Jump to content

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1697695404-Vijayakala-6.jpg?resize=650,3

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.

ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்ற பின்னர் எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்ததுடன், கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கொரோனா இடர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் தங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் தாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என அவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1383981

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.