Jump to content

"தமிழுடன் ஒரு விளையாட்டு"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01
 
 
கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையாடினாள். இப்போ அந்த தமிழுடன் ஒரு விளையாட்டை முழுமையாகப் பார்ப்போம்.
 
 
அவன்: "ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?"
 
அவள்: "பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே"
 
அவன்: "நான் எப்போது வரட்டும்?"
 
அவள்: "இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்...."
 
ஒரு மரம் ஏறி - மரத்தாலான பாதுகையில் (செருப்பில்) ஏறி
 
ஒரு மரம் பூசி - சந்தன மரக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் மர சாந்தை / சந்தனத்தை மேலே பூசி
 
ஒரு மரம் பிடித்து - (முதியவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
 
ஒரு மரம் வீசி - பனைமரத்தின் மட்டையாலான விசிறியை
(கையில் பிடித்து) வீசிக்கொண்டு போகிறவனின்
பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான். அதை அவள் புரிந்து கொண்டு
 
‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர்
வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்
நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும்
அருகில்’ என்று கூறுகிறாள்.
 
அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் மரத்தால் செய்த கதவைச் சாத்தும் போது கதவும் மரத்தால் செய்த நிலையும் சேர்ந்து விடும், அந்தச்சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
 
எப்படி இருக்கிறது இந்த தமிழின் விளையாட்டு ??
No photo description available.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 02
[பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல்]
 
 
பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல் ஒன்றில் பதினொரு முறை 'மரம்' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது. ஒவ் வொருமுறையும் வெவ்வேறு மரத்தைக் குறிப்பதாக அமைந்து பொருள்படுகிறது. மரங்களைக் கொண்டு மன்னனின் வீரத்தையும், மகளிர் அவன் மேல் கொண்டுள்ள மதிப்பையும் விளக்குகிறார் சுந்தரகவிராயர். இவரது காலம், இடம் போன்ற வரலாற்று குறிப்புகள் ஒன்றும் அறியப்படவில்லை.
 
 
"மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து,
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது,
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்"
 
["The king climb on a horse carrying a spear on his shoulder
The king show a tiger - stab the tiger with spear and
The king went away, while return towards Palace
women show the king,they perform "Aalathi" to him "]
 
மரமது - அரச மரம் / peepal tree = (அரசு / KING)
மரத்திலேறி - மா மரம் / mango tree = மா என்பது குதிரை / HORSE
மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் = வேப்ப மரம் / margosa or neem tree = (வேல் / SPEAR){ஆலும் வேலும் பல்லுக்குறுதி}
மரத்தைக் கண்டு - வேங்கை மரம் / indian kimo tree, வேங்கை = புலி / tiger
மரமுடன் - ஆலமரம் / banyan tree
மரமெடுத்தார் - அத்தி மரம் / fig tree
 
Hence ஆல + அத்தி = ஆலத்தி, ie Aal + Athi = Aalathi
 
 
அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் ஒரு வேங்கைப் புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்த வழியே திரும்ம்பி தனது அரண் மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றி வீரனாகத் திரும்பி வரும் மன்னனைக் கண்ட  மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி [ஆரத்தி] எடுத்து வரவேற்றனர் என்கிறது இந்த பாடல்.
12495216_10205701274833911_8707049302725736263_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=yhbs3RdrLl4Q7kNvgExaheV&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAjhpDTSUmeXgtoLhrnbW3Y15XTWIyqlEhNTkNaNHYsAQ&oe=66AF41ED 12540884_10205701275553929_7755729338933900363_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=7Aohe6P7MakQ7kNvgHTl7zi&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDlzaIvSGjPsfUCBkLzwMUEkXPtIZ7oPcOd8aXU2zf5jA&oe=66AF2D58 12509776_10205701276073942_6082119982880061300_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=3xOGmngISxcQ7kNvgFHyM5D&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDDgQPDRYbvuoWiJK6lNhGD1W3JUZTClnsEgHt9izWOtg&oe=66AF4AAF
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • நியானி changed the title to "தமிழுடன் ஒரு விளையாட்டு"


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.