Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்"

இறப்புக்குப் பக்கம், ஈழத்தில் இருக்கும் இன்றைய தமிழன் நிலையே இந்நூலின் தலைப்பு - என்று தன் கருத்துரையில் குறிப்பிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

இலட்சியத்தில் குளித்து எழுந்த ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும், இப்படித்தான். இன்றைக்கு உயிரோடிக்கிறேன்.. என்றைக்கும் இனிக் காண்பேன் ஈழம்? என்ற கேள்வியை அடை காத்தபடி விடைதேடித் தவிக்கிறது! இது மிகவும் வேதனையானது.

இங்கும், அங்கும், உலகு எங்கும் அந்தத்தவிப்போடு குதிரையில் ஏறி வெளியேறுகிறார் சுத்தாதனர். இதைப் படித்தப்போது, நம் விழிகளிலிருந்தும் கண்ணீர் வெளியேறி வழிகிறது.

இலக்கியம் வகுத்துச் சொல்லும் ஐந்திணைகளில் ஒன்று முல்லைக்காடு ஆனால் ஆறாம் திணையாக, இங்கு வன்னிக்காடு பாடுபொருள் ஆகியுள்ளது. ஆம் களம் அனுப்பும் காடு கவிதையில், காடுகளின் வரலாறு, விடுதலை வரலாறாக, ஆறு வரிகளில் வெகு இயல்பாய்ப் பதிவாகியுள்ளது.

வசாவிலானும் எங்கள் அழகிய வீடும் படிக்கையில், போருக்குப் பின்னர் ஏற்பட்ட அழிவைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல் பீறிடும் அழுகை நம் விழிகளை மறைக்கிறது, பழைய உறவும், புட்டும் சொதியும் கலந்த உணவும், நாசமாகிப் போன படலும் கண்ணுக் குள் தெரியும் நினைவாய், நயனங்களை மேலும் காயப்படுத்துகிறது. போர்க்சூழலை நேரடியாகப் பார்த்தறியாத, தாய்த் தமிழர்களுக்கு இது புதிய அனுபவமாகப் புலப்படும்.

எழுதாத கவிதைகள்

நிறைய இருக்கின்ற எங்களிடம்

அவற்றில்

காதல் கீதம் இசைக்கும் வண்டுகளை

எதிர்பார்க்காதீர்கள்

என்கவிதைகள் வலிமையானவை - என்று வரையறுக்கும் கவிஞர்.

இரவு விடிந்ததும் விடியாத

ஓர் பொழுதில்

எம் மண் உயிர்த்தெழும் என்று சத்திய சபதமிடுகிறார்.

நியாயம்தானே என்பது தொடங்கி கடைசித் தலைப்பான இன்றைக்கு உயிரோடிக்கிறேன் வரை, இருபத்திரண்டு கவிதைகள் இதில் உள்ளன,. ஈழம் பற்றிய தாக்கங்களும் ஏக்கங்களும் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளன. யாவும் உணர்ச்சி மயமானவை! அறிவுப் பூர்வமானவை ! பிரசவிக்கத் துடிக்கும் ஈழத்தின் இடுப்பு வலிக்கு சத்திர சிகிச்சைக்கு முன் போடப்படும் சத்து ஊசிகளாய் ஆழமாகத் தைப்பவை.

இக்விதைகள் மரபில் இல்லை என்பவர்களும் இங்கு பல உவமைகள் அணிவகுக்கவில்லை என்று அங்கலாய்ப்பவர்களும் சற்று ஓரமாய் ஒதுங்கிப் போங்கள்.

கவிதைக்கு உரமும் உயிரும் உணர்ச்சியே ! நூல் முழுக்கவும், பற்றி எரிகிற ஈழமே பாடுபொருள் ஆகியுள்ளது. ஆகவே, தரமான உன்மே இடுபொருள் ஆகியுள்ளது ! இனி, ஈழம் விளைவதே நம் எதிர்பார்ப்பாக இருக்கட்டும். சிறிய நூலாக இருந்தாலும், வெறும் உடலாக இல்லாமல், உணர்வும் உயிரும் இதன் உறைபொருளாய்த் தந்துள்ளார் அருணா சுந்தரராசன். கவிஞருக்கு மீண்டும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

தமிழகத்து நூலகங்களிலும் தமிழ் ஈழத்தை நேசிப்பவர் கைகளிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய கவிதைத் தொகுப்பு இது.

"இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்" ஆசிரியர் : அருணா சுந்தரராசன், விலை ரூ.30, பக்கம் 54, வெளியீடு அகரம் மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்

- வைகை வாணன்

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.