Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

05 MAY, 2024 | 11:33 AM
image

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கத்திக்குத்திற்கு இலக்கான 18 வயது இளைஞனின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் வன்முறையில் ஈடுபடப்போகின்றோம் என காவல்துறையினரை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தெரிவித்தார். இதன் பின்னர் வாகனத்தரிப்பிடமொன்றில் கத்தியுடன் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கின்றார் என தகவல் வந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் 16 வயது இளைஞன் மீது டேசர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் அந்த இளைஞன் வாளுடன் தொடர்ந்தும் முன்னோக்கி சென்றதால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182725

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பயங்கரவாதிகளுக்கு ஈவிரக்கம் காட்டக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசிற்கு சொல்லிவிட்டு கத்தியைத் தூக்கியபடியால் இது தற்கொலை. 

பயங்கரவாதம் அல்ல. 

😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றிரவு ஜிகாத்தின் பாதையில் செல்கின்றேன் - பேர்த்தில் கத்திக்குத்தில் ஈடுபட முயன்றவேளை சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி

Published By: RAJEEBAN   06 MAY, 2024 | 12:31 PM

image

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் வாகனதரிப்பிடமொன்றில் இளைஞனை கத்தியால் குத்த முயன்றவேளை காவல்துறையினரால் சுட்க்கொல்லப்பட்ட  இளைஞன் கத்திக்குத்து முயற்சிக்கு முன்னர் தான் வன்முறைகளில் ஈடுபடப்போவதாகவும் ஜிகாத்தின் பாதையில் பயணிக்கப்போவதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேர்த்தின் தென்பகுதியில் உள்ள விலெட்டனில் சனிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது இளைஞன் நண்பர்களே நான் எவ்வேளையிலாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அல்லாவிற்காக நான் இன்றிரவு ஜிகாத்தின் பாதையில் செல்கின்றேன் என பல தடவை தனது நண்பர்களிற்கு செய்தியனுப்பியுள்ளான்.

நான் முஜாஹிதீன் அல்ஹைதாவின் போர்வீரன் இந்த நடவடிக்கைகளிற்காக நான் பொறுப்பேற்பேன் எனவும் அவன் நண்பர்களிற்கு செய்தி அனுப்பியுள்ளான்.

இந்த செய்தி கிடைத்த  பலர் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளனர்.

இந்த சிறுவனிற்கும் எந்த உள்ளுர் மசூதிக்கும் தொடர்பில்லை. இந்த சிறுவன் உளநல பாதிப்பிற்குள்ளாகியுள்ளான் 2022 முதல் அதாவது 12 வயது முதல் அவனை காவல்துறையினர் வன்முறை தீவிரவாதத்தை எதிர்க்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்விற்கு உட்படுத்தினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதத்தின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் புனர்வாழ்வுதிட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 வயதிற்கு உட்பட் நால்வரில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனும் ஒருவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182794

  • கருத்துக்கள உறவுகள்

16 வயது... 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.