Jump to content

சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,API

கட்டுரை தகவல்
  • எழுதியவர், வில் கிராண்ட்
  • பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ
  • 3 ஜூலை 2024, 15:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார்.

கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

“பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூனியன் தீவு பயங்கரமான நிலையில் உள்ளது. உண்மையில் கிட்டத்தட்ட முழு தீவும் தரைமட்டமாகியுள்ளது," என்று கோய் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.

"ஒரு கட்டடம்கூட இப்போது இல்லை. வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சாலைகள் தடைப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் தெருக்களில் விழுந்துள்ளன.”

மீனவரும், மீன்பிடி வழிகாட்டியுமான செபாஸ்டின் சைலி இதை ஆமோதிக்கிறார். “எல்லாமே போய்விட்டது. நான் இப்போது வாழ்வதற்குக்கூட எந்த இடமும் இல்லை, ”என்று அவர் கூறினார்.

கடந்த 1985 முதல் யூனியன் தீவில் அவர் வசித்து வருகிறார். 2004இல் இவான் சூறாவளி வீசியபோதும் அவர் அங்கு இருந்தார். ஆனால் "பெரில் சூறாவளியை எதனுடனும் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் வேறுவிதமாக, மோசமாக இருந்தது" என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூறாவளியின் பயங்கரமான அனுபவம்

"ஒரு மாபெரும் சூறைக்காற்று கடந்து சென்றது போல் இருந்தது. யூனியன் தீவின் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது."

அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் அளவு அவரது குரலில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

"நான் எனது மனைவி மற்றும் மகளுடன் இருந்தேன். உண்மையைச் சொல்வதானால் நாங்கள் தப்பிப் பிழைப்போம் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.

அவரது உறவினர் அலிஸி தனது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலை நடத்துகிறார். ’பெரில்’ சூறாவளி அவர்களின் நகரத்தைக் கடந்து சென்றபோது ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை அவர் விவரித்தார்.

நீடித்த, கொடுங்காற்று தள்ளித் திறக்காமல் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு எதிராக நாற்காலி, மேசைகளைத் தள்ளி வைக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

"காற்றின் அழுத்தம் மிகவும் தீவிரமாக இருந்தது. அதை எங்கள் காதுகளில் உணர முடிந்தது. மேற்கூரை பிய்த்துக்கொண்டு வேறொரு கட்டடத்தில் சென்று மோதுவதை எங்களால் கேட்க முடிந்தது. ஜன்னல்கள் உடைந்து கட்டடம் முழுவதும் வெள்ளம் நிரம்பியது."

பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,ALIZEE SAILLY

"இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்." இயற்கை விவசாயம் செய்பவரும், தேனீ வளர்ப்பவரும், மீனவருமான செபாஸ்டீனின் இரண்டு பண்ணைகள் மற்றும் அவரது தேன் கூடுகளும் முற்றிலுமாக நாசமாகியுள்ளன.

இருப்பினும் தீவிலுள்ள மக்கள் சமூகங்களின் உடனடி முன்னுரிமை தங்குமிடம்தான் என்று செபாஸ்டீன் தெரிவித்தார். மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க மரம் மற்றும் பிளாஸ்டிக் தாள்களைச் சேகரிக்க முயல்கின்றனர்.

"கூடவே தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

யூனியன் தீவில் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பால் பொடி, சுகாதாரப் பொருட்கள், முதலுதவிப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் வரை பல பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக அலிஸி சைலி கூறினார்.

 

'வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரழிவு'

பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,ALIZEE SAILLY

மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் தொடங்கப்பட்ட ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைவதன் மூலம் செய்திகளை மட்டுமே அவரால் அனுப்ப முடிந்தது.

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் அரசு, அதன் பங்கிற்கு பிரச்னையின் அளவை அங்கீகரிப்பதாகக் கூறுகிறது.

ஒரு காலை உரையில், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதமர் ரால்ஃப் கோன்சால்வ்ஸ் கரீபியன் தேசம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியின் உணர்வைச் சுருக்கமாகக் கூறினார்: "பெரில் சூறாவளி - இந்த ஆபத்தான மற்றும் பேரழிவு சூறாவளி - வந்து போய்விட்டது. அது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. நம் நாடு முழுவதும் வலியையும் துன்பத்தையும் விட்டுச் சென்றுள்ளது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சூறாவளிக்குப் பிந்தைய முன்னுரிமைகளின் நீண்ட பட்டியலைச் சமாளிக்கத் தனது நிர்வாகம் முடிந்தவரை விரைவாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

யூனியன் தீவில் அரசிடம் நிதி, வளங்கள் மற்றும் மனிதவளம் உள்ளதா என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன.

"அவர்கள் எங்களுக்கு உதவ ராணுவத்தையும் கடலோர காவல் படையையும் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் தீவை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று செபாஸ்டின் கூறினார்.

"இதற்கு பல கோடிக்கணக்கான டாலர்கள் தேவைப்படும். கட்டியெழுப்ப ஓராண்டு அல்லது அதற்கும் மேல் எடுக்கும் மற்றும் சர்வதேச உதவி தேவைப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

 
பெரில் சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம்,API

கரீபியன் புலம்பெயர்ந்தோரை தங்களால் இயன்ற விதத்தில் உதவி செய்யுமாறு யூனியன் ஐலண்ட் சுற்றுச்சூழல் கூட்டணியின் இயக்குநரான கத்ரீனா கோய் கேட்டுக் கொண்டார்.

எங்களுக்கு அதிக அளவில் உதவி தேவைப்படுகிறது. எமர்ஜென்சி உபகரணங்கள், உணவு, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, இவை அனைத்தும் இந்த நேரத்தில் தேவை.

பல ஆண்டுகளாக, கரீபியனில் உள்ள சிறிய தீவு சமூகங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமான யூனியன் தீவின் நீர் பாதுகாப்பிற்காக கோய் முக்கியமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பெரில் சூறாவளி காரணமாக அந்தப் பணி முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று அவரது சர்வதேச சகாக்கள் கூறுகிறார்கள்.

பெரில் சூறாவளி திங்களன்று நான்காவது வகை சூறாவளியாக நிலத்தைத் தாக்கியது. 150mph (மணிக்கு 240 கிமீ) வேகத்தில் காற்று வீசியது.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பலர் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், கிரெனடா மற்றும் செயின்ட் லூசியாவில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர்.

தீவின் ஒவ்வோவோர் அங்குலத்திலும் குழப்பம் மற்றும் வீடற்ற நிலைமை உள்ள போதிலும் விஷயங்கள் இதைவிட மோசமாகவில்லை என்பதற்கு செபாஸ்டியன் சைலி கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.

"மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். பொருள் இழப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது," என்றார் அவர்.

"நாங்கள் எதிர்கொண்டு, கடந்து வந்த அந்த சக்தியைப் பார்த்த பிறகு, இன்று என் அண்டைவீட்டார் இன்னும் இங்கே இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c134063d0dlo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Satellite images show lightning in eye of powerful Hurricane Beryl | VOA News

cyclone.jpg

beryl.jpg

Hurricane Beryl batters Jamaica

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதத்துக்கு கொழும்பு கத்தரிக்காய் கனடாவுக்கும் யுரோப்புக்கும் வராது சாரபாம்பு போல் இருக்கும் ஸ்பெயின் கத்தரிக்காய் தான் யுரோப்புக்கு.

ஜமேக்காவில் தோட்டம் தப்பினால் கனடா மக்கள் கத்தரியை காணலாம். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிய அணிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய சுவிஸ்>ஓஸ்ரியா>துருக்கி அணிகள் வெளியேறி விட்டன. முதல்சுற்றுக்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்ததாத இங்கிலாந்து .பிரான்ஸ்.கொலண்ட் ஸ்பானிய அணிகள் உள்ளே வந்து விட்டன.
    • "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03 [காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்]   இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள் இரண்டையும் கிழே பார்ப்போம்.     ”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது?”     வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது? தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய் தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய் துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய் துதைது – அடுத்த பூவுக்குச் சென்று அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய் தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?     "காக்கைகா காகூகை, கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க — கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா"     காக்கைக்கு -காக்காவிற்கு ஆகா கூகை -ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது. கோக்கு -கோ என்றால் அரசன். கூ -பூமி, அவன் நாடு, காக்கை - காப்பது அரசாள்வது கொக்கொக்க -கொக்கைப் போன்று கைக் கை - விரோதிகளை வென்று கா - காப்பது.     இதை ஒரு ஒழுங்கில் சொன்னால், காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. இரண்டிற்கும் நட்பு கிடையாது. காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும்.   ஒரு அரசனுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும். மீன்களை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து, அவனை வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்பது இதன் பொருள் ஆகும்.        
    • அந்தப் போட்டித் தொடரில் பிரேசிலை பிரேசில் மண்ணிலேயே  7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவைத்து எடுத்தவர்கள். அந்த உலகக் கோப்பையை வென்ற பின்னர். சின்ன சின்ன அணிகளிடம் அடிவாங்குகிறார்கள். முன்பெல்லாம் அதிக தடைவைகள் உலகக் கோப்பையிலும் சரி ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளிலும் சரி அதிக தடைகைைள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்றால் அது ஜேர்மன் அணிதான். தற்போதையை அணியை அடியோடு மாற்ற வேண்டும்.   விளையாட்டில் கோல்களை அடிக்க வேண்டும். அதுலவும் ஸ்பானியா நேரத்தோடு கோல் போட்டிருந்த நிலையில் கடைசி நிமிடம் வரைக்கும் கோல்கள் போடாது இழுத்தடித்தது பெரும்பிழை.  பரீட்சைக்கு முதலே படித்து ஆயத்தமாகாமல் கடைசிநாள் பஸ்சுக்குள் படித்து சோதனை எழுதின மாதிரித்தான் இதுவும். மேலதிக நேரத்தில் ஸ்பானியாவைpன் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.
    • திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்களாக நான்கு விடயங்களை பாலசிங்கம் தனது புத்தகமான போரும் சமாதானமும் என்பதில் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது காரணம் இந்திய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரி. "இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்த அடிப்படை அறிவினை அவர் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் இரண்டிலும் நிலவிவரும் வேறுபட்ட நிலைப்பாடுகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அறிவும் அவரிடம் இருக்கவில்லை. சிக்கலானதும் , கடிணமானதுமான இனச்சிக்கலுக்கு உடனடியான இலகுத் தீர்வுகளை வழங்கமுடியும் என்று அவர் பொறுப்பற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார்" என்று பாலசிங்கம் கூறுகிறார். பண்டாரி தொடர்பான தொண்டைமானின் அவதானிப்பும் இதனையே கூறியிருந்தது. நான் முன்னர் கூறியதுபோல, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து ரொமேஷ் பண்டாரிக்கு அடிப்படை அறிவெதுவும் கிடையாது என்று தொண்டைமான் என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். பேச்சுக்களின் தோல்விக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது இந்திய உளவுத்துறையும், அதிகாரிகளும் ஆகும். தமிழ்ப் போராளிகளுடனான அவர்களின் தொடர்பாடல்களின்போது ஆண்டான் -  அடிமை மனநிலையே அவர்களிடம் காணப்பட்டது. "நாம் சொல்வதன்படி கேட்டு நடவுங்கள், அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்" என்பதே அவர்களின் எச்சரிக்கையாக இருந்து வந்தது. அவர்கள் வெளிப்படையாகவே இந்திய நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்ததை தமது செயற்பாடுகளில் காட்டிவந்தார்கள் . தமிழர்களின் நலன்கள் குறித்த சிறிதளவு கரிசணையும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மூன்றாவது காரணம் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட முறை. பேச்சுவார்த்தையில் ஜெயவர்த்தன கலந்துகொண்டதன் ஒற்றை நோக்கமே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டிருக்கிறேன், ஆனால் தமிழர்கள்தான் விட்டுக்கொடுப்பின்றிப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று உலகிற்கும், இந்தியாவிற்கும் காட்டுவதுதான். பேச்சுவார்த்தைக்காக தான் தேர்ந்தெடுத்த சிங்களப் பிரதிநிதிகள், அப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் காட்டிய கடும்போக்கு, பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த தீர்வு ஆகியன‌ சர்வதேச சமூகத்தினை ஏமாற்றி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிட ஏதுவான களநிலையினை உருவாக்கிக் கொள்வதற்காக அவர் ஏற்படுத்திய நாடகம் என்றால் அது மிகையில்லை. இவற்றுள் மிகவும் முக்கியமான காரணி என்னவெனில் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமக்கென்று தனியான இலட்சியம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், அவ்விலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையும் இந்தியாவும், இலங்கையும் உணரத் தவறியமைதான். தனது தேசிய நலன்களுக்காக பேச்சுவார்த்தையினையும், போராளிகளையும் இந்தியா பாவிக்க விரும்பியது. இந்தியாவிற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் பகைமையினை உருவாக்கி, அதன்மூலம் தமிழர்களின் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிட இப்பேச்சுவார்த்தை நாடகத்தை இலங்கையரசு பாவிக்க விரும்பியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த போதிலும், தமிழீழ விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் அது முக்கியமான திருப்புமுனையாக மாறியது. முதன்முறையாக இந்தியாவும், இலங்கையும் தமிழீழ மக்களின் அரசியல்த் தலைமைத்துவம் ஜனநாயக அரசியல்வாதிகளிடமிருந்து போராளித் தலைமைகளுக்கு மாறியிருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தன. மேலும், ஆயுதப் போராட்டத்தினையும் மறைமுகமாக அவை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்த அங்கீகாரத்தின் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தன்மை உருவாக வழியேற்படுத்தப்பட்டிருந்தது. அடுத்ததாக, திம்புப் பேச்சுக்களின் ஊடாக, தமிழீழத்திற்கு மாற்றான தீர்விற்கான அடிப்படைகள் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தன.  இறுதியாக, தமிழ் மக்களின் எந்தத் தீர்விலும் பிரபாகரனே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்கிற நிலையினையும் இப்பேசுவார்த்தைகள் ஏற்படுத்தியிருந்தன.
    • தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவில்லை. நடைபெறும் தவறுகளைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத்தான் என்னால் பார்க்க முடிகிறது.  சைவ சமயத்தை முன் நிறுத்தி  மற்றவர்களை முட்டாள்களாக்கும் செயல்களைத்தான் எதிர்க்கிறார்கள். நேற்றுக் கூட ஒரு செய்தி வாசித்தேன். “கைத்தொலைபேசி, சமூக ஊடகங்களைப் பார்த்து உங்கள் கண்களில் கர்மா நிறைந்திருக்கும். உங்கள் கண்களின் கர்மாவைப் போக்க, தங்கத் தேர் இழுத்து, அதைப் பாருங்கள். கர்மா நீங்கி விடும்.  ஆலய நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது” இப்படியான மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தப்பில்லைத்தானே.   சரி விடயத்துக்கு வருகிறேன் இல்லத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கிப்  பொருத்தப்பட்ட கமரா ஒரு நிகழ்வு, தராதரமற்ற நிலையில் இயங்கிய சிறுவர் இல்லங்களை மூட வேண்டும் என்பது இரண்டாவது செய்தி. நீங்கள் இரண்டையும் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள். அல்லது யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள். கமரா விடயம் நீதிமன்றம்வரை போய் விட்டது. அங்கேதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடாத்துவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. அங்கே ஏதாவது நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள் இருந்தால், பதில் சொல்ல வேண்டியவர் அதன் பொறுப்பாளர். “எனக்கு ஏதும் தெரியாது. யாரோ விசமிகள் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போக முடியாது.  “தவறு ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. உரிய நடவடிக்கைகள் எடுத்து, இனி வரும் காலங்களில் இப்படியான தரக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது பார்த்துக் கொள்கிறோம்” என்பதுபோல் அறிக்கை விட்டு  ஆவன செய்திருந்தால் பிரச்சனை முடிந்துவிடப் போகின்றது. அதை விடுத்து ‘அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. அது நாங்கள் இல்லை. நாங்கள் இவரின் வாரிசுகள். பலகாலங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’  என்ற பாணியில் நிற்பது ஒரு நிறுவனத்திற்கோ, அதன் பொறுப்பாளருக்கோ அழகல்ல. ‘நான் நல்லவன். அப்பழுக்கற்றவன். நான் இவரது வாரிசு’ என்று சொல்வது எல்லாம் ஒருவர் தனது ஒழுக்கங்களுக்கு மேலாகப் போட்டுக் கொள்ளும் போர்வைகள்.   ‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ….’ என்று சுண்டல் எழுதி இருந்தார். இந்த இரண்டு வரிகளுக்குப் பின்னால் கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார். ‘காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால் கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மன சாட்சி…’   சமூகத்தில் ஒரு தவறான பிரச்சனை நடந்தால், தட்டிக் கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்க் குரலாவது கொடுக்கலாம். அதுதான் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் உரமாக இருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.