Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நீர்க்கடன்
---------------
கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன  வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம்.
 
ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங்கள் அம்மாக்களுக்கு நீர்க்கடன் செய்யாதோர் அதைச் செய்ய இது ஒரு நல்ல இடமும், நேரமும் என்றனர். எனக்கு இந்த நடைமுறை முற்றிலும் புதியதாக இருந்தது. இங்கு இப்படி எதுவும் நான் இங்கு இருந்த காலங்களில் நடந்ததேயில்லை. 
 
அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பின்னர் ஒரு தடவை, 84 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், இராணுவம் எங்கள் ஊரையும், அயல் ஊர்களையும் சுற்றி வளைத்தது. பல இளைஞர்களை இராணுவம் கைது செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருந்தது. கைது செய்து கொண்டு வந்தவர்களை அந்த ஆலமரத்தின் அருகே இருக்கும் அரைச்சுவர்க் கட்டிடத்தில் ஒரு சுவரைப் பார்த்து முழங்காலில் இருக்க வைத்திருக்கின்றது. பின்னர் அவர்கள் எல்லோரும் அந்த இராணுவத்தால் சுடப்பட்டார்கள்.
 
இதில் ஒருவர், சுடப்படுவதற்கு முன் அல்லது சுடப்பட்ட பின், அன்று அங்கு எவருமே உயிர் தப்பாதபடியால் எது உண்மை என்று என்றும் தெரியப் போவதில்லை, ஓடிப் போய் தீர்த்தக் கடலில் விழுந்து இறந்திருந்தார். நாங்கள் போய் பார்க்கும் போது கடலின் நிறம் அதன் நீல நிறமாகவே இருந்தது. அது தன்னை உடனேயே சுத்தப்படுத்தி விட்டு, கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தது. தீட்டே இல்லாத கடல். 
 
புரோகிதர் ஒரு தர்ப்பையை என் விரலில் கொழுவி விட்டு, இன்னொன்றை என் இடுப்பு வேட்டிக்குள்  செருகி விட்டார். அப்படியே கடலில் இறங்கி, கிழக்கே பார்த்து அம்மாவை நினைத்து கும்பிட்டு விட்டு, இடுப்பில் இருக்கும் தர்ப்பையை கடலில் விடச் சொன்னார். கங்கா, யமுனா, காவேரி என்று ஏதோ சொன்னார்.
 
ஒரே கூட்டமாக இருந்தபடியால், ஒதுங்கி ஒரு ஓரமாகவே இறங்கினேன். நிமிர்ந்தால் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்தது. அம்மாவை எப்படி கும்பிடுவது என்று தெரியவில்லை. தோட்டங்களுக்குள்ளாலும், ஒழுங்கைகளுக்குள்ளாலும் என்னை துரத்திக் கொண்டு பள்ளிக்கூடம் வரை கொண்டு வந்து விட்டுப் போன அம்மாவின் முகம் மட்டும் தான் மனதில் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளும் அடி விழவேயில்லை.
 
இடுப்பில் இருக்கும் தர்ப்பையை எடுத்து கடல் நீரில் விடும் நேரத்தில், அதே இடத்தில் அன்றொரு நாள் முகம் குப்புற ஒருவர் மிதந்து கொண்டிருந்தது ஞாபகமும் வந்தது. அந்த நினைவையும் கலைக்காமல், அப்படியே தர்ப்பையை கடலில் விட்டேன்.
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது

ம்… நீர்க்கடன் ஆண்களுக்கு மட்டுமே உரியது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.  அம்மாவுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் சேர்த்துச் செய்திருக்கிறீர்கள்👌

அந்த ஆலமரத்தைச் சுற்றி பல கதைகள் இருக்குமே?

வீரப்பனின் கதையும் அந்த மரத்தடியில்தானே முடித்து வைக்கப் பட்டிருந்தது?

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கீரிமலையைத்தான் சொல்கிறீர்கள் என்று புரிகின்றது.......நானும் ஆடிஅமாவாசையன்று அங்குதான் நீர்க்கடன் செய்வது வழக்கம் ........!   😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நீங்கள் கீரிமலையைத்தான் சொல்கிறீர்கள் என்று புரிகின்றது.......நானும் ஆடிஅமாவாசையன்று அங்குதான் நீர்க்கடன் செய்வது வழக்கம் ........!   😇

இல்லை சுவி ஐயா, இது என்னூரில் இருக்கும் இடம். முன்னர் இங்கு இப்படி நடப்பதில்லை.

பாண்டவர்கள் நீர்க்கடன் முடித்த பின்னரயே பாஞ்சாலி கூந்தலை அள்ளி முடித்தார் என்று ஒரு சிறுகதை சில வருடங்களின் முன்னர் வாசித்திருந்தேன். அன்றிலிருந்து இந்தச் சொல் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது.

8 hours ago, Kavi arunasalam said:

ம்… நீர்க்கடன் ஆண்களுக்கு மட்டுமே உரியது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.  அம்மாவுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் சேர்த்துச் செய்திருக்கிறீர்கள்👌

அந்த ஆலமரத்தைச் சுற்றி பல கதைகள் இருக்குமே?

வீரப்பனின் கதையும் அந்த மரத்தடியில்தானே முடித்து வைக்கப் பட்டிருந்தது?

 

வீரப்பனின் கதை முடிந்தது சந்தியில் இருக்கும் அரச மரத்தடியில்....... ஏராளமான கதைகள் இரண்டு மரத்தடிகளிலும் இருக்கின்றன........👍

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.

வேப்பமரத்தில்த் தான் குத்தியோ வெட்டியோ பிசின் எடுப்பது.

முதல்தடவையாக ஆலமரத்தில் குத்தி அதில் வரும் பாலைக் குடிப்பதென்பதை முதல்தடவையாக கேள்விப்படுகிறேன்.

ஐயா

உண்மையைத் தானே சொல்றீங்க?

அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது ஆலமரத்து பால் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

திரும்ப வரவில்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே.

Edited by ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

வேப்பமரத்தில்த் தான் குத்தியோ வெட்டியோ பிசின் எடுப்பது.

முதல்தடவையாக ஆலமரத்தில் குத்தி அதில் வரும் பாலைக் குடிப்பதென்பதை முதல்தடவையாக கேள்விப்படுகிறேன்.

ஐயா

உண்மையைத் தானே சொல்றீங்க?

அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது ஆலமரத்து பால் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

திரும்ப வரவில்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே.

ஏதோ ஆட்டுப் பாலை குடிக்கிற மாதிரி ஆலம் பாலை குடிக்கப் போகிறேன் என்று சொல்றீங்க..... அது பால் இல்லைங்க....... கல்லால் குத்தி அப்படியே காய விடவேண்டும்.........பேசாம ஒரு சூயிங்கம் பக்கற்றை வாங்குங்கோ.........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பேசாம ஒரு சூயிங்கம் பக்கற்றை வாங்குங்கோ...

சிவாஜிலிங்கத்துக்கும் சூயிங்கம் வாங்கச் சொன்னீங்களா?  சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். சீமான் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிவாஜிலிங்கம் எதையோ வாயில் மென்று கொண்டிருந்தார். அநேகமாக அது சூயிங்கமாக இருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kavi arunasalam said:

சிவாஜிலிங்கத்துக்கும் சூயிங்கம் வாங்கச் சொன்னீங்களா?  சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். சீமான் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிவாஜிலிங்கம் எதையோ வாயில் மென்று கொண்டிருந்தார். அநேகமாக அது சூயிங்கமாக இருக்கலாம். 

'நாட்டாமை' படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கின்றது............🤣

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.