Jump to content

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன்

Published By: RAJEEBAN

26 JUN, 2024 | 02:01 PM
image
 

tamil guardian

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

umakumaran11.jpg

 

மே 2009க்கு முன்னதாகவும் மே 2009 இன் போதும் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக இதுவரை எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என்பது உண்மையாகவே நம்பமுடியாத விடயமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்,ஆயிரக்கணக்கில் எங்கள் மக்கள் மணலில் குறுகியி நிலப்பரப்பில் தஞ்சமடைந்திருந்ததையும்,மருத்துவமனைகள் மீதும் செஞ்சிலுவை சங்கத்தின்மீதும் வேண்டுமென்றே எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றதையும்,உயர் பாதுகாப்பு வலயங்கள் எனப்படுபவையையும்,தமிழ் ஆண்களும் பெண்களும் எதிர்கொண்ட சித்திரவதைகள் பாலியல் வன்முறைகளையும் நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஒரு முழுதலைமுறை குடும்பங்கள் இல்லாமல் வளர்கின்றது ,ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் யுத்தத்தினால் ஏற்பட்ட உள உடல் காயங்களுடன்வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இதனை இவ்வளவு விரிவாக நினைவுபடுத்தவிரும்பவில்லை ஆனால் எங்கள் வரலாற்றை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கை ரோம்சாசனத்தில் சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தில்கையெழுத்திடாதது ஏமாற்றமளிக்கின்றது ,ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் படுகொலைகள் இடம்பெறும்வேளை தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய டேவிட்மில்லிபாண்ட் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் தனது கரங்களை உயர்த்த முயன்றார் எனக்கு இது ஞாபகம் இருக்கின்றது,அப்போதைய பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுனுடன் இது பற்றி பேசசென்றிருந்த தமிழர்களில் நானும் இடம்பெற்றிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சர் அக்காலப்பகுதியில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடன் காணப்பட்டார்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமை குறித்து ஐநாவின் அனைத்து சபைகளும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்  என தான் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார் என உமாகுமரன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவங்கள் இடம்பெற்றுமுடிந்து 15 துயரமான வருடங்களாகிவிட்டன,ஆனால் தொழில்கட்சி நீதிக்காக பரப்புரை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை,

எங்களின் கட்சியின் பல உறுப்பினர்கள் தங்கள் தொகுதிமக்களிற்காக குரல்கொடுத்துள்ளனர், தமிழ் மக்களின் நீதிக்காக போராடியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் தமிழர்களிற்கு ஆதரவாக செயற்படவேண்டும்,அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை செவிமடுக்கவேண்டும் என தொழில்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட்லம்மி வேண்டுகோள் விடுத்துவருகின்றார் எனவும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

 

uma_kumaran22.jpg

இந்த வருடம் தொழில்கட்சியின் தற்போதைய தலைவரும் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என நாங்கள் எதிர்பார்ப்பவருமான கெய்ர் ஸ்டார்மெர் அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்காக நாங்கள் பாடுபடவேண்டும் என  தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தரசமாதானம் நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு குறித்து பிரிட்டனின் தொழில்கட்சி தெளிவானஉறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

தமிழர்களிற்கு கிடைக்கவேண்டிய பொறுப்புக்கூறல் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் தொழில்கட்சி ஏற்கனவே ஆதரவை வெளியிட்டுள்ளது,தொழில்கட்சி ஆட்சியமைத்தால் அதன் வெளிவிவகார கொள்கைகளில் முன்னுரிமைக்குரிய விடயமாக இது காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை நான்காம் திகதி நான் தெரிவுசெய்யப்பட்டால் நான் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தீவிரஈடுபாட்டை பேணுவேன்,குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அரசசார்பற்ற அமைப்புகளுடன் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம்  குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்,பாலஸ்தீனத்தில் தற்போது நடைபெறும் விடயங்கள் குறித்து எனது கருத்து இதுவே -துயரத்தில் சிக்குண்டவர்கள் உயிரிழந்தவர்களிற்கான நீதியை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கான ஆதரவை ஏனைய நாடுகளிடமிருந்து பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளிற்காக நான் பரப்புரை செய்வேன் என தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.... அவலங்களையும் இழப்புக்களையும் துயரங்களையும் சுமந்து ஆறுதல் தேடும் மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கப்படவேண்டும் தாங்கள் தங்கள் மண்ணில் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்து தலைவர்களை தேர்ந்தெடுத்து தமது அபிலாசைகளை நிறைவேற்றுவார்கள் என காத்திருந்து ஏமாந்துள்ளார்கள். அவர்கள் தலைவர்களே தமது எதிரிகளை காப்பாற்றுகிறார்கள். தங்கள் நிலங்களில் நடந்த துயரங்களை எடுத்துச் செல்ல, சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் இன்று பல நாடுகளில் இந்தப்பிரச்சனை பேசப்படுகிறது  அரசியல் செய்கிறது. இது வெறும் 
வாக்கு   அரசியலா? அல்லது  மாற்றம் ஏதும் ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் அவர் இழக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.    https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனின்-மறைவுக்கு-இந்திய-பிரதமர்-இரங்கல்/175-339688   மூத்த தமிழ் அரசியல்வாதி சம்பந்தன் காலமானார் : அரசியல்வாதிகள், பிரமுகர்கள்   இரங்கல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் இயற்கை எய்தினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணித்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரங்கல் ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல் ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.   https://thinakkural.lk/article/304895   சம்பந்தன் மறைவுக்கு அங்கஜன் இரங்கல் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர். தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது. வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே. இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இன்று இழந்துள்ளது.  அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தன்-மறைவுக்கு-அங்கஜன்-இரங்கல்/175-339678 பாராளமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவையொட்டி இந்துக் குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி !     இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனை இழந்துள்ளோம். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்டவர். எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர். நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம். இச்சமயத்தில் அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி. கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். தலைவர் இந்துக் குருமார் அமைப்பு. சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள். செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு. https://www.battinews.com/2024/07/blog-post_47.html
    • தொடர் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் பயங்கரம் damithJuly 1, 2024   நைஜீரியாவில் (Nigeria) நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவமானது நேற்றுமுன்தினம்(29)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகளால் குவோசா நகரில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளதாக போர்னோ மாநில அவசர முகாமைத்துவ அமைப்பின் (State Emergency Management Agency) தலைவர் பார்கிண்டோ சைட் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, உட்புற உறுப்பு சேதம் முதல் மண்டை ஓடு மற்றும் மூட்டு முறிவு வரை பலருக்கு அதி தீவிரமான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விபரித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.thinakaran.lk/2024/07/01/world/69441/தொடர்-தற்கொலை-தாக்குதல்/
    • சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல்! உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.   http://www.samakalam.com/சம்பந்தனின்-இறுதிக்-கிரி/
    • நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது! adminJuly 1, 2024   இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (01.07.24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/204818/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.