Jump to content

குஜராத் தீ விபத்தில் 27 பேர் பலி, விதிகளை மீறிய வணிக வளாகம் - உயிர் தப்பியவர்கள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
குஜராத் தீ விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வணிக வளாகத்தில் குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவெனப் பரவியதால், சில நிமிடங்களில் விளையாட்டு மையம் மொத்தமும் எரிந்தது. தீ விபத்தில் உடல்கள் மோசமாகக் கருகியதால், இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் காரணமாக, ராஜ்கோட்டின் உள்ளூர் அரசு அதிகாரிகள், விளையாட்டு மையத்தின் உரிமையாளர்கள், மற்றும் குஜராத் அரசு மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பயங்கரமான தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

தீ விபத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை குஜராத் அரசு அமைத்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட டிஆர்பி வணிக வளாகத்தின் விளையாட்டு மையம், சிமென்ட் கொண்டு அமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு அல்ல என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் டிஆர்பி விளையாட்டு மையத்தின் நிர்வாகம் தீக்காப்பு விதித்தொகுப்பு (Fire safety) தொடர்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் தீயணைப்புப் படை கூறுகிறது.

'தீக்காப்பு விதித்தொகுப்பு' அனுமதி பெறவில்லையென்றால், இந்த விளையாட்டு மையம் தொடர்ந்து இயங்கியது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. சம்பவம் குறித்து காவல்துறை, தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

 

காவல்துறை கூறுவது என்ன?

குஜராத் தீ விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தவால் கார்ப்பரேஷனின் உரிமையாளர் தவால் தக்கர் மற்றும் டிஆர்பி விளையாட்டு மையத்தின் ஆபரேட்டர்களும், ரேஸ்வே எண்டர்பிரைசஸ் பங்குதாரர்களுமான அசோக்சிங் ஜடேஜா, கிரித்சிங் ஜடேஜா, பிரகாஷ்சந்த் ஹீரன், யுவராஜ்சிங் சோலங்கி மற்றும் ராகுல் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக குஜராத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குஜராத் காவல்துறை கமிஷனர் ராஜு பார்கவா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நேற்று மாலை (26.05.2024) விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 6 பேர் மீது ஐபிசி 304, 308, 336, 338 மற்றும் 114 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் மீதமுள்ள நான்கு பேரை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதான் தங்களின் இப்போதைய முயற்சியாக இருக்கும் என்றும் கூறினார்.

தீ விபத்தைத் தடுக்கவும், மனித உயிர்களைக் காப்பாற்றவும், தீயணைப்புப் படையிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழைப் (NOC) பெறாமல், இந்த அபாயகரமான பகுதியில் விளையாட்டு மையம் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையின் எஃப்ஐஆர் கூறுகிறது.

இந்த விளையாட்டு மையத்தின் ஆபரேட்டர்கள், 'தங்கள் வளாகத்தில் மனிதர்களுக்கு சிறிய அல்லது கடுமையான காயம் ஏற்பட அல்லது உயிரிழக்கக்கூட வாய்ப்பு உள்ளது' என்பதை அறிந்திருந்தும் தொடர்ந்து விளையாட்டு மையத்தை இயக்கியதன் மூலம் கடும் குற்றம் புரிந்துள்ளதாக காவல்துறையின் எஃப்ஐஆர் கூறுகிறது.

 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

குஜராத் தீ விபத்து
படக்குறிப்பு, சித்தராஜ்பாய் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் காணவில்லை

இறந்தவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை மாலை முதல் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர்கள் இந்த விபத்தில் உயிரோடு இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா, எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றார்.

தீ விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், ராஜ்கோட்டில் உள்ள எய்ம்ஸ், கிரிராஜ் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒருவர் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “விபத்தின்போது அந்த இடத்தில் எனது உறவினர் இருந்தார். மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எதுவும் தெரிய வரும்,” என்றார்.

ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்த ரவிபாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். “இந்த விபத்தில் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை என்னால் பார்க்க முடியவில்லை."

"தேர்தல் நேரத்தில் தலைவர்கள் வீடு வீடாகச் செல்கிறார்கள். ஆனால் இதுபோன்ற அவலங்களின்போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதைவிட மன்னராட்சியே சிறந்ததாகத் தெரிகிறது,” என்று கூறினார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும்கூட, மேற்கொண்டு பேச முடியாமல் சோகத்தில் திணறுகிறார் ரவிபாய். இதன் மூலம் தீ விபத்து சம்பவம் அந்தப் பகுதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நம்மால் அறிய முடிகிறது.

 

'முதல் மாடியில் இருந்து குதித்து தப்பினோம்’

குஜராத் தீ விபத்து
படக்குறிப்பு,தீ விபத்து நடந்த இடத்தில் இருந்த தக்ஷ் பலரைக் காப்பாற்றியுள்ளார்

தீ விபத்து நடந்த இடத்தில் இருந்த தக்ஷ் என்பவரிடம் பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்யா பேசினார். தக்ஷ், தனது 10 வயது சகோதரருடன் வணிக வளாகத்தின் விளையாட்டு மையத்திற்குச் சென்றுள்ளார்.

“நாங்கள் அங்கு விளையாடத் தொடங்கியவுடன் கீழே தீப்பற்றியதாக தகவல் வந்தது. புகை மூட்டத்தைக் கண்டு மக்கள் ஓடத் தொடங்கினர். பின்னர் டிஆர்பி ஊழியர்கள் எங்களை அவசரப் பாதை வழியாக அழைத்துச் சென்றனர். ஆனால் அவசரப் பாதைக்குக் கீழே இருந்த மரப்பலகைகளில்தான் தீப்பிடித்திருந்தது. அதனால், அந்த வழியாக வெளியேற முடியவில்லை,” என்று தக்ஷ் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மூலையில் ஷீட் கொண்டு அடைக்கப்பட்ட தடுப்பு இருந்தது, அதற்குப் பின்னால் ஒரு வழி இருந்தது. அங்கிருந்த மூன்று பேரையும் என் சகோதரனையும், அந்த வழியாக முதல் மாடியில் இருந்த குதிக்கச் சொன்னேன். நானும் பின்னர் குதித்தேன்,” என்றார்.

அவசரப் பாதையும், பிரதான வழியும் அடைக்கப்பட்டதால், மக்கள் மேலிருந்து குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அவ்வாறு குதிக்க முடியாத சிலர் தீ விபத்தில் உயிரிழந்தனர்.

தக்ஷின் சகோதரருக்கு கை மற்றும் நெற்றியில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை காணவில்லை

குஜராத் தீ விபத்து
படக்குறிப்பு, தீ விபத்தில் சிக்கிய தங்கள் உறவினர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் மக்கள்.

வணிக வளாகத்திற்கு அருகில் வசிக்கும், சித்தராஜ்பாயின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் விளையாட்டு மையத்தில் இருந்தனர், அதில் நான்கு பேரை இன்னும் காணவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்களை மீட்க மாடிக்குச் சென்ற அவரது மகனும் திரும்பவில்லை.

பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்யா அவருடன் உரையாடினார். இந்த சம்பவம் நடந்தபோது, இந்த விளையாட்டு மையத்தின் முன்புறம் உள்ள சாலையில்தான் அமர்ந்திருந்தார் சித்தராஜ்பாய்.

“தீ பரவிய 15 நிமிடங்களில், அனைத்தும் எரிந்துவிட்டது. தீ மிகவும் வேகமாக பரவியது. நாங்கள் 500 அடி தூரத்தில் இருந்தோம். ஆனாலும் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. எனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் உள்ளே சிக்கி இருக்கிறார்கள் என்பதை நான் அப்போதுகூட உணரவில்லை,” என்கிறார் சித்தராஜ்பாய்.

மேலும், இந்த விளையாட்டு மையம் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் இந்தத் தீ விபத்து எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

"இந்தச் சம்பவத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது எங்கள் குடும்பத்தில் ஒரு மகளும் அவளுடைய தாயும் மட்டுமே மீதம் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவார்கள்?" என்றும் சித்தராஜ்பாய் கேள்வி எழுப்புகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cw00jk28rjwo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விளங்க முடியாமல் குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள். (எனக்கு விளங்கிய வரையில்) உங்கள் கருத்துகளுக்கு அடிப்படையாக இருப்பவை இரண்டு விடயங்கள்: 1. ஆண் - பெண் குடும்பம் தான் பூரண குடும்பம் என்ற உங்கள் "நம்பிக்கை". 2. ஓரினச் சேர்க்கையாளர் மீதான அச்சம் - homophobia இது இரண்டையும் தவிர, எந்த ஆதாரங்களையோ, முன்னுதாரணங்களையோ, மேற்கத்தைய சமூகங்களில் , நாடுகளில் இருக்கும் உதாரணங்களையோ அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும் இலக்கு உங்களிடம் இல்லை. இந்த மனநிலை இங்கே மட்டுமல்ல, முன்னரும் சில மானிடவியல், வரலாறு தொடர்பான திரிகளில் நீங்கள் வெளிக்காட்டியது தான். எனவே, ஆச்சரியமில்லை.
    • நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 33     கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த மூத்த பிளினி இலங்கையில் குறிப்பிட்ட பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]   மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன.   உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.   "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)   எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498   "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"   என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.   ஆனால், மாகாவம்சத்தில், துட்டகாமினியை எடுத்துக் கொண்டால், தனது ஈட்டியில், புத்தரின் உடல் எச்சத்தை [relic] போட்டு சண்டைக்கு போனான் என்கிறது. எப்படி புத்தரின் எச்சத்தை பெற்றான் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான கதை. ஆனால், அன்பே உலகம் என அமைதி விரும்பும் புத்தர் , எப்படி துட்டகாமினிக்கு அதன் மூலம் நீதி தவறாத எல்லாளனை கொல்ல உதவினார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.   அப்படி என்றால் எப்படியான ஞானம் புத்தருக்கு கிடைத்தது ? அன்பே வடிவான புத்தருக்கு இது அவமதிப்பு இல்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், தமிழ் அரசன் தித்தம்பாவை [Damila Titthamba], நாலு மாதம் ஆகியும் வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தந்திரமான முறையில், தான் தன் தாயை திருமணம் செய்ய தருகிறேன் என தன் தாயை தன்னுடன் யுத்த இடத்தில் வைத்திருந்து ஏமாற்றி அவனை கொல்லுகிறான் என்கிறது.   இது வெளிப்படையாக கூறாவிட்டாலும், துணை விளக்கம் [it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation.] கொடுக்கப் பட்டுள்ளது. மகாவம்சம் எழுதியவர் எந்த நிலைக்கும் , உதாரணமாக தாயையே எதிரிக்கு கொடுக்கும் அளவுக்கு தயாராக, தாய் இனத்தையே அவமதிக்கும் அளவுக்கு தள்ள பட்டிருப்பது, பத்தினி தெய்வம் வணக்கும் இலங்கையின் காப்பியம் ஒன்றில் எழுதப்பட்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 34 தொடரும்     
    • நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு. ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது: 1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர். 2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர். 3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு. 4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.     
    • Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.