Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிலந்தி வலை
----------------------
காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.
 
சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி கட்டினதா...........' என்று கேட்டு விட்டால், நாமும் தான் வீட்டில் அகப்பட்டுப் போகின்றோம்.  இந்தப் பூமியையே காலால் எட்டி உதைத்து உருட்டித் தள்ளி விடுவோம் என்று வீட்டுக்குள்ளே வீரம் பேசும் பெண் பிள்ளைகள், அதே வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி அடங்கி நிற்பது ஒரு நூலில் மேலிருந்து கீழே தலை கீழாக இறங்கி வரும் சிலந்திகளுக்கும், சரசரவென்று காலில் ஏறி கடந்து ஓடும் கரப்பான் பூச்சிகளுக்குமே மட்டுமே.
 
பல போதைப் பொருட்களின் வீரியத்தை, தாக்கத்தை அறிய அவற்றை சிலந்திகளுக்கு கொடுத்து அதன் பின்னர் அவை பின்னும் வலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவை பின்னியவை எல்லாமே கோணல், ஓட்டை வலைகள். ஒரு புழு பூச்சியும் அங்கே சிக்காது. இந்த ஆராய்ச்சி அறிக்கையின் பின்னர் அந்தக் குறிப்பிட்ட போதை மருந்துகளின் விற்பனை குறைந்ததா அல்லது கூடியதா என்ற தரவுகளை எவரும் வெளியில் விடவில்லை.
 
சில சிலந்திகள் தாங்கள் கட்டும் வலையில் அவை தங்குவதில்லை. 'என்னடா........ வலை வெறுமனே இருக்குதே.........' என்று நான் வலையைப் பின்னிய சிலந்திகளை சில தடவைகள் தேடியும் இருக்கின்றேன். வலையில் இருந்து போகும் ஒரு ஒற்றை இழையில், சிறிது தூரத்தே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார் அதன் சொந்தக்காரர். ஒரு நாலைந்து வலைகள் சொந்தமாக வைத்திருக்கும் தண்டையல், முதலாளி போன்றவர் இவர்.
 
எல்லா சிலந்திகளும் வலை பின்னித் தான் இரையை பிடிக்கும் என்றில்லை. கொய்யா மரத்தில் ஏறி, அடுத்த கொப்பில் கைவைக்க, அங்கே ஒரு புலி முகம் நிற்க, சர்ரென்று சறுக்கி கீழே வந்து, உள்ளுக்குள் போயிருக்குமோ என்று பயப்பட, அந்தப் பயத்தில் எல்லா இடமும் ஏதோ ஊர்வது போன்று உணர்வு வர, பதறி அடித்து எல்லா உடுப்புகளையும் கழட்டி எறிந்த நிகழ்வும் உண்டு. புலிமுகம் அப்படியே மேலே அந்தக் கொப்பிலிருந்தே இந்தக் கூத்தை பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.
 
வீட்டின் முன் வாசலுக்கு வெளியே இரண்டு பக்கங்களிலும் வரிசையாக ஒரு பத்து அடிகளுக்கு பூச்செடிகள். எல்லாமே ரோஜாவின் வகைகள் தான். உயர்த்தி மண் போட்டு, அதற்கு கான்கிரீட்டால் எல்லை போட்டு வளர்க்கப்படுகின்றன. நடுவால் போய் வரும் பாதை. நித்திரைக்கு போக முன் வெளியே எட்டிப் பார்த்து விட்டு வருவோமே என்று போனேன். முகத்தில் அடித்தது ஒரு சிலந்தி வலை. பின்னேரம் இது இங்கே இருக்கவில்லை. அதற்கிடையில் முழு வலையை ஒரு சிலந்து கட்டி விட்டதா என்று ஆச்சரியமாக இருந்தது. முதலே வேறு எங்கோ கட்டி வைத்து, அப்படியே தூக்கி வந்து, இரண்டு வரிசை பூச்செடிகளுக்கும் இடையில் பொருத்தும் தொழில்நுட்பமாகவும் இருக்குமோ என்றும் ஒரு யோசனை வந்தது.
 
முகத்தில் பட்டு அறுந்த சிலந்தி வலையில் இருந்து ஒரு சிலந்தி கீழே விழுந்து ஓடுவது தெரிந்தது. 'அடப் பாவமே....... என்னால் இதனுடைய இன்றைய இரவுணவு இல்லாமல் போய் விட்டதே.........' என்று பார்த்து நிற்க, திடீரென்று பூச்செடி ஒன்றின் அடியிலிருந்து தோன்றிய பல்லி ஒன்று அதன் நாக்கை நீட்டி சிலந்தியை வளைத்து எடுத்துக் கொண்டது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி கட்டினதா...........' என்று கேட்டு விட்டால், நாமும் தான் வீட்டில் அகப்பட்டுப் போகின்றோம்.  இந்தப் பூமியையே காலால் எட்டி உதைத்து உருட்டித் தள்ளி விடுவோம் என்று வீட்டுக்குள்ளே வீரம் பேசும் பெண் பிள்ளைகள், அதே வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி அடங்கி நிற்பது ஒரு நூலில் மேலிருந்து கீழே தலை கீழாக இறங்கி வரும் சிலந்திகளுக்கும், சரசரவென்று காலில் ஏறி கடந்து ஓடும் கரப்பான் பூச்சிகளுக்குமே மட்டுமே.

ஓரிரு மாதங்களுக்கொரு தடவை வீட்டுக்குள் போகும் நம்ம நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்க சார்.

கொண்டு போகும் பொதிகளை வாசலில் வைத்துவிட்டு நீச்சல் குளத்தில் நீச்சலடித்தது போல கைகளை அசைத்துக் கொண்டு போனாலே உடம்பில் வலைகள் ஒட்டாமல் போகலாம்.

இதைவிட வாசலில் சிட்டுக்குருவி கூடுகட்டி இப்போ பெரிய குடும்பம் நடத்துகிறார்கள்.

இருண்ட பின் முன் கதவைத் திறக்கப் போக இப்ப என்னத்துக்கு கதவைத் திறக்கப் போறீங்கள் என்று மனைவியின் அதட்டல்.

ஏனப்பா என்ன நடந்தது? முன்னுக்கு ஏதோ வாகனச் சத்தம் கேட்டதே.

உனக்கு கேட்கலையா? என்றால்

யாராவது வந்தால் பெல் அடிப்பாங்கள் தானே இப்ப கதவைத் திறந்து சத்தம் போட குருவிகள் பயப்பிடப் போகுது என்கிறா.

இனி ஆட்களைக் காணலையே என்று என்னவெல்லாம் வந்து குடியேறப் போகுதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

யாராவது வந்தால் பெல் அடிப்பாங்கள் தானே இப்ப கதவைத் திறந்து சத்தம் போட குருவிகள் பயப்பிடப் போகுது என்கிறா.

🤣...........

பெரும் பரோபகாரர்கள்.......

எங்களை விட மற்றவர்கள் எல்லோருக்கும் நல்லாகவே பரோபகாரம் பார்ப்பார்கள்.

அவர்களை கேட்டால், நீங்களும் அப்படித்தானே என்று எங்களைச் சொல்வார்கள்.........😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

சில சிலந்திகள் தாங்கள் கட்டும் வலையில் அவை தங்குவதில்லை. 'என்னடா........ வலை வெறுமனே இருக்குதே.........' என்று நான் வலையைப் பின்னிய சிலந்திகளை சில தடவைகள் தேடியும் இருக்கின்றேன். வலையில் இருந்து போகும் ஒரு ஒற்றை இழையில், சிறிது தூரத்தே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார் அதன் சொந்தக்காரர். ஒரு நாலைந்து வலைகள் சொந்தமாக வைத்திருக்கும் தண்டையல், முதலாளி போன்றவர் இவர்.

சிலந்தி, பல்லி என்று பலவற்றுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.சாப்பாடு போட்டு அவைகளை வளர்க்கத் தேவையில்லை. உங்களுக்கும் செலவில்லை. இருந்திட்டுப் போகட்டுமே.

சிலந்தி வலையை வாசிக்கும் போது.

சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா

பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…”

கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன........கவி கூறியதுபோல் காலையில் உங்களின் கதை வந்திருக்குதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது , முன்பு ஈழநாட்டில் "கோகிலாம்பாள் வழக்கு" வாசித்ததுபோல்........!  😂

பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......!

அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா

பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…”

கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.

🙏........

நீங்கள் இப்படி சொல்ல எனக்கு பயமாக இருக்கின்றது. மனதில் தோன்றுவதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு சிலருக்கு பிடித்திருக்கின்றது என்பது மிகவும் சந்தோசம். 

'இங்கு படைக்கப்பட்டவை எல்லாம் உண்பதற்காகவே........' என்று பாரதத்தில் வியாசர் பீஷ்மருக்கு ஒரு இடத்தில் சொல்வார். பீஷ்மர் வியாசரைப் பார்க்க அவரின் குடிலுக்கு போயிருக்க, அங்கு வியாசரின் குடிலின் முன் நின்ற நிறைமாத பசுவை ஒரு சிங்கம் இழுத்துப் போகும் போது இந்த உரையாடல் வருகின்றது.

கண்ணதாசன் பாடலில் சொல்லியிருப்பது போல, சிலந்தி போலவே எல்லா உயிர்களும் வலைகளை பின்னி வைத்திருக்கின்றன. சிலந்தியின் வலை கண்ணுக்குத் தெரிகின்றது, அதன் கீழே கண்ணும் கருத்துமாக ஒளித்திருக்கும் பல்லியின் வலை தெரியவில்லை, ஆனால் வலை அங்கும் இருக்கின்றது. 

 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......!

அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!

🤣........

இங்கு ஒரு பேராசிரியர் தபாலில் மற்றும் வேறு வழிகளில் குண்டு அனுப்பி சில சக பேராசிரியர்களையும் மற்றவர்களையும் காயப்படுத்தியும், சிலரை கொலை செய்ததும் ஞாபகத்திற்கு வருகின்றது.......Unabomber என்று அழைக்கப்பட்டார்........🫣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.