி கவலைப்படவில்லை. நாட்டு மக்களின்  மூன்று நேர உணவாக பயன்படும் அரிசி கிலோ ஒன்று தொடர்ந்தும் சராசரியாக முன்னூறு ரூபாவாக இருப்பதை கண்டு கொள்வதில்லை.  

 ‘ஒரு நாட்டு குடிமக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் அந்நாட்டு அரசனின் நிலை உயரும்’ என்ற அர்த்தத்தில் ‘குடி உயர  கோல்  உயரும்'  என  பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒவ்வையார் பாடினார். இக்காலகட்டத்தில் கோலும் கோனும் உயர்வதற்கு மக்களின்  ‘குடி’ உயர வேண்டும் அரசாங்கம் நினைக்கின்றது. இப்படித்தான்  எமது நாட்டின் நிலைமை உள்ளது.

https://www.virakesari.lk/article/179598

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.