Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு யுத்த பாதீடு 13,640 கோடி ரூபாக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 07-10-2007 22:31 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு யுத்த பாதீடு 13,640 கோடி ரூபாக்கள்

2008ம் ஆண்டுக்கான யுத்த பாதீட்டை சிறீலங்கா அரசாங்கம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு பாதீ்ட்டு செலவீனங்கள் 16,640 கோடி ரூபாக்களை ஒதுக்கத் தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான பெருமெடுப்பிலான போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டே அதிநவீன ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நோக்கோடு இந்த பாதீட்டை சிறீலங்கா மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் சிறீலங்கா அரசாங்கத்தினால் 13.940 கோடி ரூபாக்களை ஒதுக்கிய நிலையில் அடுத்தாண்டு பாதீட்டை 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-09

வரவு செலவுத் திட்டத்தோடு வரப்போகும் யுத்தத் தீவிரம்

இலங்கை அரசின் யுத்த தீவிரத்தை நிரூபிப்பதுபோல அதன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டமும் "யுத்த பட்ஜெட்' ஆகவே அமையப் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த வருடம் பாதுகாப்புச் செலவினத்துக்காக சுமார் பதினான்காயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் குறை நிரப்புப் பிரேரணைகள் மூலம் மேலும் நிதி அவ்வப்போது படைத்துறைக்குக் கொட்டப்பட்டது.

அடுத்த வருடத்துக்கான பாதுகாப்புச் செலவினத்துக்கு இப்போதைக்கு பதினாறாயிரத்து அறுநூற்று நாற்பது கோடி ரூபா ஒதுக்கப்படவிருக்கின்றதாகத் தெரிகின்றது. அரசின் அடுத்த ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு விவர அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

அதிலேயே இந்த ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பும் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டை விடவும் 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவினத்துக்கு நாற்பது வீத நிதி அதிகரிப்புச் செய்யப்பட்டது. அப்போதே இந்த அரசின் உள் நோக்கம் யுத்த தீவிரம்தான் என்பது தெளிவாகிவிட்டது. அதை உறுதிப்படுத்துமாற்போல இம்முறை அது மேலும் சுமார் இருபது வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றது. யுத்த சன்னதத்தில் ஆவேசம் கொண்டு நிற்கும் தென்னிலங்கை அரசுப் படைகள் கொடூரப் போர் ஒன்றைத் தமிழர் தாயகத்தின் மீது குறிப்பாக வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது தொடுப்பதற்கு முனைந்து நிற்கின்றன என்பது தெளிவு.

அத்தகைய கொடூரப்போர் தொடுக்கப்படும்போது பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் மேலதிக நிதியை அவ்வப்போது குறைநிரப்புப் பிரேரணைகள் மூலம் அரசு நாடாளுமன்றம் வாயிலாக பெற்றுக் கொடுக்கும் என்பதும் தெரிந்த விடயமே. அதுவே கடந்த காலத்திலும் இடம்பெற்றுவந்த வழமையாகிவிட்டது.

எனவே, அடுத்த ஆண்டுக்கான யுத்தச் செலவினமாக இப்போதைக்கு 16 ஆயிரத்து 640 கோடி ரூபா காட்டப்பட்டாலும் அது, யுத்தம் தீவிரம் அடைய, அடைய மென்மேலும் உயரும் என்பது திண்ணம்.

இத்தகைய யுத்தத் தீவிரப் போக்கால் நாட்டின் வளத்தையும், பொருளாதாரத்தையும், சக்தியையும் வீணாக்கி, மோசமான வருமான நெருக்கடியை உருவாக்கியிருக்கும் இந்த அரசுத் தலைமை, இதன் காரணமாக, மக்கள் வயிற்றில் அடித்துள்ளது. விலைவாசி எகிறி, வாழ்க்கைச் செலவு கட்டுமட்டில்லாமல் உயர்ந்தது. அப்பாவி மக்களை "அன்றாடம் காய்ச்சிகளாக' வாழ்வதற்குக் கூட இடமில்லை என்ற நெருக்கடிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

இதனால் கொதித்துப்போயுள்ள தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்கு யுத்த வெறியை ஊட்டி, போர்முனை வெற்றிகளை போதைதரும் அறிவிப்புகளாக வெளியிட்டு, சமாளிக்கலாம் என்பது அரசின் திட்டம்.

இந்த அடிப்படையில் ஒருபுறம் தென்னிலங்கை மக்களைத் திசை திருப்புவதற்காக யுத்த வெற்றிகள் பற்றிய அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டு இந்த அரசுத் தலைமைக்கு.

மறுபுறம், இவ்வாறு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திய பின்னணியில் அரசுத் தலைமையால் அடுத்த மாத முற்பகுதியில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தை அங்கு அங்கீகரிக்கச் செய்யவேண்டிய கட்டாயமும் உண்டு.

வரவு செலவுத்திட்டத்தில் தோற்றால் மஹிந்தவின் இந்த அரசுவீட்டுக்குப் போக வேண்டியதுதான். வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதாயின் தற்சமயம் நாடாளுமன்றில் மதில்மேல் பூனையாக இருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பியை எப்படியும் தனது வலைக்குள் அரசுத் தலைமை வளைத்துப்போட வேண்டும். நாடாளுமன்றத்தில் கட்சிகளின் ஆசனங்கள் தொடர்பான அட்சர கணிதத்தில் ஏற்கனவே இந்த அரசுத் தலைமை அல்லாடுகின்றது. வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஜே.வி.பி. இணங்கினால், அதை வைத்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டி, வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்துத் தனது இந்த அரசைப் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வீட்டுக்கு அனுப்பிவிடும். அதற்காக அக்கட்சி தலையால் கிடங்கு கிண்டவும் தயார் என்பது அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியாததல்ல.

ஆகவே, வரவு செலவுத் திட்ட சமயத்தில் தமது அரசுக்கு எதிராக ஜே.வி.பி. அரசியல் போர்ப் பிரகடனம் செய்யாமல் இருப்பதற்காக அதற்கான அரசியல் காய் நகர்த்தலாக தமிழர் தாயகத்தின் மையப் பூமியான வன்னித் தளம் மீது முழு அளவில் போர்ப்பிரகடனம் செய்யத் தயாராகி வருகிறார் ஜனாதிபதி மஹிந்தர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் சமயத்தில்

வன்னிப் பெருநிலப்பரப்பைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதற்கான பெரும் படையெடுப்பு நகர்வு ஒன்றை அரசுப் படைகள் ஆரம்பித்து, முழு மூச்சுடன் முன்னெடுக்குமாயின் அத்தகைய யுத்த நகர்வுத் திட்டத்தை ஊக்குவித்து, பௌத்த சிங்கள மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகப் போராடும் அரசைக் கவிழாமல் காப்பாற்ற வேண்டும் என்ற "சிங்கள பௌத்த தேசிய வாதக் கடப்பாட்டை' முன்னிறுத்தி, இந்த அரசுக்குச் சார்பாக நாடாளுமன்றத்தில் செயற்பட முடியும் என்பதை ஜே.வி.பி. ஏற்கனவே அரசுத் தலைமைக்குக் கோடி காட்டிவிட்டதாகக் கொழும்புப் பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது அரசியல் இருப்புக்கும் அரசின் ஸ்திரத்துக்கும் தமிழர் தேசம் மீதான யுத்த வெறித் தீவிரம் என்ற ஒரேயொரு துரும்புச் சீட்டை ஒரு வழியில் கூறுவதானால் துருப்புச் சீட்டை வைத்திருக்கும் மஹிந்த அரசு, தனது அரசின் மிக நெருக்கடியான விவகாரமான நாடாளுமன்றத்தில் வரவு, செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கச் செய்யும் அரசியல் இலக்கை எட்டுவதற்காக யுத்தத்தை ஒரே வழிமுறையாகப் பயன்படுத்தப் போகின்றது.

அரசின் அரசியல் இலக்கை அடையவும் அரசின் இருப்பை உறுதிப்படுத்தவும் நாட்டின் யுத்தத்தைக் கருவியாக்கும் மஹிந்தரின் தலைமை, அதற்காக இந்த வரவு செலவுத்திட்ட சமயத்தில் தமிழர் தாயகம் மீது பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலப் போகின்றது என்பதே அரசியல் ஆய்வாளர்களினதும், அவதானிகளினதும் எதிர்பார்ப்பு.

ஆக, இலங்கைத் தீவில் பெரும் யுத்தம் வெடிக்கப்போகின்றது என்ற பீதியில் உறைந்திருக்கும் மக்கள், அது எப்போது என்ற அச்சம் கலந்த அங்கலாய்ப்போடு அல்லாடுவது தெரிகின்றது.நாடாளுமன்ற நகர்வுகளுக்கு ஏற்றவாறு வரவு செலவுத்திட்ட சமயத்தில், தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகள் எல்லாம் நாடாளுமன்றில் அரசுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க வைக்கும் விதத்தில், யுத்த நகர்வுகளும் ஆரவார அறிவிப்புகள், பிரசாரங்கள், பரப்புரைகளோடு முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

http://www.uthayan.com/

எதிர்வரும் ஆண்டு பாதுகாப்புச் செலவிற்காக 16 ஆயிரத்து 644 கோடி ரூபாயை (166.44 பில்லியன் ரூபாய்) ஒதுக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.