Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குறித்த இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மாறாது; உட்கட்டமைப்பு திட்டங்கள் ஏனைய கொள்கைகள் தொடர்பில் கடும் அழுத்தங்களை கொடுப்பதை இந்தியா குறைத்துக்கொள்ளும் - இராஜதந்திர ஆய்வாளர்கள் கருத்து

Published By: RAJEEBAN   08 JUN, 2024 | 11:50 AM

image
 

ECONOMYNEXT

SHIHAR ANEEZ

இந்தியாவின் பிரதமராக இரண்டு தடவை பதவிவகித்துள்ள நரேந்திரமோடி இந்திய நாடாளுமன்ற தேர்தலில்  மூன்றாவது முறை எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் தேர்தல்முடிவுகள் இலங்கை தொடர்பான அவரது கொள்கைகளில் மாற்றத்தை  ஏற்படுத்தாது  என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையுடனான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆக்ரோசமான உந்துதல் குறையலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை பெற தவறியுள்ளதுடன் மாநில கட்சிகளின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

272 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 ஆசனங்னகளை கைப்பற்றியுள்ளது எனினும் நரேந்திரமோடியின் பாஜகவிற்கு 240 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.

இதன் காரணமாக 28 ஆசனஙகளை கைப்பற்றிய இரண்டு மாநில கட்சிகள்  செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக மாறியுள்ளன.

இலங்கையில் நிலம் எண்ணெய் எரிவாயு மற்றும் மின் இணைப்பிற்கு இந்தியா அதிக அழுத்தம் கொடுத்துவருகின்றது.

மேலும் தனியார் துறையுடன் இணைந்து இலாபகரமான மீள்புதுப்பித்தக்க எரிசக்தி மற்றும் துறைமுக திட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

நரேந்திரமோடியின் சிறிய வித்தியாசத்திலான வெற்றியின் தாக்கங்கள் குறித்து ஆய்வாளர்கள்  தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாக கொண்ட கேள்விபதில்கள்

modi_ranil_11.jpg

கேள்வி- 

இலங்கை குறித்த இந்திய வெளிவிவகார கொள்கையின் முக்கிய மாற்றங்கள் என்ன ?

பதில்- கடந்த தடவையை விட குறைவான ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் மோடி அரசாங்கம்  இலங்கையுடன் தனது வலுவான ஈடுபாட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்தும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கிய சகா இந்தியா.நிதிமற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியது.

இலங்கை குறித்து இதுவரை காலமும் பின்பற்றிய அதேகொள்கையை இந்தியா பின்பற்றும் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் ஏற்கனவே இரண்டு நாடுகளும் ஆராய்ந்துள்ள திட்டங்களிற்கான அழுத்தங்களை இந்தியா தொடரக்கூடும் என  குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மற்றும் கப்பல்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை இந்தியா தொடரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில ஆய்வாளர்கள் மோடி 9ம் திகதி மீண்டும் பதவியேற்றதும் மீண்டும் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வார்   என தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ஏனைய கொள்கைகள் தொடர்பிலான இந்தியாவின் உந்துதல்கள் அழுத்தங்களின் வேகம் குறைவடையலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை வெளியேறச்செய்வேன் என தேர்தல் வாக்குறுதியளித்த முகமது முய்சு மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகியுள்ளதை தொடர்ந்து மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிராந்தியத்தில் இலங்கையுடன் மாத்திரமே இந்தியாவிற்கு சுமூகமான உறவுகள் காணப்படுகின்றன.

இலங்கையில் இந்தியா குறித்த எதிர்மறையான உணர்வுகள் உருவாவதற்கு கடந்த காலங்களில்  சில விடயங்கள் குறித்து இந்தியா கடுமையான அழுத்தங்களை கொடுத்தமையே காரணம் என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் இந்தியா இவ்வாறு கடும் அழுத்தங்களை கொடுப்பதை குறைத்துக்கொள்ளும்  அல்லது கைவிடும் என தெரிவித்துள்ளனர்.

மாலைதீவில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் இலங்கையை இந்தியா இழக்க முடியாது என இராஜதந்திர ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்தியா இலங்கையின் நலனிற்கு எதிரானது என கருதப்படும் திட்டங்கள் கொள்கைகள் குறித்து கடும் அழுத்தங்களை கொடுப்பதை கைவிடும் என தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர் இந்திய அரசாங்கம் இலங்கையின் அரசநிறுவனங்கள் மற்றும் ஏனைய திட்டங்களை பெற்றுக்கொள்ள முயல்வது குறித்து தீடிரென இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளதை கடந்த சில மாதங்களில் உருவாகியுள்ளதை பார்க்க முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் மக்களால் நியாயமற்றது கருதப்படும் சில விடயங்களில் இந்தியா விட்டுக்கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185592

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.