-
Tell a friend
-
Topics
-
Posts
-
அசாஞ், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பேரத்தின் படியே (plea bargain) வெளியே வருவது, உண்மையான ஊடகவியலாளர் / பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.
-
By பாலபத்ர ஓணாண்டி · Posted
உங்களிடம் நான் விளக்கம் கேட்கவில்லை.. நான் யாழை நோக்கித்தான் அந்த கேள்வியை முன்வைத்திருக்கிறேன்.. சீமான் மட்டும்தான் எங்களது பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறாரா?சீமான் பேசினால் மட்டும்தான் உங்களுக்கு அரசியல் லாபமா..? சீமானுக்கு முன்னாடியே பலவருடங்களில் இருந்து இன்றுவரை வைகோ, தொல்திருமாவளவன், திமுக, அதிமுக, ராமதாஸ்,வேல்முருகன்,ect.. செய்வதெல்லாம் தக்காளி தொக்கா..? சீமானுக்கு மட்டும்தான் யாழில் நக்கல் நையாண்டி கருத்துக்கள் கருத்துபடங்கள் வரும் அனுமதிக்கப்படுமா..? சீமான் என்று வந்தால் இங்கு பலருக்கு தமிழக அரசியலில் ஈடுபாடு வந்துவிடும் மற்றும்படி தமிழக அரசியலில் அவர்கள் நவதுவார்ங்களையும் பொத்திக்கொண்டு தீக்கோழிபோல் தலையை மண்ணில் புதைத்துவிடுவார்கள்.. லங்காபுவத்துபோல் பொய்யை மூலதனமாக்கி உங்கள் வெறுப்பை போகிறபோக்கில் அடித்து விட்டிருக்கிறீர்கள்.. யாழில் எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் பேபிகள் அல்ல.. கருத்துக்கள் இல்லாமல் தான் திரிக்கு திரி சீமானுக்கு படங்கள் வரைகிறீர்கள்.. நம்புகிறோம்.. இதுக்கு ஸ்டாலினுக்கு மோடிக்கு கருணாநிதிக்கு ஜெயலிதாக்கு வைகோவுக்கு, ராமதாசுக்கு, திருமாக்கு என்று தலா ஒவ்வொரு கருத்துப்படம் போட்டுவிடுங்கோ.. சீமானுக்கு அல்ல.. ஆட்சியில் இருந்தவர்கள் இருப்பவர்கள், பங்கெடுத்தவர்கள் பங்கெடுப்பவர்கள் இவர்களே.. ஆமியை அடித்த மீனவன் சீமான் உசுப்பேத்திதான் நான் அடிச்சேன் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா? அவனுக்கும் அந்த ஆமிக்காரனுக்கும் என்ன தள்ளுமுள்ளோ..? இத்தனைக்கும் இது கடலில் நடக்கவில்லை.. கைது செய்துவைக்கப்பட்ட இடத்தில் நடந்திருக்கு.. அங்கு சாப்பாட்டு பிரச்சினை இருந்திருக்கலாம்,டாய்லட் பிரச்சினையில் அடிபட்டிருக்கலாம்.. யாருக்கும் ஏன் என்று தெரியாது ஊரில் முன்பு இயக்கம் றோட்டில் ஆமிக்கு குண்டெறியும்போது கண்டபாட்டுக்கு சுட்டுவிட்டு செத்த அப்பாவி மக்களை குண்டெறிந்த புலிகள் என்று சொல்வதுபோல் இருக்கு உங்கள் உருட்டும் பிரட்டும்.. எதோட எதை கோத்து விடுறியள் உங்கள் வெறுப்பை நியாயப்படுத்த.. ஒரு சிங்கள ஆமி செத்ததுக்கு எவ்வளவு ரத்தம் துடிக்குது உங்களுக்கு.. ஒரு சகதமிழனுக்கு நக்கல் நையாண்டி.. ம்ம்ம்… காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.. எப்பவுமே பல்வீனமானவர்களைத்தான் எல்லோரும் நக்கலடிப்பார்கள்.. ஒரு வகுப்பில் கூட ஏழைமாணவன் அல்லது படிப்பு கொஞ்சம் குறைவான மாணவனைத்தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.. இதுவே அவனிடம் பணம் இருந்தால் அல்லது ஆஜானபாகுவாக இருந்தால் மூச்சும் காட்டமாட்டார்கள்..இது மனித இனத்தின் உளவியல்.. இங்கு யாழிலும் பலர் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சிகளை விட்டு விட்டு சீமானை பிடித்து தொங்கும் காரணமும் அதுதான்.. காலம் மாறும் அப்போ சந்திப்போம்.. -
By தமிழ் சிறி · Posted
வாகனம் பழுது பட்டு நின்றால்... அந்த இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மேலே காட்டியபடி எச்சரிக்கை முக்கோணம் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. அதனை இவர்கள் பின்பற்றி இருந்தால் மூன்று உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். -
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"எல்லாமாய் அவளே" "எல்லாமாய் அவளே இறைவியும் அவளே! சொல்ல முடியா அழகில் வந்து வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து நல்லாய் வாழ தன்னைத் தந்தவளே!" "கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே! உள்ளம் தேடும் அன்பு தந்து அள்ள அள்ள இன்பம் சொரிந்து உள்ளது எல்லாம் எமக்கு கொடுத்தவளே!" "ஆழ் கடலில் மலர்ந்த முத்தே! வாழ்வு தர உன்னையே கொடுத்து தாழ்வு மனப்பான்மை எம்மிடம் அகற்றி சூழ்ச்சி சூது அறியா இல்லத்தரிசியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts