Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1716200750-isis_L.jpg?resize=650,375&ssl

பிரதான சந்தேகநபர் “ஜெராட் புஸ்பராஜா” கைது!

இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் பேணி வந்துள்ளார்.

https://athavannews.com/2024/1385080

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

arrest-1.jpg?resize=670,375&ssl=1

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை இலங்கையில் வழி நடத்தியதாக சந்தேகிக்கும் நபர் கைது.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பினை, இலங்கையில் வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒஸ்மான் புஷ்பராஜ் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய நபராக ஒஸ்மான் புஷ்பராஜ் இனங்காணப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி பொலிசார் சந்தேக நபரின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தனர்.

சிஐடி மற்றும் ரிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், ஒஸ்மான் புஷ்பராஜ் வழிநடத்தியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 25ஆம் திகதி குறித்த சந்தேக நபரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.

https://athavannews.com/2024/1385144

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தியில் கிறிஸ்தவ தமிழ்ப் பெயராகவும், மற்றைய செய்தியில் முஸ்லீம் கலந்த பெயராகவும் உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட புலேந்தினி மகேந்திரனைப் போல்,  தமிழர்களை மதம் மாற்றி இப்படியான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுத்துகின்றார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒரு செய்தியில் கிறிஸ்தவ தமிழ்ப் பெயராகவும், மற்றைய செய்தியில் முஸ்லீம் கலந்த பெயராகவும் உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட புலேந்தினி மகேந்திரனைப் போல்,  தமிழர்களை மதம் மாற்றி இப்படியான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுத்துகின்றார்கள் போலுள்ளது.

மதம் மாற்றம் செய்யத் தேவையில்லை. பெயரை மாற்றினால் போதும். 

😉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.