Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க பொறிமுறைக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுமா? உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க பொறிமுறைக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுமா? - விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுமா? உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பது என்ன?

Published By: RAJEEBAN    03 JUN, 2024 | 03:24 PM

image
 

உண்மை ஐக்கியம் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான சட்டத்தின் நகல்வரைபில் ஆணைக்குழுவிற்கு வழக்குரைஞர் அல்லது நீதித்துறை அதிகாரங்களை வழங்கும் விதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் தேவைகளிற்கு தீர்வை காண்பதற்காக விசேட நீதிமன்றத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை நல்லிணக்க பொறிமுறை நீதித்துறை அதிகாரங்களை கொண்டிருக்கவேண்டுமா அல்லது அதன் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து விசேட நீதிமன்றமொன்றை உருவாக்கவேண்டுமா என தனதுஅரசாங்கம்  ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தமை குறித்த ஐலன்ட் நாளிதழின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் நீதித்துறை அதிகாரங்களை வழங்குவது விசேட நீதிமன்றத்தை அமைப்பது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க முடியும்என  அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார்.

எந்த சட்டமும் நடைமுறைக்கு வருவதற்கு நாடாளுமன்றத்தின்அங்கீகாரம அவசியம் ,உத்தேச சட்டம் ஆணைக்குழுவிற்கு  நீதித்துறை அதிகாரத்தை கொண்டிருக்கவேண்டுமா அல்லது விசேட நீதிமன்றத்தை அமைக்கவேண்டுமா என தீர்மானிக்கவேண்டியது நாடாளுமன்றமே என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட நீதிமன்றத்தை நிறுவவேண்டும் என்றால் அரசமைப்பின் ஷரத்துக்கள் பிறதொடர்புடைய சட்டங்கள் நீதித்துறை சட்டம் ஆகியவற்றை கவனமாக பரிசீலிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நிலைமாற்றுக்கால நீதியின் முறையின் நோக்கம் உண்மையை நிலைநாட்டுவதற்கான தளத்தை உருவாக்குதல் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீடு வழங்குதல் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீளநிகழாமையை உறுதி செய்தல் மனித உரிமை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் கிரிமினல் குற்றவாளிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க உதவுதல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியில் வெளியாகியுள்ள உத்தேச சட்டத்தின் தற்போதைய வரைவு தனிநீதிமன்றத்தை நிறுவும் அளவிற்கு செல்லவில்லை எனவும் அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார்.

எனினும் ஆணைக்குழுபின்பற்றிய உண்மையை கண்டறியும் செயல்முறையின்போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கைகளை  எடுப்பது குறித்து பரிசீலிக்க உதவும்  விதிமுறைகள் இதில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் வன்முறைகள் மீளநிகழாமையில் கவனம் செலுத்தும் நிலைமாற்றுகாலநீதிபொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்து அவசியம் என கலாநிதி குணவன்ச தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009வரையிலான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் உள்நாட்டு போர் போன்றன பல அடிப்படை காரணங்களை கொண்டுள்ளன அவற்றை கவனமாகபரிசீலிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அனைத்து பங்குதாரர்களும் ஏற்க கூடிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185211

  • மோகன் changed the title to நல்லிணக்க பொறிமுறைக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுமா - விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுமா? உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பது என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

இவை என்ன சாமானை வைச்சு விளையாட்டுக் காட்டுகினம் என்பது ஒருதருக்கும் விளங்கவில்லை..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.