Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

27 JUN, 2024 | 05:43 PM
image
 

தமிழகத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகில் 18 வயதுக்குட்பட்ட 8 சிறார்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இந்திய அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து, மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும்போது சிறார்களும் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதனடிப்படையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீன்பிடி படகுகளில் சிறார்கள் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ராமேஸ்வரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தியுள்ளனர். 

இதன்போது, நேற்று (26) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்கு அருகில் மீன்பிடிக்க வந்து, இன்று (27) காலை கரை திரும்பிய 8 மீன்பிடி படகுகளில் 8 சிறார்கள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த எட்டு சிறார்களை மீட்ட தொழிலாளர் அமுலாக்கப் பிரிவு உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் "சிறார்கள் மீன்பிடி தொழிலுக்கு வரக்கூடாது" என்றும் சிறுவர்களை பள்ளிக்கு செல்லுமாறும் அறிவுரை வழங்கியதுடன், சிறார்களை மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்திய விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறார்களை மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தியதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச் சீட்டு மற்றும் மானிய டீசல் இந்த வழக்கு முடியும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/187114

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.